தமிழகத்தில் இன்று புதிதாக 1,232 பேருக்கு கொரோனா தொற்று: 14 பேர் பலி
1 min readCorona infection kills 1,232 new people in Tamil Nadu today: 14 killed
9/12/2020
தமிழகத்தில் இன்று 1,232 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று 14 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா பற்றிய விவரங்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (புதன் கிழமை) 1,232 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 94 ஆயிரத்து 020 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதித்தவர்களில் இன்று 1,315 பேர் சிகிச்சைக்கு பின் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7 லட்சத்து 71 ஆயிரத்து 693 ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் தமிழகத்தில் 14 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.
இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 836 ஆக அதிகரித்துள்ளது.