May 6, 2024

Seithi Saral

Tamil News Channel

அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்

1 min read

Minister Vijayabaskar was vaccinated against corona

22.1.2021
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
கொரோனா தடுப்பூசி

இந்தியாவில் கடந்த 16ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மருந்து கண்டு பிடிக்கும் முன் மக்களிடம் இருந்த ஆர்வம் இப்போது குறைந்துள்ளது. காரணம் இந்த தடுப்பூசியை போட்டால் பக்க வளைவுகள் வருமோ என்று பயப்படுகிறார்கள்.
கொரோனா தடுப்பூசிபோட்ட சிலர் இறந்தனர் என்ற செய்தியும் பரவியது. ஆனால் அவர்கள் அந்த தடுப்பூசியால் இறக்கவில்லை என்று பிரேத பரிசோதனையில் தெரியவந்தாலும் இன்னும் பொதுமக்களில் சிலர் அச்ச உணர்வுடனே இருக்கிறார்கள்.
இதற்கிடையே கொரோனா தடுப்பூசியை ஏன் இன்னும் அதிகாரிகள் அமைச்சர்கள் போட்டுக்கொள்ளவில்லை என்று கேள்வியும் இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அமைச்சர் விஜயபாஸ்கர்

ஆனால் அப்போதே தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அனுமதி கிடைத்தால் தானும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வேன் என்று அறிவித்தார்.
கடந்த 2 தினங்களுக்கு முன்பு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இப்போது அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். மக்களின் உள்ள அச்ச உணர்வை போக்குவதற்காக
தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு தமிழக சுகாதாரத்துறை ஏற்பாடுகள் செய்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 10,43,534 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நேற்று ( வியாழக்கிழமை) ஒரே நாளில் 2,37,050 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.