தமிழகத்தில் இன்று 574 பேருக்குக் கொரோனா
1 min readCorona for 574 people in Tamil Nadu today
22.1.2021
தமிழகத்தில் இன்று 574 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக குறைவு கொஞ்சம் தேங்கியது. கடந்த 18ந் தேதி 551 ஆக இருந்த கொரோனா 19ந் தேதி 543 ஆக குறைந்தது. ஆனால் மறுநாள் 20ந் தேதி 549 ஆகவும் 21ந் தேதி 596 ஆகவும் உயர்ந்தது. இன்று ( வெள்ளிக்கிழமை) சற்று குறைந்து 574 ஆக இருந்தது-
தமிழகத்தில் இன்றைய (வெள்ளிக்கிழமை) கொரோனா பரவல் குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:&-
தமிழகத்தில் இன்று 574 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதில் ஆண்கள் 325. பெண்கள் 249 பேர். தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,33,585 ஆக உயர்ந்துள்ளது.
தென்காசி
இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில் அதிகபட்சமாக சென்னையில் 155 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. கோவையில் 55 பேருக்கும் நெல்லையில் 2 பேருக்கும், தென்காசியில் 13 பேருக்கும், தூத்துக்குடியில் 3 பேரக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த இன்று 8 பேர் இறந்தனர். இவர்களில் 2 பேர் அரசு ஆஸ்பத்திரியிலும் 6 பேர் தனியார் ஆஸ்பத்திரிகளியிலும் அனுமதிக்கப்பட்டிருந்தவர்கள் ஆவர். இதில் சென்னையில் இன்று 4 பேரும் செங்கல்பட்டு, கோவை, ராணிபேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 12,307 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 689 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களையும் சேர்த்து இதுவரை மொத்தம் 8,16,205 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனையில் 5,073 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 62 ஆயிரத்து 152 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேற்கண்ட தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.