May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

சென்னையில் பூனைக்கு வளைகாப்பு

1 min read

Baby shower for cats in Chennai

30-12-2020

சென்னையில் ஒரு குடும்பத்தினர் பூனைக்கு சீர்வரிசைகளுடன் வளைகாப்பு நடத்தினர்.

பூனைக்கு வளைகாப்பு

சென்னை திருவேற்காட்டை சேர்ந்தவர் ஜோதி குமார். இவர் தனது வீட்டில் நாய் மற்றும் பூனைகளை செல்லமாக வளர்த்து வருகிறார். இவர் வளர்க்கும் பூனை ஒன்று சினையானது. அது குட்டி போடும் நிலையில் இருப்பதை உணர்ந்த அவர், அதற்கு வளைகாப்பு நடத்த திட்டமிட்டார்.

இதையடுத்து கருவுற்றிருக்கும் பெண்களுக்கு வளைகாப்பு செய்வது போன்று பூனைக்கும் வளைகாப்பு நடத்தினார்கள். அந்தப் பூனையை பெண்ணுக்கு அலங்காரம் செய்வது போல் அலங்கரித்தனா. பின்னர் அதன் முன்பு வரிசையாக தட்டுகள் வைத்தனர். மேலும் 7 விதமான உணவுகள் மற்றும் பூனைக்கு பிரியமான நண்டு, மீன், இறால் உள்ளிட்ட அசைவ உணவுகளையும் வைத்து நாற்காலியில் அந்த பூனையை அமரவைத்தனர்.

பின்னர், பிரத்யேகமாக அமைக்கப்பட்ட வளையல்களை பூனைக்கு கால்களில் அணிந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு உறவினர்களை அழைத்து இருந்தனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலாக வருகிறது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.