இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு 71 ஆக உயர்வு
1 min readTransformed corona exposure in India rises to 71
6.1.2021
இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.
உருமாறிய கொரோனா
சீனாவில் உருவானகொரோனா வைரஸ் உலகம் முழுவதும பரவிவருகிறது. இங்கிலாந்தையும் ஆட்டிப்படைத்த கொரோனா அங்கு உருமாறிய நிலையில் புதியவகை கொரோனா உருவானது. அங்கிருந்து வந்தவர்கள் மூலம் இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவி விட்டது. இதனால் இங்கிலாந்துக்கு விமான சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
மேலும் சர்வதேச விமானங்களில் வந்து சேரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள், தனிமைப்படுத்தப்படுவதுடன், அவர்களுக்கு புதியவகை கொரோனா பாதிப்புக்கான பரிசோதனை நடத்தப்படுகிறது. அவர்களின் மாதிரிகள், 10 அரசு பரிசோதனை மையங்களில் பரிசோதிக்கப்படுகிறது.
71 ஆக உயர்வு
இந்தியாவில் இன்று உருமாறிய கொரோனா 13 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் புதியவகை கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 71 ஆக அதிகரித்துள்ளது.
இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள், அந்தந்த மாநில அரசுகளால் தனி அறையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.