ஆஸ்பத்திரியில் இருந்து சசிகலா, அதிமுக கொடி காரில் வந்தது ஏன்?
1 min readSasikala discharge from hospital
31.1.2021
கொரோனா காரணமாக பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சசிகலா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
சசிகலா
பெங்களூரு சிறையில் கடந்த 4 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த சசிகலா, கடந்த 27-ந் தேதி விடுதலை ஆனார். ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். ஆஸ்பத்திரியில் இருந்த சசிகலாவிடம், சிறைத்துறை நிர்வாகத்தின் சார்பில் அதிகாரிகள் நேரடியாக சென்று, விடுதலை செய்யப்பட்டதற்கான சான்றிதழை வழங்கினர்.
டிஸ்சார்ஜ்
இந்தநிலையில் சசிகலா, கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்தார்.இதையடுத்து, இன்று சசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஒரு வாரம் தனிமைப் படுத்திக்கொள்ள வேண்டும் என்ற டாக்டர்களின் அறிவுரையின்படி, பெங்களூருவிலேயே ஒரு வீட்டில் ஒரு வாரம் தங்கி சசிகலா ஓய்வெடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வெளியே வந்த சசிகலா, செல்லும் காரில் அதிமுக கொடி கட்டப்பட்டுள்ளது. இது அ.தி.மு.க.வினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏன்?
சசிகலாவின் காரில் அ.தி.மு.க. கொடி பொருத்தப்பட்டு இருந்தது குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில், “அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா தான். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், அவரது காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.