May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 1,320 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 1,320 people in Tamil Nadu today

6/12/2020

தமிழகத்தில் இன்று 1,320 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

கொரோனா

தமிழகத்தில் கொரோனா நிலவரத்தை தினமும் மாலையில் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு-

தமிழகத்தில் இன்று ( ஞாயிற்றுக்கிழமை) 1,320 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,90,240 ஆக உயர்ந்துள்ளது.

16 பேர் சாவு

தமிழகத்தில் இன்று 16 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களில் 5 பேர் அரசு ஆஸ்பத்திரிகளிலும், 11 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆவர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,793 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 1,398 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,67,659 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகம் முழுவதும் 10,788 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

சென்னையில்

சென்னையில் மட்டும் இன்று 346 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,17,542 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 3,875 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.

மேற்கண்ட தகவல்களை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 70,765 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 1,24,76,093 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.