May 16, 2024

Seithi Saral

Tamil News Channel

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்கியதில் 2 வீரர்கள் மரணம்

1 min read

2 soldiers killed in terrorist attack in Kashmir

26/11/2020

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 2 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் பதுங்கி இருக்கும் பங்கரவாதிகளை வேட்டையாட பாதுகாப்பு படையினர் கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள். ஸ்ரீநகரில் உள்ள பரிம்புரா பகுதியில் இன்று பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த 3 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து திடீர் தாக்குதல் நடத்தி விட்டு அப்பகுதியை விட்டு தப்பிச்சென்றனர்.

2 பேர் மரணம்

பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 2 பேர் வீரமரணமடைந்தனர். இதையடுத்து, தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்ற பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த தாக்குதலில் ஈடுபட்டது ஜேஷ் – இ – முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் என்றும், அவர்களில் 2 பேர் பாகிஸ்தானையை எஞ்சிய 1 பயங்கரவாதி உள்ளூர் பகுதியை சேர்ந்தவனாக இருக்கலாம் என்றும் காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி. விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.