May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

தி.மு.க. எம்.எல்.ஏ. பூங்கோதை தற்கொலை முயற்சி?

1 min read

DMK MLA Gardener attempted suicide?

19/11/2020

ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ. பூங்கோதை ஆலடி அருணா அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை தின்று தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

பூங்கோதை

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் டாக்டர் பூங்கோதை. இவர் மறைந்த அமைச்சர் ஆலடி அருணாவின் மகள்.
கடந்த 2006 முதல் 2011-ம் ஆண்டு வரை திமுக அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்தார்.

இந்தநிலையில் இன்று(வியாழக்கிழமை) காலை அவர் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை தின்று மயங்கியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் நெல்லை மேம்பாலம் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

உட்கட்சி பூசல் காரணமாக அவர் அதிகமாக தூக்க மாத்திரை தின்றதாக கூறப்படுகிறது. நேற்று ( புதன்கிழமை) தென்காசி மாவட்டம் கடையம் பொட்டல் புதூரில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் பூங்கோதையை ஒருவர் ஏதோ பேசியதாகவும் அவருக்கு பேச அனுமதி அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்து அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் டாக்டர் பூங்கோதை எம்.எல்.ஏ. தரப்பில் கூறும்போது, வழக்கமான பரிசோதனைக்குத்தான் ஆஸ்பத்திரியில் அவர் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்றும் கட்சியிலுள்ள சிலர்தான்தான் இதுபோன்று அவதூறு பரப்பி வருகிறார்கள் என்றும் கூறினார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.