சென்னை வந்த மோடி, எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு
1 min readModi meets Edappadi Palanisamy in Chennai
14.2.2021
தமிழகம் வந்த பிரதமர் மோடி, முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனியாக சந்தித்து பேசினர்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி நலத்திட்டங்களை தொடங்கி வைக்க இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வந்தார். சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அவர் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். விழா முடிவில் பிரதமர், முதல் அமைச்சர், துணை முதல் அமைச்சர் கைகளை உயர்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
பின்னர், நேரு விளையாட்டரங்கில் எடப்பாடி பழனிசாமியை பிரதமர் மோடி தனியாக சந்தித்து பேசினார். சுமார் 10 நிமிடங்கள் நீடித்த இந்த இந்த ஆலோசனையின் போது துணை முதல்அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் உடன் இல்லை. அதிமுக- பாஜக கூட்டணி, தொகுதி பங்கீடு ஆகியவை குறித்து இருவரும் ஆலோசனை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.