May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

கொரோனா ஊரடங்கில் பொதுமக்கள் மீது போடப்பட்ட 10 லட்சம் வழக்குகள் வாபஸ் -எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

1 min read

10 lakh cases filed against civilians in Corona curfew withdrawn – Edappadi Palanisamy announcement

19.2.2021
கொரோனா ஊரடங்கை மீறியதாக பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று(வெள்ளிக்கிழமை) பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது:

கொரோனா ஊரடங்கை மீறியதாக பொதுமக்கள் மீது பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகள் திரும்பப் பெறப்படும்.
அதேபோல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளும் திரும்பப் பெறப்படும்.

மத்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு (சிஏஏ) எதிரான போராட்டம் தொடர்பாக தொடரப்பட்ட 1500 வழக்குகளில் சிலவற்றை தவிர மற்றவை ரத்து செய்யப்படும்.

கூடங்குளத்தில் போராடியவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் ரத்து செய்ய பரிசீலனை செய்யப்படும்.

போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தது, வன்முறை தொடர்பான வழக்குகள் தவிர்த்து மற்ற வழக்குகள் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.