May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

1 min read

Chance of heavy rain in 4 districts of Tamil Nadu

6/12/2020

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்ற வானிலை ஆய்வு மையம் அறவித்துள்ளது.

புரெவி புயல்

வங்கக் கடலில் உருவான புரெவி புயல் மன்னார் வளைகுடால் வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி அதே இடத்தில் நிலை கொண்டு உள்ளது. இதனால் கடலூர் உள்பட பல மாவட்டங்களில் கன மழை பெய்தது. தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

4 மாவட்டங்கள்

இந்த நிலையில் தமிழகத்தில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை தொடரும். மேலும் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன் படி சிவகங்கை, விருதுநகர், தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னை, புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அடுத்த இரு தினங்களுக்கு நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும்.

தமிழகத்தில் நேற்று அதிகமாக முத்துப்பேட்டையில் 10 செ.மீ மழையும், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 7 செ.மீ மழையும் பெய்துள்ளது.
மீனவர்கள் யாரும் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.