May 17, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் 800க்கு கீழே கொரோனா பரவல் குறைந்தது

1 min read

Corona distribution in Tamil Nadu is below 800

8-1-2021
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. தற்போது கொரோனா பரவல் 800க்கும் கீழே வந்துள்ளது.

கொரானா

தமிழகத்தில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தினமும் 900 க்கும் குறைவாகவே கொரோனா பதிவாகி இருந்தது. இந்த நிலையில் இன்று 800க்கும் குறைவாக பதிவாகி உள்ளது.
கொரோனா பரவல் பற்றி தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவல்கள் வருமாறு:&
தமிழகத்தில் இன்று( வெள்ளிக்கிழமை) 790 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,24,776 ஆக அதிகரித்து உள்ளது.
தமிழகத்தில் உள்ள 245 ஆய்வகங்கள் மூலமாக, இன்று மட்டும் 64,364 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கொரோனா உறுதியானவர்களில், 479 பேர் ஆண்கள், 311 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 4,98,518 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,26,224 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 34 ஆகவும் உள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 897 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 5 ஆயிரத்து 136 ஆக உள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா பாதித்த 8 பேர் உயிரிழந்தனர். இதில் சென்னையில் 4 பேரும் கோவை, திண்டுக்கல், ஈரோடு, தேனி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் அடங்குவர். இவர்களையும் சேர்த்து இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 12,208 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 7,432 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மேற்கண்ட தகவல் தமிழக அரசின் சுகாதாரத்து¬றை வெளியிட்டது.

தென்காசி

இன்று கொரோனா பாதித்தவர்களில் அதிகபட்சமாக சென்னையில் 208 பேருக்கு தொற்று பரவியுள்ளது. நெல்லையில் 12 பேருக்கும், தென்காசியில் 5 பேருக்கும், தூத்துக்குடியில் 7 பேருக்கும் இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.