இந்தியா 9 நாடுகளுக்கு ஆகாஷ் ஏவுகணைகளை விற்க மந்திரிசபை அனுமதி
1 min readCabinet approves India to sell Akash missiles to 9 countries
30-12-2020
இந்தியாவின் ஒன்பது நட்பு நாடுகளுக்கு ஆகாஷ் ஏவுகணையை விற்க மத்திய மந்திரிசபை அனுமதி வழங்கியுள்ளது.
ஆகாஷ் ஏவுகணை
தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் உள்ள இந்தியாவின் ஒன்பது நட்பு நாடுகள் டிஆர்டிஓ தாயரித்துள்ள ஆகாஷ் ஏவுகணையை வங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன.
இதற்கு மத்திய மந்திரிசபை இன்று அனுமதி வழங்கியது. அதன் பின்னர், பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுத்துறை பிரிவு இந்த நாடுகளுக்கு ஆகாஷ் ஏவுகணையை விற்பனை செய்வதற்கான வாய்ப்புகளை ஆராயும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.