April 26, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,410 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 1,410 people in Tamil Nadu today

30/11/2020

தமிழகத்தில் இன்று 1,410 பேருக்கு கொரோனா கண்டறிப்பட்டுள்ளது.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா நிலவரம் பற்றி மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

தமிழகத்தில் இன்று( திங்கட்கிழமை) மட்டும் 1,410 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் ஒருவர் மட்டும் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்.
இதில் சென்னையில் மட்டும் 385 பேருக்கு இன்று கொரோனா கண்டறியப்பட்டது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இன்று 1,456 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன் மூலம் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7,57,750-ல் இருந்து 7,59,206 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது தமிழகத்தில் 10,997 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சாவு

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று 9 பேர் உயிரிழந்தனர். இதில் 6 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும் 3 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆவர்.

இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11,712 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை கொரோனாவுக்கு 3,850 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் இன்று 62,616 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை 1,20,60,001 மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 62,131 பேருக்கும், இதுவரை 1,17,69,369 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 7,80,505 லிருந்து 7,81,915 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 2,14,940 லிருந்து 2,15,360 ஆக உயர்ந்துள்ளது.

மேற்கண்ட தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.