May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரே நாளில் 22,890 பேருக்க கொரோனா

1 min read

Corona for 22,890 people in a single day in India

18/12/2020

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 22,890 பேருக்கு கொரோனா தொற்று கண்டயிறப்பட்டு உள்ளது.

இந்தியாவில் கொரோனா

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்குநாள் குறைந்து வருகிறது. அதன் வீரியமும் தணிந்து வருகிறது. அதேபோல் கொரோனாவில் இருந்து குணமடைவோரின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
கொரோனா நிலவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் தினமும் காலையில் வெளியிட்டு வருகிறது. அதன்படி இன்று காலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று ஒரே நாளில் 22,890 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

இந்தியா இதுவரை மொத்தம் 99 லட்சத்து 79 ஆயிரத்து 447 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
நேற்று மட்டும் இந்தியாவில் 338 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து நாடு முழுவதும் இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 44 ஆயிரத்து 789 ஆக உயர்ந்துள்ளது.

அதேநேரம் நேற்று மட்டும் நாடு முழுவதும் 31 ஆயிரத்து 87 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் ஆனார்கள். இவர்களையும் சேர்த்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 95 லட்சத்து 20 ஆயிரத்து 827 ஆக உயர்ந்திருக்கிறது.

இன்று காலை நிலவரப்படி வெறும் 3 லட்சத்து 13 ஆயிரத்து 831 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல் படி டிசம்பா் 17-ஆம் தேதி வரை 15,89,18,646 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் நேற்று மட்டும் 11,13,406 பரிசோதனைகள் நடத்தப்பட்டன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.