June 8, 2026

Seithi Saral

Tamil News Channel

சம்பளம் சரியாக கொடுக்காததால் ஐபோன் தயாரிப்பு நிறுவனத்துக்கு தீவைத்த ஊழியர்கள்

1 min read

Employees who set fire to the iPhone manufacturing company for not paying salaries properly

12/12/2020

சம்பளம் சரியாக கொடுக்காததால் பெங்களூருவில் உள்ள ஐபோன் தயாரிப்பு நிறுவனத்திற்கு அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களே தீவைத்தனர்.

ஐபோன் தயாரிப்பு நிறுவனம்

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோலார் மாவட்டத்தின் நரசபுரா பகுதியில் தைவான் நாட்டை சேர்ந்த விஸ்ட்ரான் நிறுவனத்தின் தொழிற்சாலை அமைந்துள்ளது.

இந்த தொழிற்சாலை ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஐபோன் மட்டுமல்லாமல் வேறுசில முன்னனி தொழில்நுட்ப நிறுவனங்களில் உபகரணங்களும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இதற்கிடையில், விஸ்ட்ரான் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் சரிவர வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது சிலருக்கு 3 மாத சம்பளம் வழங்கவில்லை என்றும் மற்றும் சிலருக்கு 6 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை என்றும் புகார் சொல்லப்பட்டது.

போராட்டம்

இன்றும் சிலர் சம்பளம் பெற்றாலும் உரிய காலத்தில் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறுகிறார்கள். இன்னும் சிலர் ஒப்பந்தபடி சம்பவளம் வழங்காமல் குறைத்து கொடுக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினர்.

இதுதவிர 8 மணி நேரம் வேலை பார்த்தவந்த அவர்களை தினமும் கூடுதலாக 4 மணிநேரம் சேர்த்து மொத்தம் 12 மணிநேரம் வேலைவாங்கினார்களாம்.

 இந்த புகார்கள் குறித்து விஸ்ட்ரான் நிறுவனத்திடம் தொழிற்சங்கங்கள் பலகட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால் அவை அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

தீவைப்பு

இந்த நிலையில் விஸ்ட்ரான் நிறுவன ஊழியர்கள் இன்று(சனிக்கிழமை) காலை திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் விஸ்ட்ரான் நிறுவனத்தினுள் அதிரடியாக புகுந்து கண்ணில் பட்டவற்றையெல்லாம் அடித்து நொறுக்கினார்.  அங்கு இருந்த கம்ப்யூட்டர், கதவுகள், டிவி உள்பட அனைத்தையும் சேதப்படுத்தினர். நிறுவனத்தின் வாகனங்களுக்கும் தீவைத்து கொளுத்தப்பட்டன.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசாரும், தீயணைப்பு துறையினரும் விரைந்து சென்று பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும், இந்த வன்முறை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் வன்முறையில் ஈடுபட்டதாக விஸ்ட்ரான் நிறுவனத்தை சேர்ந்த 100-க்கும் அதிகமானோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐபோன் தயாரிப்பு தொழிற்சாலையில் ஊழியர்களே வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *