இந்தியாவில் நேற்று 36,652 பேருக்கு கொரோனா
1 min readCorona to 36,652 people in India yesterday
5/12/2020
இந்தியாவில் நேற்று 36,652 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் கொரோனா இன்னும் முழுமையாக கட்டுப்படவில்லை என்றாலும் ஓரளவு குறைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினமும் 40 ஆயிரத்துக்கும் குறைவாகவே கொரோன கண்டறியப்பட்டு வருகிறது.
நேற்றைய கொரோனா நிலவரம் பற்றி இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
36,652 பேர்
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று மட்டும் 36,652 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.
இவர்களையும் சேர்த்து இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 96,08,211 ஆக உள்ளது.
நேறறு ஒரே நாளில் 512 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,39,700 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று மட்டும் 42,533 பேர் குணமடைந்துள்ளனர். மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 90,58,822 ஆக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதிலும் தற்போது பல்வேறு ஆஸ்பத்திரிகளில் 4,09,689 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கொரோனாவை கண்டறிவதற்காக நேற்று வரை 14,58,85,512 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 11,57,763 சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளது.