May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

விடுதலையான சசிகலாவுக்கு அமலாக்த்துறை நோட்டீஸ்

1 min read

சசிகலா

Enforcement notice to Sasikala released

27.1.2021

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா விடுதலையான இன்று அவருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அமலாக்கத்துறை

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு இன்றுடன் சிறைத் தண்டனை முடிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து சசிகலா சிகிச்சை பெற்று வரும் விக்டோரியா மருத்துவமனைக்கு சென்ற சிறைத்துறை அதிகாரிகள் சசிகலாவிடம் விடுதலை சான்றிதழை வழங்கினர். அதனுடன் அமலாக்கத் துறை நோட்டீசையும் வழங்கியுள்ளனர்.

கடந்த ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. சொத்துக்கள் முடக்கப்பட்ட நிலையில், அவை வாங்கியதற்கான பல கூடுதல் தகவல்களை வழங்க அமலாக்கத் துறை கோரிக்கை விடுத்திருந்தது. அமலாக்கத் துறை கடிதங்களுக்கு சசிகலா பதிலளிக்காத நிலையில் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.