May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

மாப்பிள்ளை ஓட்டம்-திருமணம் நின்றது

1 min read

Groom Disappearance -Marriage stopped

27/11/2020
நாகர்கோவிலில் மாப்பிள்ளை ஓட்டம் பிடித்ததால் திருமணம் நின்று போனது. இதனால் மணமகள் அதிர்ச்சி அடைந்தார்.

திருமண நிச்சயம்

நாகர்கோவில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மெக்கானிக் ஒருவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும், பெண் என்ஜினீயருக்கும் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது.

டிசம்பர் 26-ந் தேதி (நேற்று/ வியாழக்கிழமை) திருமணத்தை நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. இதனை அடத்து இருவீட்டாரும் திரும ஏற்பாடுகளை செய்தனர். உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.

மாப்பிள்ளை மாயம்

நேற்றுமுன்தினம் சம்பிரதாயப்படி திருமணத்துக்கு முந்தைய சடங்குகள் நடந்தன. மணமகள் வீட்டின் சார்வில் விருந்தும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மணமகனும் பங்கேற்றார்.

அதன்பின்னர் மாப்பிள்ளை வெளியே சென்று வருவதாக கூறி வீட்டை விட்டு சென்றார். அதன்பின் அவர் வரவே இல்லை. வெகுநேரமாகியும் வராததால், பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். மாப்பிள்ளை வீட்டாரும், என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர்.

அதன்பிறகு தான், திருமணம் பிடிக்காமல் மாப்பிள்ளை ஓட்டம் பிடித்தது தெரிய வந்தது. இதனால் மணப்பெண் அதிர்ச்சி அடைந்தார்.

மாப்பிள்ளையின் இந்த திடீர் முடிவால் நேற்று நடக்க இருந்த திருமணமும் நின்று போனது. பெண் வீட்டார் தரப்பில் போலீசிடம் புகார் ஏதும் கொடுக்கவில்லை.

மாப்பிளளை வேறு ஒரு பெண்ணை காதலித்ததாகவும், அவரை திருமணம் செய்வதற்காகத்தான், திருமண நேரத்தில் ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இப்படி பல வீடுகளில் நடக்கிறது. சில வீடுகளில் மணப்பெண்ணே மண மேடைக்கு வந்த பின்னர் திருமணத்தை நிறுத்திய சம்பவமும் உண்டு.
பெற்றோரை வேதனைப்படுத்தும் அவமானப்படுத்தும் இந்த செயலில் பிள்ளைகள் ஈடுபடக்கூடாது. திருமண பேச்சை ஆரம்பிக்கும்போதே திட்டவட்டமாக கூறி தடுப்பதுதான் நல்லது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.