இலங்கை, நேபாளத்திலும் பாரதீய ஜனதா ஆட்சியாம்- அமித்ஷா சொல்கிறார்
1 min readBJP rule in Sri Lanka and Nepal too -says Amit Shah
15.2.2021
இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளிலும் பாரதீய ஜனதா ஆட்சிய பிடிக்கும் என்ற அமித்ஷா என்று மத்திய மந்திரி சொன்னாராம்.
திரிபுரா முதல் மந்திரி
திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ் கடந்த சில நாட்களுக்கு முன்பு அகர்தலாவில் நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, நிர்வாகிகளை உற்சாகப்படுத்தும் வகையில் நமது கட்சியை நாடு முழுவதும் விரிவுபடுத்துவது மட்டுமல்லாமல், அண்டை நாடுகளிலும் விரிவுபடுத்தும் திட்டம் உள்ளது என்றார். இது தொடர்பாக அவர் மத்திய மந்திரி அமித்ஷா சொன்னதாக ஒரு தகவலை எடுத்துக்காட்டி பேசினார். அவர் பேசியதாவது:-
ஒருமுறை கட்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினோம். அப்போது, பாஜகவின் வடக்கு மண்டல செயலாளர் அஜய் ஜாம்வால் பேசும்போது, பல மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைத்திருப்பதாக கூறினார். அதற்கு பதிலளித்த அமித் ஷா, இப்போது இலங்கையும் நேபாளமும் எஞ்சியுள்ளதாக கூறினார். நேபாளம் மற்றும் இலங்கையில் கட்சியை விரிவுபடுத்தி, அங்கு அரசாங்கத்தை அமைப்பதற்கு அங்கு வெற்றி பெறவேண்டும் என்றும் கூறினார்.
அமித் ஷாவின் தலைமையில் பாஜக உலகின் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது. கேரளாவில் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் மேலாக இடதுசாரிகளும் காங்கிரசும் மாறி மாறி ஆட்சியமைக்கும் போக்கை பாஜக மாற்றும். அங்கும் பாஜக வெற்றி பெறும்.
இவ்வாறு திரிபுரா முதல் மந்திரி பிப்லப் தேவ் பேசினார்.
பிப்லப் தேவ் மட்டும் அல்ல அமித்ஷாவுன் தொண்டர்களை உற்சாகப்படுத்த இந்த கருத்தை சொல்லி இருக்கலாம். ஆனாலும் இது வலைதளங்களில் நகைச்சுவைக்காக பரவி வருகிறது.