May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

இங்கிலாந்து பிரதமரின் இந்திய வருகை ரத்து

1 min read

Cancellation of the Indian Income of the Prime Minister of the United Kingdom

5.1.2020

இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருவதால், அந்த நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சனின் இந்தியா வருகை ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

ஏற்கனே கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான இங்கிலாந்தில் தற்போது உருமாற்றம் அடைந்த கொரோனாவும வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு தினமும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அங்கு தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஆனாலும் கொரோனா பரவல் வேகமாக இருப்பது அந்த நாட்டை நிலைகுலைய வைத்துள்ளது. இதையடுத்து, இங்கிலாந்து முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தார்.

இந்தியா வருகை ரத்து

இந்த நிலையில் ஜனவரி 26 அன்று நடைபெறும் இந்திய குடியரசு தின கொண்டாட்டங்களில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் முதன்மை விருந்தினராக கலந்து கொள்ள இருந்தார். இங்கிலாந்தில் தொற்றுநோயைக் கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தை தொடர்ந்து போரிஸ் ஜான்சன் இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கான திட்டமிட்ட பயணத்தை ரத்து செய்து உள்ளார்.
அவர், இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது திட்டமிட்டபடி இந்த மாத இறுதியில் இந்தியாவுக்கு வர முடியாது என்று வருத்தம் தெரிவித்து உள்ளார் என இங்கிலாந்து அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.