தேவாரம் கிடைத்த வரலாறு
1 min read
Rajaraja Chola rescues Thevaram
29/11/2020
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் (அப்பர்), சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) ஆகிய மூவரும் பாடிய பதிகங்கள்தான் தேவாரம்.
இந்த தேவாரம் பதியப்பெற்ற ஏடுகள் அனைத்தும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒரு தனி அறையில் பூட்டி வைக்கப்பட்டு இருந்தன. அக்கோவில் சிவாச்சாரியார்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்கள் தேவாரம் ஏடுகளை எடுக்க அனுமதி மறுத்தனர். அதாவது தேவாரம் பாடிய மூவரும் நேரில் வந்தால்தான் அதை எடுக்க அனுமதிப்போம் என்று கூறினார்.
தஞ்சையை ராஜராஜ சோழன் ஆண்டபோது தேவாரம் பாடிய மூவரின் சிலையோடு கோவிலுக்குச் சென்று ஏடுகளை மீட்க முயற்சி செய்தார். அதற்கு சிவாச்சாரியார்கள் மூவரும் நேரில் வரவேண்டும் என்று கூற… மன்னனோ, கருவரையில் இருப்பது சிலையா அல்லது சிவனா என்று கேள்வி எழுப்பினார். அது சிலை என்றால் இந்த மூவரும் சிலை. கோவிலில் இருப்பது சிவன் என்றால் இவர்களும் தேவாரம் பாடியவர்கள்தான் என்று வாதிட்டார். அதன்பின்னரே ஏடுகள் மீட்கப்பட்டன. அப்போது பல ஏடுகள் கரையானுக்கு இரையாகின. மீதமுள்ள பாடல்ககள் தொகுக்கப்பட்டு தேவாரம் ஆனது.
மூவரும் பாடிய தலங்கள் — 44
சம்பந்தரும், திருநாவுக்கரசரும் பாடிய தலங்கள்- 523
திருஞான சம்பந்தரும், சுந்தரரும் பாடிய தலங்கள்- 134
அப்பரும், சுந்தரரும் பாடிய தலங்கள்- 275
திருஞான சம்பந்தர் மட்டும் பாடிய தலங்கள் – 1116
அப்பர் மட்டும் பாடிய தல
மொத்தம் -275
திருவாசனம் எழுதிய
மாணிக்கவாசகர் பாடிய தலங்கள்- 25