அவ்வையார், பாரதியார் பாடல்களை மேற்கோள் காட்டி பேசிய மோடி
1 min readModi quoted Avvaiyar and Bharatiyar poems
14.2.2021
சென்னை வந்த மோடி அவ்வையார், பாரதியார் பாடல்களை மேற்கோள் காட்டி பேசினார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வந்தார். நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, ரூ. 8 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் விழாவில் பேசும்போது, “வணக்கம் சென்னை, வணக்கம் தமிழ்நாடு” என்று கூறி உரையை தொடங்கினார். மேலும் கூறியதாவது:&
இனிய வரவேற்பு அளித்த மக்களுக்கு நன்றி. சென்னை வருகை எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை அறிவும் ஆற்றலும் நிரம்பிய நகரம்
தொடங்கி வைக்கப்பட்டுள்ள புதிய திட்டங்கள் தமிழகத்தின் வளர்ச்சிக்கு உதவும். வேளாண் உற்பத்தியில் சாதனை படைத்த தமிழக விவசாயிககளை பாராட்டுகிறேன்.
நீர் ஆதாரங்களை தமிழக விவசாயிகள் சிறப்பாக பயன்படுத்தினார். நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கி தானிய உற்பத்தியில் சாதனை புரிந்துள்ளது.
கல்லணை கால்வாயை புனரமைக்கும் திட்டம் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
“வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயர குடி உயரும், குடி உயர கோல் உயரும், கோல் உயர கோன் உயர்வான்”
விரிவாக்கம்
சென்னை மெட்ரோ விரிவாக்கம் அடைந்து வருகிறது.
வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரையிலான மெட்ரோ ரெயில் திட்டம் குறித்த நேரத்தில் முடிக்கப்பட்டுள்ளது.
*சிறந்த போக்குவரத்து சேவைகள் வணிகத்தை பெருக்க உதவும்.
*மின் மயமாக்கப்பட்ட ரெயில் தடங்கள் டெல்டா மாவட்டங்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம்
*ஆயுதம் செய் வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் வைப்போம்