May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

பாவத்தைப் போக்கும் தேன்

1 min read

Fasting with honey to get rid of sin

7/12/2020
பாவம் செய்யாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இதில் அறியாமல் பாவம் செய்பவர்களே அதிகம். அறிந்து பாவம் செய்பவர்கள் திருந்தி அதற்கான பரிகாரத்தை செய்து கொண்டால் நல்லது.
அப்படி திருந்தியவர்கள் அறியாமல் பாவம் செய்தவர்கள் தங்கள் பாவத்தை போக்க தேன் மிகவும் உறுதுணையாக இருக்கிறது.

தேன் ஒரு சத்தான உணவு. சித்த வைத்தியதில் பெரும்பாலான மருந்தை சாப்பிடும்போது தேன் கலந்து சாப்பிடச் சொல்வார்கள். தேனானது பக்க விளைவுகளை தடுக்கும் வல்லமைக் கொண்டது. அதேபோல் பரிகாரத்திலும் தேன் முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படிப்பட்ட தேன் பாவத்தை போக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.
ஐப்பசி அமாவாசைக்குப்பிறகு பவுர்ணமியை அடுத்து வரும் தேய்பிறை அஷ்டமி நாளில் தேனை மட்டும் சாப்பிட்டு சிவனை நோக்கி விரதம் இருக்க வேண்டும். மறுநாள் காலையிலும் சிவன் கோவிலுக்குச் சென்று வழிபடவேண்டும். இப்படி செய்தால் நாம் செய்த பாவம் விலகி நற்கதி அடையலாம்.
இந்த ஆண்டு இந்த சிறப்புக்குரிய நாள் 8-12-2020 செவ்வாய்க்கிழமை வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.