இந்தியாவில் ஒரேநாளில் 14,545 பேருக்கு கொரோனா
1 min readCorona for 14,545 people in one day in India
22.1.2021
இந்தியாவில் ஒரே நாளில் 14,545 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா
இந்தியாவில் கொரோனா பரவல் பற்றிய விவரங்களை இன்று (வெள்ளிக்கிழமை ) காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்விவரம் வருமாறு:-
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று ( வியாழக்கிழமை) ஒரே நாளில் 14,545 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,06,25,428 ஆகஉயர்ந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 163 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,53,032 ஆக உயர்ந்துள்ளது.
டிஸ்சார்ஜ்
கொரோனா பாதிப்பில் நேற்று மட்டும் 18,002 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,02,83,708 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 1,88,688 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.