தமிழகத்தில் தைப்பூசம் அன்று அரசு பொதுவிடுமுறை ; முதல் அமைச்சர் அறிவிப்பு
1 min readGovernment public holiday on Thaipusam in Tamil Nadu; First Minister’s announcement
தமிழகத்தில் தைப்பூசம் அன்று அரசு பொதுவிடுமுறை ; முதல் அமைச்சர் அறிவிப்பு
5.1.2021
தமிழகத்தில் தைப்பூசம் அன்று அரசு விடுமுறையா அறிவித்து அதை பொதுவிடுமுறை பட்டியலில் சேர்க்க முதல்&அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
முதல்&அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று( செவ்வாய்க்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பொது விடுமுறை
தமிழ்க் கடவுளாகிய முருகப்பெருமானைச் சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. இவ்விழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கேரள மாநிலத்திலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் தைப்பூசத்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் சென்றபோது, இலங்கை மற்றும் மொரீஷியஸ் நாடுகளில் தைப்பூசத் திருவிழாவிற்கு பொதுவிடுமுறை அளிப்பது போன்று தமிழ்நாட்டிலும் தைப்பூசத்திருவிழாவிற்கு பொதுவிடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் என்னிடம் கோரிக்கை விடுத்தனர்.
28-ந் தேதி
இக்கோரிக்கையை பரிசீலித்து வரும் ஜனவரி 28-ம்நாள் அன்று கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை, பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும், இனிவரும் ஆண்டுகளிலும் தைப்பூசத்திருவிழா நாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.