தேனி மாவட்ட கலெக்டருக்கு கொரோனா
1 min readCorona to Theni District Collector
22.1.2021
தேனி மாவட்ட கலெக்டருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் – அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
தேனி கலெக்டர்
தேனி மாவட்ட கலெக்டராக இருப்பவர் பல்லவி பல்தேவ். இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் தனது முகாம் அலுவலகத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று முன்தினம் கலெக்டர் பல்லவிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று (வெள்ளிக்கிழமை) பரிசோதனை முடிவு வந்தது. இதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது.
சிகிச்சை
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு கொரோனா சிறப்பு வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கலெக்டரின் உடல்நிலை நல்ல நிலையில் இருப்பதாகவும், சில நாட்கள் சிகிச்சை பெற்று கொரோனா தொற்றில் இருந்து மீண்டுவிடுவார் என்றும் மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.
கலெக்டருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து முகாம் அலுவலகத்தில் பணியாற்றிய நபர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.