சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
1 min readThe young man who married the girl was arrested under the Pokcho Act
19/11/2020
சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருமணம்
தென்காசி மாவட்டம் சிவகிரி அம்பேத்கர் தெற்குத் தெருவைச் சேர்ந்த ராஜா (வயது20). இவர் 16 வயது சிறுமியை காதலித்து, கடந்த 27.9.2020 அன்று திருமணம் செய்து கொண்டார் அந்த சிறுமி தற்போது 3 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதுபற்றிய தகவல் அறிந்து சமூக நல விரிவாக்க நல அலுவலர் குருபாக்கியம் சிவகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கோவிந்தன், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து ராஜாவை கைது செய்து சிவகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார். நீதிபதி அவரை 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.