தடையை மீறி போராட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின் உள்பட 1,600 பேர் மீது வழக்குப்பதிவு
1 min readProsecution of 1,600 people, including MK Stalin, for violating the ban
18/12/2020
சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்திய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 1,600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உண்ணாவிரதம்
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் திட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா மாநில விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராடத்திற்கு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
வழக்குப்பதிவு
ஆனாலும் தடையை மீறி இன்று உண்ணாவிரதம் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று தடையை மீறி போராட்டம் நடந்தது.
தடையை மீறி போராட்டம் நடத்தியதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்பட 1,600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சட்டவிரோதமாக கூடுதல், அரசின் உத்தரவை மீறுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.