May 18, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று 514 பேருக்கு கொரோனா

1 min read

Corona for 514 people in Tamil Nadu today

3.2.2021

தமிழகத்தில் இன்று 514 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வந்தது. அதாவது கடந்த 35 நாட்களாக ஆயிரத்துக்கும் கீழ்தான் கொரோனா பரவல் இருந்து வருகிறது.
ஆனால் கடந்த சில நாட்களாக கொரோனா நிலவரம் அதே நிலையில் இருந்து வருகிறது. ஆனால் இறப்பு விகிதம் குறைந்த நிலையிலேயே இருக்கிறது.
இன்றைய கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:&
தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) 512 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,39,866 ஆக உயர்ந்து உள்ளது. தமிழகத்தில் இன்று 254 ஆய்வகங்கள் மூலம் 53,649 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில், 314பேர் ஆண்கள், 200பேர் பெண்கள். இதுவரை கொரோனா பாதித்த ஆண்களின் மொத்த எண்ணிக்கை 5,07,588. பெண்களின் எண்ணிக்கை 3,32,244. மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 34 ஆகவும் உள்ளது.
தமிழகத்தில் இன்று மட்டும் 533 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8,23,001 ஆக உள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 4 பேர் இறந்துள்ளனர். இவர்கள் சென்னை, செங்கல்பட்டு மதுரை, நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களையும் சேர்த்து இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 12,371ஆக அதிகரித்துள்ளது. தற்போது மாநிலத்தில் 4,494 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மேற்கண்ட தகவலை தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.