மருத்துவ மேல்படிப்புக்கு அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு இல்லை
1 min readThere is no 50 per cent reservation for government doctors for medical overlay
27/11/2020
மருத்துவ மேல்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.
50 சதவீத இடஒதுக்கீடு
சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ மேற்படிப்புகளில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தமிழக அரசு பிறப்பித்த ஆணையை சென்னை ஐகோர்ட்டு உறுதி செய்தது. இந்த உத்தரவுக்கு எதிராக ஒடிசா, தமிழகம், உத்தரபிரதேசம், கர்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 13 டாக்டர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீடு மனுவை நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
இந்த வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது.அந்த மனுவில் “தமிழக அரசு, முதுகலை படிப்பில் அரசு டாக்டர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள 50 சதவீத இட ஒதுக்கீடு அனைத்து பிரிவினருக்குமானது, குறிப்பிட்ட பிரிவினருக்கானது இல்லை. இந்த விவகாரம் தமிழக அரசின் கொள்கை முடிவு சார்ந்தது.
சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பின்படி இந்த 50 சதவீத இடங்கள் அரசு டாக்டர்களுக்கு ஒதுக்கப்பட்டது” என்று கூறப்பட்டிருந்தது.
இந்த ஆண்டு இல்லை
இந்த வழக்கின் வாதங்கள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு இந்த ஆண்டு இல்லை என்று நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு உத்தரவிட்டது.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பால் 25 கல்லூரிகளில் 584 இடங்கள் ஒதுக்கீடு இந்த ஆண்டு வழங்கப்படாது.