இந்தியாவில் மொத்தம் 20 பேருக்கு உருமாறிய கொரோனா
1 min readCorona transformed into a total of 20 people in India
30-12-2020
இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்தவர்களில் இதுவரை மொத்தம் 20 பேருக்கு உருமாறிய கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
உருமாறிய கொரோனா
நாடு முழுவதும் பரவியுள்ள கொரோனா உருமாறிய கொரோனாவாக இங்கிலாந்து நாட்டில் பரவி வருகிறது. இது அதிவேகமாக பரவும் தன்மை கொண்டது. அங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கும் அது பரவுகிறது. இதனால் இந்தியா உள்பட பல நாடுகள் இங்கிலாந்து நாட்டில் இருந்து விமான போக்குவரத்தை தடை செய்துள்ளது.
ஆனாலும் இதற்கு முன்பு இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களுக்கு அந்த உருமாறிய கொரோனா வந்திருக்கலாம் என்ற அச்சத்தில் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அப்படி பரிசோதனை செய்ததில் 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு உருமாறிய கொரோனா தான் பரவியுள்ளதா? என்பதை கண்டறிய அவர்களது பரிசோதனை மாதிரிகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ஐசிஎம்ஆர்) ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறது. இதில் நேற்று நிலவரப்படி 6 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மற்றவர்களுடைய மாதிரிகளின் ஆய்வு முடிவுகளும் படிப்படியாக வெளியிடப்படுகின்றன.
20 ஆக உயர்வு
இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரத்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.