May 15, 2024

Seithi Saral

Tamil News Channel

கல்லூரிகள் வாரத்தில் 6 நாட்கள் செயல்படும்

1 min read

Colleges operate 6 days a week

5.2.2021

கல்லூரிகளில் வாரத்திற்கு 6 நாட்கள் வகுப்புகள் நடைபெறும் என்று – உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

கல்லூரிகள்

கொரோனா பரவல் ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25ந் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிப்பட்டதை அடுத்து கடந்த டிசம்பர் 2-ந்தேதி முதல் கல்லூரி இறுதியாண்டு மாணவ-மாணவிகளுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டன. மற்ற மாணவர்கள் ஆன்லைன் மூலமே வகுப்புகளில் பங்கு பெற்று வந்தனர்.
இந்த நிலையில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கலை, அறிவியல், தொழில்நுட்ப, என்ஜினீயரிங், வேளாண்மை, மீன்வளம், கால்நடை உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் வருகிற 8-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.

6 நாட்கள்

8ஆம் தேதி முதல் அனைத்து கல்லூரிகள் தொடங்க உள்ள நிலையில், வாரத்திற்கு 6 நாட்கள் வகுப்புகள் நடைபெறும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த கல்வியாண்டு முழுவதும் கல்லூரிகள் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.