தமிழகத்தில் இன்று 1,134 பேருக்கு கொரோனா
1 min readCorona for 1,134 people in Tamil Nadu today
18/12/2020
தமிழகத்தில் இன்று 1,134 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோன
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இன்று மேலும் குறைந்தது.
தமிழகத்தில் கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை இன்று மாலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) 1,134 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்ப்பட்டு உள்ளது. அதே நேரம் இன்று மட்டும் 1,170 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 12 பேர் கொரேனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 4 ஆயிரத்து 650- ஆக உள்ளது. இதுவரை கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 82 ஆயிரத்து 915 ஆக உள்ளது. இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 11,954 ஆக உள்ளது.
தற்போது தமிழகத்தில் கொரோனாவுக்குசிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 9,781 ஆக உள்ளது.
சென்னையில்….
சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
சென்னையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 2,21,244 ஆக உள்ளது. தற்போது 3,054 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வருமாறு:-
கோடம்பாக்கம் – 341
அண்ணா நகர் – 356
தேனாம்பேட்டை – 289
தண்டையார்பேட்டை – 118
ராயபுரம் – 172
அடையாறு- 444
திரு.வி.க. நகர்- 251
வளசரவாக்கம்- 205
அம்பத்தூர்- 236
திருவொற்றியூர்- 48
மாதவரம்- 105
ஆலந்தூர்- 186
பெருங்குடி- 132
சோழிங்கநல்லூர்- 67
மணலி – 53