May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்றைய கொரோனா பரவல் 470 ஆக குறைந்தது

1 min read

Today’s corona distribution in Tamil Nadu has come down to 470

14.2.2021

தமிழகத்தில் இன்றைய கொரோனா பரவல் 470 ஆக குறைந்தது. தமிழகத்தில் இன்று 6 பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இன்றைய கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:&
தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 470 பேருக்கு கொரோனா பரவல் கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,45,120 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 6 பேர் இறந்துள்ளனர். அதாவது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கோவை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 12,419 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 479 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,28,441 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனாவுக்கு 4,260 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னையில் இன்று மேலும் 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோவையில் 45 பேருக்கும் திருநெல்வேலி 4 பேருக்கும், தென்காசி 5 பேருக்கும் தூத்துக்குடி 8 பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,33,334 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 4,123 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று மட்டும் 53,483 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.