ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை
1 min read4 people in the same family commit suicide by jumping in front of a suicide train
29.1.2021
கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை – ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
கடன் தொல்லை
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ராயபாக் தாலுகா பீராடி கிராமத்தை சேர்ந்தவர் சதப்பா அண்ணப்பா சுதார் (வயது 60). இவரது மனைவி மகாதேவி (50). இந்த தம்பதியின் மகன்கள் தத்தாத்ரேயா (28), சந்தோஷ் (25). இவர்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகவில்லை.
மேலும் 2 பேரும் சரியான வேலைக்கு செல்லாததால் குடும்பம் வறுமையில் வாடியது. இதனால் சதப்பா பலரிடம் கடன் வாங்கி உள்ளார். ஆனால் அவரால் கடனை திரும்ப கொடுக்க முடியவில்லை என்று தெரிகிறது.
இதனால் கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப தரும்படி கேட்டு சதப்பாவுக்கு தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்து காணப்பட்ட சதப்பா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
இதுபற்றி அவர் தனது மனைவி மகாதேவி மற்றும் மகன்களிடம் கூறி உள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த 3 பேரும் தாங்களும் உங்களுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து நேற்று முன்தினம்( புதன்கிழமை) இரவு வீட்டில் இருந்து வெளியேறிய 4 பேரும் ராயபாக் ரெயில் நிலையத்திற்கு வந்தனர். பின்னர் ரெயில் நிலையத்தில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள தண்டவாளத்திற்கு 4 பேரும் சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் முன்பு 4 பேரும் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இதில் ரெயில் மோதியதில் அவர்கள் உடல்கள் துண்டு, துண்டாக சிதறி கிடந்தன.
நேற்று காலை 4 பேர் உடல் சிதறி இறந்து கிடப்பது பற்றி அப்பகுதி மக்கள் ராயபாக் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு சென்ற அதிகாரிகள் 4 பேரின் உடல்களையும் பார்வையிட்டனர். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெலகாவி ரெயில்வே போலீசார் 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பெலகாவி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.