May 5, 2024

Seithi Saral

Tamil News Channel

இந்தியாவில் ஒரே நாளில் 18,855 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 18,855 people in a single day in India

29.1.2021

இந்தியாவில் ஒரே நாளில் 18,855 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.

கொரோனா

இந்தியாவல் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. ஆனாலும் அவ்வப்போது கொரோனாவால் பாதிப்போரின் எண்ணிக்கை சற்று உயர்ந்தும் குறைந்தும் வருகிறது. நேற்று முன்னதினம் 11,666 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இன்றைய வெளியீட்டில் சற்று உயர்ந்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் இன்று( வெள்ளிக்கிழமை) காலை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:&

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் அதாவது நேற்று ( வியாழக்கிழமை) ஒரே நளரில் 18,855- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 7- லட்சத்து 20 ஆயிரத்து 48- ஆக உள்ளது.
இந்தியாவில் நேற்று மட்டும் 20,746- பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து நாடு முழுவதும் இதுவரை கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 3 லட்சத்து 94- ஆயிரத்து 352- ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மட்டும் கொரோனாவுக்கு 163- பேர் இறந்துள்ளனர். நாடு முழுவதும் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 54- ஆயிரத்து 10- ஆக உள்ளது.
தற்போது இந்தியா முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 71- ஆயிரத்து 686- ஆக உள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 29 லட்சத்து 28 ஆயிரத்து 53- ஆக உள்ளது. அதேபோல், இந்தியாவில் இதுவரை 19 கோடியே 50 லட்சத்து 81 ஆயிரத்து 079- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில்….

தமிழக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்டுள்ள தகவலின்படி தமிழகத்தில் இன்று 503 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8,36,818 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று மட்டுமட் 6 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இவர்களையும சேர்த்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,339 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 544 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களையும் சேர்த்து மாநிலம் முழுவதும் இதுவரை 8,19,850 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், தற்போது தமிழகத்தில் 4,629 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.