தமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா
1 min readCorona for 1,430 people in Tamil Nadu today
28/11/2020
தமிழகத்தில் இன்று 1,430 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
கொரோனா
தமிழகத்தில் கொரோனா நிலவரத்தை தினமும் மாலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று(சனிக்கிழமை) 1,430 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொதத்த எண்ணிக்கை 7 லட்சத்து 79 ஆயிரத்து 46 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 11, 073 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
டிஸ்சார்ஜ்
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,453 பேர் கொரேனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 56 ஆயிரத்து 279 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 13 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 694 ஆக அதிகரித்துள்ளது.