April 24, 2024

Seithi Saral

Tamil News Channel

மார்ச் – 2021 மாத ராசிபலன்கள்

2 min read

Rasi Palangal Marchi – 2021 Kaliyur Narayanan

மேஷம்
மேஷ ராசி நேயர்களே! இந்த மாதம் முற்பகுதியில் அதிக பலனை எதிர்பார்க்கலாம். சூரியன் 14-ந் தேதி வரையிலும்,சுக்கிரன் 18-ந் தேதி வரையிலும், புதன் 25-ந் தேதி வரையிலும் சாதகமான நிலையில் உள்ளனர். இதனால் பண வரவு இருக்கும். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும்.அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். உங்கள் ஆற்றல் மேம்படும்.
குடும்பம்: மகிழ்ச்சி பெருகும். குறிப்பாக மாத தொடக்கத்தில் குதூகலம் அதிகமாக காணப்படும். சகோதரிகளின் ஆதரவு இருக்கும். அவர்களால் பொருள் சேரும். கணவன்- மனைவி இடையே அன்பு பெருகும். பெண்களால் அதிக முன்னேற்றம் காணலாம். அவர்களால் நற்சுகம் கிடைக்கும்.16,17,18-ந் தேதிகளில் அவர்கள் மூலம் பணம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.11,12,13-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதே நேரம் 24,25 ஆகிய தேதிகளில் உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். எனவே அப்போது மட்டும் சற்று விலகி இருக்கவும்.
உத்தியோகம்: புதனின் பலத்தால் சிறப்பான பலன்கள் கிடைக்க பெறலாம். மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். அலைச்சல், வேலைப்பளு குறையும். கோரிக்கைகள் நிறைவேறும். அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். அரசு ஊழியர்கள் மிகுந்த அனுகூலத்தை காணலாம். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை 13-ந் தேதிக்குள் கேட்டு பெற்று கொள்ளவும். அதன்பின் சிலர் இடமாற்றத்தை எதிர்நோக்கலாம். 9,10-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக இருக்கும். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
வியாபாரிகள்: லாபம் அதிகரித்த வண்ணம் இருக்கும். பொருளாதார வளம் மேம்படும். எடுத்த காரியம் வெற்றி அடையும். அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல அனுகூலத்தை கொடுக்கும். 14,15,19,20-ந் தேதிகளில் சந்திரனால் சிறு சிறு தடைகள் வரலாம். சிலருக்கு தலைகுனிவு வரலாம்.1,2,28,29-ந் தேதிகளில் பண வரவு அதிகரிக்கும். பகைவர்களை எதிர்த்து வெற்றிக் கொள்ளும் ஆற்றல் இருக்கும்.13-ந் தேதிக்கு பிறகு பொருள் விரையம் ஏற்படும்.25-ந் தேதிக்கு பிறகு தடைகளை கடந்தே முன்னேற வேண்டியதிருக்கும். எதிரிகள் வகையில் தனி கவனம் இருப்பது நல்லது.
கலைஞர்கள்: புதிய ஒப் பந்தங்கள் கிடைக்கும். பணப் புழக்கமும் இருக்கும். அரசிடம் இருந்து விருது அல்லது பாராட்டு கிடைக்க வாய்ப்பு உண்டு.18-ந் தேதிக்கு பிறகு காரியத்தடை. பொருள் நஷ்டம் ஏற்படலாம். போட்டியாளர்கள் வகையில் இடையூறுகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவி கிடைக்கும். அரசியல்வாதிகள் சீரான நிலையில் இருப்பர்.
மாணவர்கள்: புதனால் கல்வி, கேள்வி களில் சிறந்த நிலையில் இருப்பர். ஆசிரியர்களின் ஆலோனை கிடைக்கும். 25-ந் தேதிக்கு பிறகு சிரத்தை எடுத்து படித்தால்தான் பலன் கிடைக்கும்.
விவசாயிகள்: பாசி பயறு நெல், துவரை, சோளம், பழ வகைகள் நல்ல வருவாயை கொடுக்கும். மாத முற்பகுதியில் காய்கறி மூலமும் நல்ல வருமானம் கிடைக்கும். கால்நடைச் செல்வம் பெருகும். பால்பண்ணை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். புதிய சொத்து வாங்க சில மாதங்கள் பொறுத்திருக்க வேண்டும்.
பெண்கள்: நற்பெயர் எடுப்பர். கணவரின் அன்பு கிடைக்கும். உங்களால் வீடு சிறக்கும்.அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வேலையில் நிம்மதியும் திருப்தி கிடைக்கும். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை 25-ந் தேதிக்குள் கேட்டு பெற்று கொள்ளவும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.வங்கி கடன் எளிதாக கிடைக்கும். 21,22,23-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். 3,4,30,31 ஆகிய தேதிகள் சிறப்பானதாக இருக்கும். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பண உதவி கிடைக்கும்.
உடல் நலம் சிறப்பாக இருக்கும். 25-ந் தேதிக்கு பிறகு உடல் நலத்தில் சிறிது அக்கறை காட்டவேண்டியது இருக்கும். 5,6-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.பண விஷயத்தில் கவனம் தேவை.7,8-ந் தேதிகளில் வயிறு தொடர்பான சிறுசிறு உபாதைகள் வரலாம்.26,24-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம்.
அதிர்ஷ்டம்: 1,9ஆகிய எண்கள் அதிர்ஷ்ட எண்கள் ஆகும்.பச்சை , வெள்ளை, 14-ந் தேதி வரை செந்தூரம் அதிர்ஷ்ட நிறங்களாகும். 1,2,3,4,9,10,11,12,13,16,17,18, 21,22,23,28,29,30,31 ஆகிய தேதிகள் அதிர்ஷ்டமான நாட்கள் ஆகும்.
வழிபாடு: செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட்டு துவரை தானம் செய்யலாம். நாக தேவதையை வணங்கி வாருங்கள். 13- ந் தேதிக்கு பிறகு சூரிய வழிபாடு நடத்துங்கள். 25- ந் தேதிக்கு பிறகு புதன் பகவானுக்கு அர்ச்சனை செய்து ஏழைகளுக்கு பாசி பயறு தானம் செய்யலாம். துர்க்கை வழிபாடு மேலும் உங்களை வளப்படுத்தும்.


ரிஷபம்


ரிஷப ராசி நேயர்களே! இந்த மாதம் நீங்கள் எண்ணற்ற சிறப்பு பலன்களை காணலாம். சூரியன் 14-ந் தேதி இடமாறினாலும் தொடர்ந்து நன்மை தருவார். புதன் 7-ந் தேதிக்கு பிறகும், சுக்கிரன்17-ந் தேதிக்கு பிறகும் நற்பலனை கொடுப்பார்கள். மேலும் குருவின் நற்பலன்கள் தொடர்ந்து கிடைக்கும். இதனால் மற்றைய கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் பாதகம் இல்லை. உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். நல்ல பணப் புழக்கத்தை காண்பீர்கள். தேவைகள் பூர்த்தி ஆகும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். 14-ந் தேதிக்கு பிறகு அரசு வகையில் அனுகூலம் ஏற்படும்.
குடும்பம்: திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும்.7-ந் தேதி வரை பொறுமையும், விட்டுக் கொடுத்து போகவும். அதன்பின் பல்வேறு முன்னேற்றங்களை காணலாம். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். பெண்களால் அனுகூலம் பல காணலாம். குறிப்பாக 19,20-ந் தேதிகளில் அவர்கள் மிகவும் உறுதுணையாக இருப்பார்கள். அவர்களால் பணம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். 14,15-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் 26,27-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் கருத்து வேறுபாடு வரலாம். எனவே அப்போது மட்டும் சற்று ஒதுங்கி இருக்கவும்.
உத்தியோகம்: சீரான நிலையில் இருப்பர். மாதத் தொடக்கத்தில் வேலைப்பளு இருந்தாலும் அதற்குரிய வருமானம் கிடைக்கும். வீண் மனக்கவலை 7-ந் தேதிக்கு பிறகு மறையும். உங்கள் திறமை பளிச்சிடும். சக பெண்ஊழியர்கள்மிகவும் ஆதரவுடன் இருப்பர். 11,12,13-ந் தேதிகளில் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும்.14-ந் தேதிக்கு பிறகு அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம். கோரிக்கைகள் நிறைவேறும். அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
வியாபாரிகள்:தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து 7-ந் தேதிக்கு பிறகு விடுபடுவர். நல்ல முன்னேற்றம் பெறும் மாதமாக இது அமையும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும்.பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். நண்பர்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். தங்கம், வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 16,17,18,21,22,23-ந் தேதிகளில் சந்திரனால் சிறுசிறு தடைகள் வரலாம். ஆனால் 3,4,30,31-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். பகைவர்களை எதிர்த்து வெற்றிக் கொள்ளும் ஆற்றல் இருக்கும். 25-ந் தேதிக்கு பிறகு பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
கலைஞர்களுக்கு எதிரிகள் வகையில் இருந்து வந்த தொல்லைகள், அவப்பெயர் , போட்டிகள் முதலியன 17-ந் தேதிக்கு பிறகு மறையும். அதன்பிறகு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவியை பெற முடியாது. ஆனாலும் பணியில் திருப்தி காண்பர்.1,2,28,29-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள்:ஆசிரியர்களின் உதவி பயன் உள்ளதாக அமையும்.7-ந் தேதி புதன் சாதகமான இடத்திற்கு வருவதால் கெட்ட சகவாசத்திற்கு விடைகொடுப்பர். போட்டிகளில் வெற்றி காணலாம். காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.
விவசாயிகள் வருமானத்திற்கு குறை இருக்காது. பாசிபயறு நெல், கொண்டைக் கடலை கீரை வகைகள், காய்கறிகள், பயறு வகைகள் போன்றவைகள் நல்ல மகசூலை கொடுக்கும். 7-ந் தேதிக்கு பிறகு கால்நடை செல்வம் பெருகும். பால்பண்ணை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் திருப்திகரமாக இருக்கும்.
பெண்கள்: சிறப்பான நிலையில் இருப்பர். உங்களை புரிந்துகொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். கணவர் மற்றும் குடும்பத்தாரின் அன்பு கிடைக்க பெறுவர். 17-ந் தேதிக்கு பிறகு பண வரவு கூடும். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும். 5,6-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பண உதவி கிடைக்கும். 24,25-ந் தேதிகளில் புத்தாடை-அணிகலன்கள் வாங்கலாம்.பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம்.
உடல்நலம்: சிறப்படையும். பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் பொருள் விரயம் முதலியன, வயிறு மற்றும் கண் தொடர்பான உபாதைகள் 13-ந் தேதிக்கு பிறகு பூரண குணம் அடையும். 9,10-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். ஒருவித பயம் ஆட்கொள்ளும்.வாயு தொடர்பான உபாதை வரலாம். 7,8-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.பண விஷயத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்டம்: 1,7,9 ஆகிய எண்கள் அதிஷ்ட எண்கள் ஆகும். பச்சை, செந்தூரம் யோகம் தரும் நிறங்கள்.3,4,5,6,11,12,13,14,15,19,20,24,25,30,31 ஆகிய தேதிகள் நன்மை தரும் நாட்களாக அமையும்.
வழிபாடு: நாக தேவதையை வணங்கி வாருங்கள். சனிக்கிழமை .சனிக்கிழமை தோறும் சனி பகவானை வழிபட்டு காக்கைக்கு அன்னமிடுங்கள். ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்து ஏழைகளுக்கு உளுந்து, கொள்ளு தானம் செய்யுங்கள். ராகுவுக்கு நீல நிறவஸ்திரத்தை சாத்தி அர்ச்சனை செய்யுங்கள்.தினமும் வீட்டில் விளக்கு எற்றி வழிபடுங்கள். முருகன் கோவிலுக்கும் சென்று வந்தால் உடல் நலம் மேம்படும்.

மிதுனம்


மிதுன ராசி நேயர்களே! இந்த மாதம் சுக்கிரன்18-ந் தேதி வரையும், புதன் 7-ந் தேதி வரையும் 25-ந் தேதிக்கு பிறகும்,13-ந் தேதிக்கு பிறகு சூரியனும் நன்மைகள் தருவார்கள். மேலும் கேதுவின் நன்மைகளும் தொடரும். இதனால் உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும். காரிய அனுகூலம் ஏற்பட்டு பொருளாதார வளம் பெருகும். உங்க்ள மீதான பொல்லாப்பு அவப்பெயர் போன்றவை 14-ந் தேதிக்கு பிறகு மறையும். அதன்பின் செல்வாக்கு அதிகரிக்கும்.
குடும்பம்: எண்ணற்ற பல அனுகூலமான சம்பவங்கள் நடக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். நகை-ஆபரணங்கள் வாங்கலாம் மாத தொடக்கத்தில் உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். 7-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை சிலர் பொல்லாப்பை சந்திக்கலாம். பொறுமையும், விட்டுக் கொடுத்து போகவும். 1,2,28,29-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் மனக்கிலேசம் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். ஆனால் 16,17,18-ந் தேதிகளில் அவர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். 21,22,23-ந் தேதிகளில் பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பார்கள். பண உதவி கிடைக்கும். 25-ந் தேதிக்கு பிறகு திருட்டு பயம் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களின் ஆதரவு இருக்கும். பெண்களால் நற்சுகம் கிடைக்கும். பொருள் சேரும்.
உத்தியோகம்: பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். புதனால் உங்கள் திறமைக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர்.14,15-ந் தேதிகளில் சிறப்பான பலன்களை எதிர்நோக்கலாம். எதிலும் வெற்றி காணலாம். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். 7-ந் தேதிக்கு பிறகு தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்குவர். ஆனால் 25-ந் தேதிக்கு பிறகு அதில் இருந்து விடுபடுவர். அதன்பின் சக பெண்ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். மேல் அதிகாரிகள் அனுசரணையுடன் இருப்பர்.
வியாபாரம்: சிறப்படையும். லாபம் அதிகரிக்கும். புதிய வியாபாரம் ஓரளவு அனுகூலத்தை தரும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். 7-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை சிலர் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்குவர். எனவே யாரிடமும் பார்த்து எச்சரிக்கையுடன் பழகவும். அனாவசிய செலவை குறைக்கவும். அதன்பிறகு பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். 19,20,24,25-ந் தேதிகளில் பொருளாதார நஷ்டம் ஏற்படலாம். உங்கள் முயற்சிகளில் தடைகள் வரலாம்.5,6-ந் தேதிகளில் பகைவர்களை எதிர்த்து வெற்றிக் கொள்ளும் ஆற்றல் இருக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.
கலைஞர்கள்:பெண்களின் அனுகூலத்தால் சிலர் உன்னத நிலைக்கு உயர்த்தப்படுவர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். 18-ந் தேதிக்கு பிறகு எதிரி தொல்லைகள், அவப்பெயர், போட்டிகள் அதிகம் இருக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சுமாரான பலனையே பெறுவர். உங்கள் புகழுக்கு எந்த பங்கமும் வராது. 25-ந் தேதிக்கு பிறகு நற்பலனை காணலாம்.
மாணவர்கள்: பொதுவாக சிரத்தை எடுத்தே படிக்க வேண்டியதிருக்கும். ஆனாலும் 7-ந் தேதி வரையும் 25-ந் தேதிக்கு பிறகும் புதன் சாதகமான இடத்தில் இருப்பதால் உங்கள் முயற்சிக்கு தகுந்த முன்னேற்றம் காணலாம்.போட்டிகளில் வெற்றி காணலாம்.
விவசாயிகள் நல்ல பொருளாதார வளத்தை காணலாம். புதிய சொத்து வாங்க நினைப்பவர்கள் 25-ந் தேதிக்கு பிறகு பயன்படுத்திக் கொள்ளவும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு.
பெண்கள்: சிறப்பான நிலையில் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். பெண் காவலர்களுக்கு சகஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். மேல் அதிகாரிகளின் கருணைபார்வை கிடைக்கும். சுய தொழில் செய்து வரும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். 7,8-ந் தேதிகளில் சகோதரர்கள் மிக உறுதுணையாக இருப்பர் 26,27-ந் தேதிகளில் பிறந்த வீட்டில் இருந்து உதவி கிட்டும். புத்தாடை அணிகலன்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு.7-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை சிலருக்கு வீண் மனக்கவலை வரலாம்.சற்று ஒதுங்கி இருக்கவும் வேலைக்கு செல்லும் பெண்கள்உங்கள் பொறுப்புகளை தட்டிகழிக்காமல் செய்யவும்.
உடல்நலம்: பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம். பொருள் விரயம் ஏற்படலாம். 3,4,11,12,13,30,31-ந் தேதிகளில் உடல் நலனில் சற்று கவனமாக இருக்கவும். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். ஒருவித பயம் ஆட்கொள்ளும்.9,10-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்டம்: 3,7 ஆகிய எண்கள் அதிர்ஷ்ட எண்கள் ஆகும். சிவப்பு,பால் வெண்மை அதிர்ஷ்ட நிறங்களாகும்.5,6,7,8,14,15,16,17,18,21,22,23,26,27,.ஆகிய தேதிகள் நன்மை தரும் நாட்களாக அமையும்.
வழிபாடு: நாக தேவதையை வணங்கி வாருங்கள். ராகு கால பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள். முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள்.வியாழக்கிழமை மஞ்சள் ஆடை தானம் கொடுக்கலாம். ஏழைகளுக்கு கோதுமை தானம் செய்யுங்கள். இதனால் உடல் நலம் மேம்படும்.13-ந் தேதி வரை தினமும் காலையில் சூரியனையும் வழிபடவும். 18-ந் தேதிக்கு பிறகு வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு வெண்பட்டு சாத்தி அர்ச்சனை செய்யுங்கள். சுக்கிரனுக்கு பால்பாயாசம் வைத்து வணங்கலாம்.

கடகம்


கடக ராசி நேயர்களே! உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் உள்ள குரு, 11-ம் இடத்தில் உள்ள ராகு தொடர்ந்து நற்பலனை கொடுப்பார்கள். இந்த மாதத்தை பொறுத்தவரை சுக்கிரன்18-ந் தேதி இடமாறினாலும் தொடர்ந்து நன்மை தருவார். செவ்வாய் 2-ந் தேதிக்கு பிறகும், புதன் 7-ந் தேதியில் இருந்து 25-ந் தேதி வரையும் நற்பலனை கொடுப்பார்கள். கடந்த மாதத்தை விட நன்மைகள் மேலும் அதிகரிக்கும். குரு, ராகு தடைகளை உடைத்தெறிந்து எண்ணங்களை நிறைவேற்றி வைப்பார்கள். புதிய வீடு-மனை வாகனம் வாங்க யோகம் கூடி வரும்.திருட்டு களவு போன்றவை இடர்பாடுகள் மறையும்.
குடும்பம்: வசதிகள் பெருகும்.பொன்,பொருள் கிடைக்கும்.மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். கணவன்-மனைவி இடையே இருந்து வந்த பிரச்சினை 7-ந் தேதிக்கு பிறகு மறையும். பிரிந்திருந்த குடும்பம் நிரந்தரமாக ஒன்று சேரும். சுப சம்பவங்கள் நடக்கும். உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். பெண்கள் வகையில் முன்னேற்றமான பலனை எதிர் பார்க்கலாம். குறிப்பாக 24,25-ந் தேதிகளில் அவர்களால் நன்மை அதிகம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். 3,4,30,31-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். ஆனால் 19,20-ந் தேதிகளில் அவர்களால் நன்மை கிடைக்கும். சூரியன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால்14-ந் தேதிக்கு பிறகு சிலர் பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம். எனவே வீண்விவாதங்களை தவிர்க்கவும்.
உத்தியோகம்: குருவின் துணையோடு உயர்ந்த நிலையை எட்டி பிடிக்கலாம். வேலையில் திருப்தியும், நிம்மதியும் காண்பீர்கள். மேல் அதிகாரிகள் உதவிகரமாக இருப்பர். 2-ந் தேதிக்கு பிறகு போலீஸ் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் வெகு வளர்ச்சி காண்பர்.அரசு ஊழியர்கள் வேலையில் கவனமாக இருக்கவும். 16,17,18-ந் தேதிகளில் எதிர்பாராத நன்மைகளை கிடைக்க பெறலாம்.
வியாபாரம்: எதிரிகளின் தொல்லை நீங்கும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர் கள் சரண் அடையும் நிலை ஏற்படும். இதனால் லாபம் அதிகரிக்கும். தங்கம்,வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 14-ந் தேதி வரை அரசு வகையில் அனுகூலம் இல்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். இது மாத பிற்பகுதியில் மறையும். 21,22,23,26,27-ந் தேதிகளில் சந்திரனால் சிறுசிறு தடைகள் வரலாம். உங்கள் முயற்சிகளில் தடை ஏற்படும். பொருள் விரையம், நஷ்டம் உருவாகலாம். 7,8-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும். போட்டியாளர்களை எதிர்த்து வெற்றிக் கொள்ளும் ஆற்றல் இருக்கும். 25-ந் தேதிக்கு பிறகு தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்குவர்.எனவே யாரிடமும் பார்த்து எச்சரிக்கையுடன் பழகவும்.
கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பாராட்டு, புகழ் வரும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். பொதுநல சேவகர்களுக்கு மதிப்பு, மரியாதை கூடும். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள் 2-ந் தேதிக்கு பிறகு எதிர்பார்த்த பதவியை பெறலாம்.முக்கிய பொறுப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மாணவர்கள்: போட்டிகளில் வெற்றி போன்றவை கிடைக்கும்.25-ந் தேதிக்கு பிறகு மெத்தனமாக இருக்க வேண்டாம் சிரத்தை எடுத்து படித்தால்தான் பலன் கிடைக்கும்.
விவசாயிகள் மகசூலை பெறலாம். நெல், கேழ்வரகு, பழ வகைகள், காய்கறி வகைகள் போன்றவை மூலம் அதிக வருமானத்தை காணலாம். கால்நடை செல்வம் பெருகும். பக்கத்து நிலகாரர்கள் வகையில் இருந்து வந்த தொல்லைகள் 2-ந் தேதிக்கு பிறகு மறையும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு
பெண்கள்: குடும்பத்தில் முக்கிய அம்சமாக திகழ்வர். உங்களால் குடும்பம் சிறப்படையும். திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணம் கைகூடும் அதுவும் நல்ல வரனாக அமையும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம். தோழிகளால் உதவி கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர்.புதிய பதவி தேடி வரும் . சுய தொழில் செய்து வரும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர் 1,2,28,29-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம்.9,10-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக இருக்கும். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். விருந்து விழா என சென்று வருவீர்கள். பணம் கிடைக்கும்.
உடல்நலம்: செவ்வாயால் இருந்து வந்த பித்தம், தலைசுற்றல்,உஷ்ணம், தோல், தொடர்பான நோய் 2-ந் தேதிக்கு பிறகு மறையும். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. 5,6,14,15-ந் தேதிகளில் ஒருவித பயம் ஆட்கொள்ளும். வயிறு தொடர்பான உபாதை வரலாம். 11,12,13-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.மனவேதனை உருவாகலாம். பண விஷயத்தில் கவனம் தேவை. தூரத்து உறவு வகையில் விரும்பத்தகாத செய்தி வரலாம்.
அதிர்ஷ்டம்: 4,8 ஆகிய எண்கள் அதிஷ்ட எண்கள் ஆகும். மஞ்சள், நீலம் யோகம் தரும் நிறங்கள். 1,2,7,8,9,10,16,17,18,19,20,24,25,28,29.ஆகிய தேதிகள் நன்மை தரும் நாட்களாக அமையும்.
வழிபாடு: தினமும் காலையில் சூரிய தரிசனம் செய்யுங்கள். சனிக்கிழமை சனிபகவானுக்கு அர்ச்னை செய்யுங்கள்.விநாயகர் துதியும் ஆஞ்சநேயர் வழிபாடும் உங்களுக்கு பயன் உள்ளதாக அமையும். கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். ஏழைகளுக்கு கொள்ளு தானம் செய்யுங்கள் மாதஇறுதியில் புதன் கிழமை குல தெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு பசுந்தழை போடுங்கள்

சிம்மம்


சிம்ம ராசி நேயர்களே! இந்த மாதம் சுக்கிரன் 18-ந் தேதிக்கு பிறகு நன்மை தருவார். புதன் 7-ந் தேதி வரையும் 25-ந் தேதிக்கு பிறகும் நன்மை தருவார். மேலும் சனிபகவானின் நன்மைகளும் தொடரும். அவர் முயற்சிகளில் வெற்றியை தருவார். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெற்று இருக்கிறீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும்.
குடும்பம்: வசதிகள் பெருகும். குடும்பம் மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். காரிய அனுகூலம் ஏற்படும். மாதத் தொடக்கத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறலாம். வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக்கும். 7-ந் தேதிக்கு பிறகு கணவன் மனைவி ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து போகவும்.ஆனால் 25-ந் தேதிக்கு பிறகு கணவன்-மனைவி இடையே இருந்து வந்த பிரச்சினைமறையும். பிரிந்திருந்த குடும்பம் நிரந்தரமாக ஒன்று சேரும். 21,22,23-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் 5,6-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் இருந்து சற்று ஒதுங்கி இருக்க வேண்டும்.26,27-ந் தேதிகளில் விருந்து விழா என சென்று வருவீர்கள். பெண்களால் நற்சுகம் ஏற்படும். செவ்வாயால் அக்கம் பக்கத்தினர்களின் தொல்லை ஏற்படும். சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு
உத்தியோகம்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் மாதத் தொடக்கத்தில் பதவி உயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். 7-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை அதிக சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியது இருக்கும். 13-ந் தேதிக்கு பிறகு அரசு ஊழியர்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறாமல் போகலாம். அதே நேரம் உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்காமல் போகாது. சக ஊழியர்கள் ஒத்துழைப்பு ஓரளவு கிடைக்கும். வேலை நிமித்தமாக பிரிந்திருந்த குடும்பம் 25-ந் தேதிக்கு பிறகு ஒன்று சேரும். 19,20-ந் தேதிகள் நன்மை தரும் நாட்களக அமையும். எதிலும் வெற்றி காணலாம். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
வியாபாரம்: எதிரிகளால் தொல்லைகள் வரலாம். ஆனால் அதனை எளிதில் முறியடிப்பீர்கள். 14-ந் தேதிக்கு பிறகு அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு செலவு கணக்கை சரியாக வைத்துக்கொள்ளவும். பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் 18-ந் தேதிக்கு பிறகு மறையும். அதன்பின் அதே பெண்கள் தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். வேலை இன்றி இருப்பவர்கள் 25-ந் தேதிக்கு பிறகு தொழில் தொடங்கலாம். 1,2,24,25,28,29-ந் தேதிகளில் பண விரயம் ஆகலாம். சந்திரனால் தடைகள் வரலாம். அதே நேரம் 9,10-ந் தேதிகளில் சந்திரன் எதிர்பாராத பணவரவை தருவார்.
கலைஞர்கள்: உற்சாகமான பலனை காண்பர். புகழ், பாராட்டு கிடைக்கும். உங்கள் முன்னேற்றத்திற்கு பெண்கள் மிகவும் உறுதுணையாக இருப்பர். அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் சீரான நிலையில் இருப்பர்.
மாணவர்கள்: சுமாரான நிலையில் இருப்பர். அதே நேரம் புதனின் அருளால் 25-ந் தேதிக்கு பிறகு நல்ல பலனை காணலாம்.போட்டிகளில் வெற்றி காணலாம்.
விவசாயிகள் வளத்தில் சிறப்படைவர். கால்நடை செல்வம் பெருகும். வழக்கு, விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
பெண்கள்: உங்களால் குடும்பம் சிறப்படையும். அனைவரின் அன்பையும் கிடைக்கப் பெறுவர்.3,4,30,31-ந் தேதிகளில் புத்தாடை-அணிகலன்கள் வாங்கலாம்.பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். 18,19-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும். விருந்து விழா என சென்று வருவீர்கள். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.அவர்களால் பண உதவி கிடைக்கும். 25-ந் தேதிக்கு பிறகு வெற்றி கிட்டும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். சகோதரர்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர்.
உடல்நலம்: உங்கள் மீதான அவப்பெயர், அலைச்சல், வயிறு தொடர்பான உபாதைகள் 14-ந் தேதிக்கு பிறகு மறையும். ஆனால் உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். பயணத்தின் போது சற்று கவனம் தேவை. மேலும் 16,17,18-ந் தேதிகளில் சற்று கவனம் தேவை.7,8-ந் தேதிகளில் வீண் மனக்குழப்பம் வரும். அவநம்பிக்கை ஏற்படலாம்.தண்ணீரினால் விபத்து ஏற்படலாம்.கவனம் தேவை. 14,15-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்டம்: 5,7 ஆகிய எண்கள் அதிஷ்ட எண்கள் ஆகும். வெள்ளை, கறுப்பு யோகம் தரும் நிறங்கள்.9,10,11,12,13,19,20,21,22,23,26,27,30,31 ஆகிய தேதிகள் நன்மை தரும் நாட்களாக அமையும்.
வழிபாடு: வியாழக்கிழமை தட்சணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்து கொண்டை கடலை தானம் செய்லாம். தினமும் காலையில் எழுந்து சூரிய தரிசனம் செய்யுங்கள். இதனால் வாழ்வில் வளம் கிடைக்கும். முருகன் கோவிலுக்கு சென்று வந்தால் உடல்நலம் மேம்படும்.7-ந் தேதிக்கும் பிறகு புதன் கிழமை குல தெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு பசுந்தழை போடுங்கள் இதனால் குடும்பத்தில் பிரச்சினைகள் அகலும்.

கன்னி


கன்னி ராசி நேயர்களே! இந்த மாதம் 13-ந் தேதி வரை சூரியனும், 7-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை புதனும் பல்வேறு நன்மைகளை தர உள்ளார்கள். மேலும் குரு,கேது மாதம் முழுவதும் நற்பலனை தருவார்கள். அவர்கள் காரிய அனுகூலத்தை யும் பொருளாதார வளத்தையும், தொழில் விருத்தியை தந்து கொண்டு இருக்கிறார். தெய்வ அனுகூலம் தொடர்ந்து கிடைக்கும்.
குடும்பம்: கடந்த மாதம் குடும்பத்தில் எண்ணற்ற பல பிரச்சினைகள் நிகழ்ந்திருக் கலாம். கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவும் பிரிவும் ஏற்பட்டு இருக்க கூடும். இதற்கு காரணம் புதன் 5-ம் இடத்தில் இருப்பதே. இந்த இடர்பாடுகள் இந்த மாதம் மறையும். 7-ந் தேதிக்கு பிறகு புதன் இடம் மாறுவதால் குடும்பத்தில் முழுஅமைதி ஏற்படும். கணவன் மனைவி ஒன்றுபடுவர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். வீட்டுக்கு தேவையான சகல வசதிகளும் பெறுவர். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். 7,6-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். ஆனால் 24,25-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். 25-ந் தேதிக்கு பிறகு புதனால் குடும்பத்தில் குழப்பம் நிலவும். மனக்கவலை ஏற்படும்.
உத்தியோகம்: சிறப்படையும். புதியபதவி கிடைக்கும்.7-ந் தேதிக்கு பிறகு உத்தியோகத்தில் மதிப்பு அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். சக ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். தங்கள் கோரிக்கைகளை 25-ந் தேதிக்குள் கேட்டு பெற்று கொள்ளவும். 21,22,23-ந் தேதிகளில் சிறப்பான பலன்களையே காணலாம். 25-ந் தேதிக்கு பிறகு யாரையும் நம்பி பணத்தையோ, முக்கிய பொறுப்பையோ ஒப்படைத்து விட வேண்டாம்.அதிக சிரத்தை எடுத்து பணியாற்ற வேண்டியது இருக்கும்.
வியாபாரம்: நல்ல வருமானத்தை காணலாம். பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். பொருளாதார வளம் கூடும். கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும். தங்கம்,வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். 3,4,26,27,30,31-ந் தேதிகளில் சந்திரனால் சிறுசிறு தடைகள் வரலாம். பண விரயம் ஆகலாம். உங்கள் முயற்சிகளில் தடைகள் வரலாம். 11,12,13-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும். வெற்றிக் கொள்ளும் ஆற்றல் இருக்கும்
கலைஞர்களுக்கு முயற்சிகளில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் 18-ந் தேதிக்கு பிறகு மறையும். ஆனால் அதன்பிறகு பெண்கள் வகையில் தொல்லைகள் இடர்பாடுகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவியை பெற முடியாது. அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவியை பெறலாம்.
மாணவர்கள்:சிறப்பான பலனை காணலாம். ஆசிரியரிடம் மதிப்பு கூடும். நற்பெயரை எடுப்பர். போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு கிடைக்கும். 25-ந் தேதிக்கு பிறகு அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும்.
விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானத்தை காணலாம். புதிய சொத்து திட்டம் தள்ளி போகும். விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்
பெண்கள்: குரு பகவான் குடும்பத்தில் குதூகலத்தை கொடுப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். சகோதரிகளால் மேன்மை கிடைக்கும். 7-ந் தேதிக்கு பிறகு எடுத்த காரியம் வெற்றி அடையும். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறலாம்.குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதனால் வாழ்க்கையில் வளம் காணலாம். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவர். பெண் காவலர்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 5,6-ந் தேதிகளில் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். 14,15-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். நற்சுகம் ஏற்படும். 25-ந் தேதிக்கு பிறகு வேலைக்கு செல்லும் பெண்கள் உங்கள் பொறுப்புகளை தட்டிகழிக்காமல் செய்யவும்.
உடல்நலம்: உஷ்ண, பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் பூரண குணம் அடையும்.13-ந் தேதிக்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும். அவப்பெயர் வரலாம். வயிறு தொடர்பான உபாதைகள் வரலாம். 9,10,19,20-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். 16,17,18-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்டம்: 5,6 அதிர்ஷ்ட எண்கள் ஆகும். அதிர்ஷ்ட நிறம் மஞ்சள், (13-ந் தேதி வரை செந்தூரம்) 1,2,5,6,11,12,13,14,15,21,22,23,24,25,28,29. ஆகிய தேதிகள் அதிர்ஷ்டமான நாட்களாக அமையும்.
வழிபாடு: முருகன் கோவிலுக்கு செல்ல தவறாதீர்கள். செவ்வாய்கிழமை முருகனை வழிபட்டு ஏழைகளுக்கு சிவப்பு ஆடை தானம் கொடுக்கலாம். ஏழைகளுக்கு இயன்ற உதவிகளை செய்யுங்கள். ராகு கால பைரவர் பூஜையில் கலந்து கொள்ளுங்கள்.நாக தேவதையை வணங்கி வாருங்கள்.25-ந் தேதிக்கு பிறகு குலதெய்வத்தை வணங்க மறந்து விடாதீர்கள்.

துலாம்


துலாம் ராசி நேயர்களே! இந்த மாதம் சுக்கிரன் 18-ந் தேதி வரையும்,சூரியன் 13-ந் தேதிக்கு பின்னரும், புதன் 7-ந் தேதி வரையும் 25-ந் தேதிக்கு பிறகும் நற்பலனை தருவார்கள். சுக்கிரன் சாதகமாக இருப்பதால் பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் லாபம் அதிகரிக்கும்.பக்தி உயர்வு மேம்படும். 14-ந் தேதி சூரியன் சாதகமான இடத்திற்கு வருவதால் காரிய அனுகூலம் ஏற்படும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும்.
குடும்பம்: மாதத் தொடக்கத்தில் பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். 3,4,30,31 ஆகிய தேதிகளில் பெண்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். 9,10-ந் தேதிகளில் உறவினாகள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்..அவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். 25-ந் தேதிக்கு பிறகு எடுத்த காரியம் வெற்றி அடையும். குதூகலம் அதிகரிக்கும் நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். 26,27-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.
உத்தியோகம்: நல்ல வளர்ச்சியை காண்பீர்கள். விரும்பிய இடத்திற்கு மாற்றம் பெறலாம். 24,25-ந் தேதிகளில் எதிர்பாராத பலன்கள் நடக்கும்.13-ந் தேதிக்கு பிறகு உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். சம்பளஉயர்வு, பதவிஉயர்வுகளில் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். வேலை நிமித்தமாக குடும்பத்தை பிரிந்து சென்றவர்கள் 25-ந் தேதிக்கு பிறகு மீண்டும் ஒன்று சேருவர். மேல் அதிகாரிகளின் ஆதரவும் அனுசரணையும் வந்து சேரும்.
வியாபாரிகள்; அவ்வப்போது தடைகள் வரலாம். ஆனாலும் உங்களின் விடா முயற்சியால் எதையும் அனுகூலமாக்கலாம். பணப்புழக்கம் சிறப்பாகவே இருக்கும். செல்வாக்கு, கவுரவம் சிறப்பாகவே இருக்கும். 7-ந் தேதிக்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம்.13-ந் தேதிக்கு பிறகு எதிரிகளின் இடையூறுகள் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். 14,15-ந் தேதிகளில் சந்திரனால் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும்.1,2,5,6,28,29-ந் தேதிகளில் உங்கள் முயற்சிகளில் தடை ஏற்படும். பொருள் விரையம், நஷ்டம் உருவாகலாம். அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது அரிது. அதோடு சிலர் அரசின் மூலம் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். எனவே உங்கள் வரவு-செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும்.
கலைஞர்கள்: சிறப்பான நிலையில் இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பொது தொண்டில் இருப்பவர்கள் மதிப்பு, மரியாதை கிடைக்கப்பெறுவர்.சிலருக்கு புதிய பதவி கிடைக்கும். 18-ந் தேதிக்கு பிறகு முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். அரசியல்வாதிகள் சுமாரானநிலையில் இருப்பர். பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியது இருக்கும்
மாணவர்கள்: மிகவும் சிறப்பான நிலையை அடைவர். போட்டி, பந்தயங்களில் வெற்றி கிடைக்கும.7-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை சிரத்தை எடுத்து படிப்பது நல்லது.
விவசாயிகள் நெல், பாசிபயறு போன்ற தானிய வகைளில் நல்ல மகசூல் கிடைக்கும். கால்நடை செல்வம் பெருகும். வழக்கு விவகாரங்கள் சீராக இருக்கும். 25-ந் தேதிக்கு பிறகு புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.
பெண்கள்: சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பை பெறுவர். உங்களால் குடும்பம் சிறப்படையும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். தோழிகளால் நற்சுகம் ஏற்படும். அவர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 7,8-ந் தேதிகளில் புத்தடை நகைகள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். 16,17,18-ந் தேதிகளில் சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பண உதவி கிடைக்கும். 25-ந் தேதிக்கு பிறகு திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணம் கைகூடும் அதுவும் நல்ல வரனாக அமையும்.
உடல்நலம்: உடல் ஆரோக்கியம் 13-ந் தேதிக்கு பிறகு மேம்படும். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் வீடு திரும்புவர்.21,22,23-ந் தேதிகளில் வயிறு தொடர்பான பிரச்சினை வரலாம்.11,12,13-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். ஒருவித பயம் ஆட்கொள்ளும். 19,20-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.பண விஷயத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்டம்: 3,6 ஆகிய எண்கள் அதிஷ்ட எண்கள் ஆகும். வெள்ளை மற்றும் 13-ந் தேதிக்கு பிறகு செந்தூரம் யோகம் தரும் நிறங்கள். 3,4,7,8,14,15,16,17,18, 24,25,26,27,30,31 ஆகிய தேதிகள் நன்மை தரும் நாட்களாக அமையும்.
வழிபாடு: சந்தர்ப்பம் கிடைக்கும் போது நவக்கிரகங்களை வழிபட்டு வாருங்கள். சனிக்கிழமை சனி ஈசுவரனை வழிபட்டு அர்ச்சனை செய்யுங்கள். ஊனமுற்றவர் களுக்கு உதவி செய்யுங்கள். தினமும் வீட்டில் விளக்கு எற்றி வழிபடுங்கள். 13-ந் தேதி வரை தினமும் சூரிய தரிசனம் செய்யவும். 18-ந் தேதிக்கு பிறகு வெள்ளிக்கிழமை சுக்கினுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.

                  விருச்சிகம்

விருச்சிக ராசி நேயர்களே! இந்த மாதம் சுக்கிரன் , சனி சாதகமான இடத்தில் உள்ளார். மேலும் புதன் 7-ந் தேதியில் இருந்து 25-ந் தேதி வரையில் நன்மை தருவார். சனிபகவான் 3-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை செய்து கொண்டு இருக்கிறார். குறிப்பாக அவர் காரிய அனுகூலத்தையும் பொருளாதார வளத்தையும் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தொழில் விருத்தியையும் தந்து கொண்டு இருக்கிறார்.
குடும்பம்: மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏறபடும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும். 18-ந் தேதிக்கு பிறகு பக்தி உயர்வு மேம்படும். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் லாபம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 1,2,28,29-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் 11,12,13-ந் தேதிகளில் அவர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். அப்போது சற்று விலகி இருக்கவும். 5,6-ந் தேதிகளில் பெண்கள் மகிவும் உதவிகரமாக இருப்பர். விருந்து விழா என சென்று வருவீர்கள். 25-ந் தேதிக்கு பிறகு சிற்சில விஷயங்களில் பொறுமையாகவும், விட்டுகொடுத்து போகவும்.
உத்தியோகம்: தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். 7-ந் தேதிக்கு பிறகு வேலையில் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். உங்கள் திறமைக்கு உகந்த மரியாதை கிடைக்கும். சகஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். 26,27-ந் தேதிகளில் சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். 27-ந் தேதிக்கு பிறகு வேலைப்பளு அதிகமாக இருக்கும்.அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் கோரிக்கைகள் நிறைவேறுவதில் தடங்கல்கள் தாமதம் வரும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் நிலை உருவாகலாம்
வியாபாரம்: லாபம் கிடைக்கும். அரசு வகையில் இருந்து வந்த இடையூறுகள் 7-ந் தேதிக்கு பிறகு இருக்காது. அதன்பின் அதிக அனுகூலத்தை பெறலாம். புதிய வியாபாரம் ஓரளவு கை கொடுக்கும். பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் 13-ந் தேதிக்கு பிறகு மறையும்.ஆனால் அதன்பிறகு பகைவர்களின் தொல்லை அதிகரிக்கும்.18-ந் தேதிக்கு பிறகு ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். 3,4,7,8,30,31-ந் தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலாம். பண விரயம் ஆகலாம். 16,17,18-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். 25-ந் தேதிக்கு பிறகு தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம்.
கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்கள் பெறுவீர்கள். சககலைஞர்கள் உதவிகரமாக இருப்பர். மதிப்பு, மரியாதை கூடும். பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பலனை பெறலாம். அரசியல்வாதிகளுக்கு முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும்.
மாணவர்கள்:சிறப்பான நிலையை காணலாம். ஆசிரியர்களின் அறிவுரை கைகொடுக்கும். 25-ந் தேதிக்கு பிறகு அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியது இருக்கும்.
விவசாயிகள் பாசி பயறு , தக்காளி, பழ வகைகள் நல்ல வருவாயை கொடுக்கும். கால்நடை வகையில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். வழக்கு, விவகாரங்கள் சாதகமாக இருக்கும். 25-ந் தேதிக்கு பிறகு வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம் யாலும் புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.
பெண்கள் பல்வேறு முன்னேற்றங்களை காணலாம்.வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலன்களை எதிர்நோக்கலாம். முக்கிய கோரிக்கைகளை வைக்கலாம். 18-ந் தேதிக்கு பிறகு தோழிகளால் நற்சுகம் ஏற்படும். அவர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 19,20-ந் தேதிகளில் சிறப்பான பலனை காணலாம். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்கள் மூலம் பண உதவி கிடைக்கும். 9,10-ந் தேதிகளில் புத்தாடை நகைகள் வாங்கலாம். 25-ந் தேதிக்கு பிறகு வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. உங்கள் பொறுப்புகளை தட்டிகழிக்காமல் செய்யவும்.
உடல்நலம்: சுமாராக இருக்கும்..24,25-ந் தேதிகளில் வயிறு பிரச்சினை வரலாம். 14,15-ந் தேதிகளில் சிலர் மன உழைச்சலுடன்காணப்படுவர். 21,22,23-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்டம்: 1,7 ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும். வெள்ளை, கறுப்பு நலம் தரும் நிறங்கள். 1,2,5,6,9,10,16,17,18,19,20,26,27,28,29. ஆகிய தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும்.
வழிபாடு: தினமும் காலையில் சூரியதரிசனம் செய்யுங்கள். துர்க்கை வழிபாடு சிறப்பை தரும். மேலும் செவ்வாய்க்கிழமை முருகன் கோவிலுக்கும் சென்று வழிபடுங்கள். ஏழைகளுக்கு துவரை தானம் செய்யுங்கள்.ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்து ஏழைகளுக்கு உளுந்து, கொள்ளு தானம் செய்யுங்கள். நாக தேவதையை வணங்கி வாருங்கள். 25-ந் தேதிக்கு பிறகு குலதெய்வத்தை வணங்க மறந்து விடாதீர்கள். பசுவுக்கு பசுந்தழை போடுங்கள்.


தனுசு


தனுசு ராசி நேயர்களே! இந்த மாதம் ராகு,குரு,சுக்கிரனின் நன்மைகள் தொடரும். மேலும் 3-ந் தேதி செவ்வாயும், 25-ந் தேதி புதனும் சாதகமான இடத்திற்கு வருகிறார்கள். சூரியன் 13-ந் தேதி வரையில் நற்பலனை கொடுப்பார். அவரால் செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும். பண வரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம்.
குடும்பம்: செவ்வாயால் உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். பகைவர்களின் தொல்லையில் இருந்து விடுபடுவர். நகை-ஆபரணங்கள் வாங்கலாம்.புதிய வீடு-மனை வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. கணவன்-மனைவி இடையே அன்னியோன்யமான சூழ்நிலை இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 21-ந் தேதிக்கு பிறகு குதூகலம் அதிகரிக்கும். அத்தியாவசிய பொருட்கள் தாராளமாக கிடைக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு மேல் ஓங்கும். 3,4,30,31-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். 14,15-ந் தேதிகளில் உற்றார் உறவினர் வகையில் வீண் பிணக்குகள் வர வாய்ப்பு உண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். 7,8-ந் தேதிகளில் விருந்து விழா என சென்று வருவீர்கள். பெண்களின் ஆதரவு இருக்கும். அவர்களால் பொருள் சேரும்.
உத்தியோகம்: சுக்கிரனால் நல்ல முன்னேற்றம் காணலாம். மேல் அதிகாரிகள் அனுசரணையாக இருப்பர். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் வந்து சேரும். 13-ந் தேதிக்கு பிறகு பெண்களிடம் விரோதம் ஏற்படும். சிக்கனம் தேவை.1,2,28,29-ந் தேதிகளில் எதிர்பாராத நன்மைகள் நடக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். 25-ந் தேதிக்கு பிறகு அரசு ஊழியர்களுக்கு இருந்து வந்த பிற்போக்கான நிலை அகலும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். பதவி உயர்வு கிடைக்கும்.
வியாபாரம்: எதிரிகளின் தொல்லை இருக்கும் இடம் தெரியாமல் போகும். லாபம் சிறப்பா இருக்கும். தங்கம்,வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.7-ந் தேதிக்கு பிறகு அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். 13-ந் தேதிக்கு பிறகு பெண்கள் வகையில் பிரச்சனை வரலாம். 5,6,9,10-ந் தேதிகளில் சிறுசிறு தடைகள் வரலாம். 19,20-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். 25-ந் தேதிக்கு பிறகு போட்டியாளர்கள் தொல்லைகளில் இருந்து விடுபடுவர். பொருள் வரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் தொட்டதெல்லாம் பொன்னாகும் நிலை ஏற்படும்.வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும்.
கலைஞர்கள்: புகழோடும், பாராட்டோடும் காணப்படுவர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சிலருக்கு விருது கிடைக்கலாம். பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பலனை பெறலாம். அரசியல்வாதிகள் 2-ந் தேதிக்கு பிறகு புதிய பதவியோடு பண வரவையும் காணலாம். வெற்றி வாய்ப்புகள் பிறகாசமாக உள்ளது. முக்கிய பொறுப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது
மாணவர்கள்:ஆசிரியர்களின் அறிவுரையை கேட்டு நடப்பது நல்லது.25-ந் தேதிக்கு பிறகு சிறப்பான பலனை காணலாம். போட்டிகளில் வெற்றி காணலாம்.
விவசாயிகள் போதிய மகசூலை பெறுவர்.கோழி,ஆடுவளர்ப்பில் நல்ல வருமானத்தை பெறுவர்.புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். பக்கத்து நிலகாரர்கள் வகையில் இருந்து வந்த தொல்லைகள் மறையும். 25-ந் தேதிக்கு பிறகு கால்நடை மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். வழக்கு, விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.
பெண்கள்: கணவன் மற்றும் குடும்பத்தாரின் அன்பு கிடைக்கும். பிள்ளைகள் வகையில் இருந்துவந்த பிரச்சினை மறையும். அண்டை வீட்டார்களின் தொல்லையில் இருந்து விடுபடுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். சகஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். பெண் காவலர்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். புதிய பதவி தேடி வரும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 18-ந் தேதிக்கு பிறகு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏறபடும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும் 11,12,13-ந் தேதிகளில் பிறந்த வீட்டில் இருந்து உதவி கிட்டும். புத்தாடை, அணகலன்கள் வாங்கலாம். 21,22,23-ந் தேதிகளில் சகோதரிகளால் பொன், பொருள் கிடைக்கும்.
உடல்நலம்: சிறப்பாக இருக்கும். 2-ந் தேதிக்கு பிறகு பிள்ளைகள் உடல்நலம் மேம்படும். வயிறு பிரச்சினை, பயண பயம் நீங்கும். 16,17,18,26,27-ந் தேதிகளில் பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். ஒருவித பயம் ஆட்கொள்ளும். 24,25-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்டம்: 4,8 ஆகிய எண்கள் அதிர்ஷ்ட எண்கள் ஆகும். சிவப்பு, மஞ்சள்13-ந் தேதி வரை செந்தூரம் அதிர்ஷ்ட நிறங்களாகும். 1,2,3,4,7,8,11,12,13,19,20,21,22,23, 28,29,30,31. ஆகிய தேதிகள் அதிர்ஷ்டமான நாட்கள் ஆகும்.
வழிபாடு: துர்க்கை வழிபாடு சிறப்பை தரும். வழக்கம்போல சனிபகவானை வணங்கி வாருங்கள். மேலும் பார்வையற்றவர்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். சனிக்கிழமை காக்கைக்கு அன்னம் படைத்து உணவு உண்ணுங்கள்.புதன் கிழமை குல தெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு பசுந்தழை போடுங்கள். ஏழைகளுக்கு பாசி பயறு தானம் செய்யலாம். 13-ந் தேதிக்கு பிறகு சூரியனை தரிசனம் செய்யுங்கள்.
மகரம்
மகர ராசி நேயர்களே! மாத பிற்பகுதியில் நன்மைகள் அதிகரிக்கும். சூரியன் 13-ந் தேதி சாதகமான இடத்திற்கு வருவதே இதற்கு காரணம். மேலும் கேது, சுக்கிரனால் கிடைத்து வந்த நற்பலன்களும் தொடரும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். முயற்சிகள் வெற்றி அடையும். உங்கள் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு அதிகரிக்கும்.அரசு வகையில் அனுகூலம் ஏற்படும்.
குடும்பம்: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். 18-ந் தேதிக்கு பிறகு பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 5,6-ந்தேதிகளில் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மை ஏற்படும். ஆனால் 16,17,18-ந் தேதிகளில் உறவினாகள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். 9,10-ஆகிய தேதிகளில் பெண்களால் நற்பலனை எதிர் நோக்கலாம். சுகம் ஏற்படும். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.
உத்தியோகம்: வேலைப்பளு அதிகரிக்கும். ஆனாலும் சுக்கிரன் சாதகமான இடத்தில் இருப்பதால் உங்களின் முனனேற்றம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படாது. மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். 7-ந் தேதிக்கு பிறகு இடமாற்ற பீதி மறையும். ஆனால் சிலருக்கு வீண் மனக்கவலை வரலாம்.சற்று ஒதுங்கி இருக்கவும். அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம். அவர்கள் தங்கள் கோரிக்கைகளை 18-ந் தேதிக்குள் கேட்டு பெற்று கொள்ளவும். 3,4,30,31-ந் தேதிகளில் சிறப்பான பலன்களை காணலாம்.எதிலும் வெற்றி காணலாம். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.குருவால் வேலையில் சுறுசுறுப்பு அற்ற நிலை, இருப்பிட மாற்றம் முதலியன ஏற்படலாம். வீண் அலைச்சல் ஏற்படும்.
வியாபாரம்: வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். வருவாய் அதிகரிக்கும். தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர்.13-ந் தேதிக்குபிறகு பொருளாதார வளம் கூடும். லாபம் சிறப்பா இருக்கும் பணவிரயம் அகலும். புதிய தொழில் அனுகூலத்தை கொடுக்கும். 7,8,11,12,13-ந் தேதிகளில் சிற்சில தடைகள் வரலாம். 21,22,23-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கலாம்.25-ந் தேதிக்கு பிறகு பகைவர்களால் இடையூறு வரலாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.
கலைஞர்கள்: புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும்.அரசியல்வாதிகள், பொதுநல தொண்டர்கள் சீரான பலனை காண்பர்.25-ந் தேதிக்கு பிறகு போதிய வருமானம் இருந்தாலும் எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைப்பது அரிது
மாணவர்கள்: ஆசிரியர்கள் ஆலோசனை கிடைக்கும்.ஆனாலும் புதன் சாதகமற்ற நிலையில் இருப்பதால் கல்வியில் சிறக்க அதிக சிரத்தை எடுக்க வேண்டியதிருக்கும். கெட்ட மாணவர்களோடு திரிந்தவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர்.
விவசாயிகள் சிறப்படையும். வருமானத்திற்கு குறை இருக்காது. கீரை வகைகள், காய்கறிகள், பயறுவகைகள், நெல்,உளுந்து போன்றவைகள் நல்ல மகசூலை கொடுக்கும். வழக்கு விவகாரங்கள் திருப்திகரமாக இருக்கும்.
பெண்கள்:வீட்டினுள் சிற்சில பிரச்சினை, உறவினர்கள் வகையில் மனக்கிலேசம், பொருள் இழப்பு முதலியன 7-ந் தேதிக்கு பிறகு மறையும். அதன்பிறகு குடும்பத்தில் நற்பெயர் எடுப்பர். கணவனின் அன்பு கிடைக்கும். உங்களால் குடும்பம் சிறக்கும். 14,15-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன் வாங்கலாம்.24,25-ந் தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பண உதவி கிடைக்கும். அண்டை வீட்டார் உதவிகரமாக இருப்பர்.
உடல் நலம்: செவ்வாயால் உடல்நலம் லேசாக பாதிக்கப்படலாம். குறிப்பாக பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. 13-ந் தேதிக்கு பிறகு உடல் நலம் சிறப்படையும். கண் தொடர்பான நோய் பூரண குணம் அடையும்.1,2,28,29-ந் தேதிகளில் வாயு தொடர்பான உபாதை வரலாம். 19,20-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். ஒருவித பயம் ஆட்கொள்ளும். 26,27-ந் தேதிகளில் பண விஷயத்தில் கவனம் தேவை. வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்டம்: 2,3, ஆகிய எண்கள் அதிர்ஷ்ட எண்கள் ஆகும். வெள்ளை,சிவப்பு மாத பிற்பகுதியில் செந்தூரம் அதிர்ஷ்ட நிறங்களாகும்.3,4,5,6,9,10,14,15, 21,,22,23,24,25,30,31 ஆகிய தேதிகள் அதிர்ஷ்ட தேதிகள் ஆகும்.
வழிபாடு: செவ்வாய்கிழமை முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு சிவப்பு ஆடை தானம் கொடுக்கலாம். தினமும் குலதெய்வத்தை வணங்க மறந்து விடாதீர்கள். புதன்கிழமை ஏழைகளுக்கு பாசி பயறு தானம் செய்யலாம். பசுவுக்கு பசுந்தழை போடுங்கள். இதனால் இடர்பாடுகள் நீங்கி நன்மை அதிகரிக்கும்.13-ந் தேதி வரை சூரியனை காலையில் வணங்குங்கள்.

                     கும்பம்

கும்ப ராசி நேயர்களே! இந்த மாதம் சுக்கிரன் மட்டும் நன்மை தருவார். செவ்வாயால் மாதத் தொடக்கத்தில் கடவுனிள் கருணை உங்களுக்கு கிடைக்கும். நற்பலன்கள் கிடைக்கும்.
குடும்பம்: மாதத் தொடக்த்தில் புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.புதிய வீடு-மனை வாகனம் வாங்கஅனுகூலம் உண்டு. சுக்கிரனால் பெண்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். அவர்களால் பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள்.18-ந் தேதிக்கு பிறகு பொருளாதார வளம் அதிகரிக்கும். மதிப்பு, மரியாதை கூடும்.அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். 7,8-ந் தேதிகளில் உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களால் நன்மை ஏற்படும்.ஆனால்19,20-ந் தேதிகளில் உறவினாகள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்..அவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். 11,12,13-ந் தேதிகளில் சகோதரிகள் மிகவும் உதவிகரமாக இருப்பர்.அவர்களால் பண உதவி கிடைக்கும். சூரியனால் ஏற்பட்ட அவப்பெயர், அலைச்சல், சோர்வு தொடர்பான உபாதைகள் முதலியன 13-ந் தேதிக்கு பிறகு இருக்காது. ஆனால் அதன்பிறகு அவரால் வீண்விரயம் ஏற்படும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது.
உத்தியோகம்: போலீஸ் மற்றும் பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் நற்பெயர் பெறலாம். கோரிக்கைகள் நிறைவேறும். 5,6-ந் தேதிகளில் நல்ல பலனை எதிர்நோக்கலாம். எதிலும் வெற்றி காணலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். 18-ந் தேதிக்கு பிறகு அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வளர்முகமாக இருப்பீர்கள்.அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு இடமாற்ற பீதி 25-ந் தேதிக்கு பிறகு மறையும். ஆனால் சிலருக்கு வீண் மனக்கவலை வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.
வியாபாரிகள்:அதிக அலைச்சலை சந்திக்க வேண்டியதிருக்கும். ஆனாலும் உங்கள் உழைப்புக்கு ஏற்ற வருவாய் கிடைக்காமல் போகாது. கடின உழைப்புக்கு ஈடு இணை ஏதும் இல்லை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டியதிருக்கும். தொழிலில் வரும் சிறுசிறு தடங்கல்களை உடைத்து எறிந்து முன்னேற்றம் காண்பீர்கள். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். வியாபாரிகளுக்கு 18-ந் தேதிக்கு பிறகு அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். 25-ந் தேதிக்கு பிறகு யாரிடமும் பார்த்து பழகவும். குறிப்பாக யாரை நம்பியும் பணத்தை ஒப்படைக்க வேண்டாம். பொருள் களவு ஏற்பட வாய்ப்பு உண்டு. 9,10,14,15-ந் தேதிகளில் சிறுசிறு தடைகள் வரலாம். 24,25-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். பகைவர்களை எதிர்த்து வெற்றிக் கொள்ளும் ஆற்றல் இருக்கும்.
கலைஞர்கள்: சுக்கிரன் சாதகமான நிலையில் காணப்படுவதால் புதிய ஒப்பந்தங்கள் எளிதாக கிடைக்கும். உங்களுக்கு வர வேண்டிய பாராட்டு, புகழ் கிடைக்கும். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள் பொதுநல சேவகர்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். எதிர்பார்த்த பலனை பெற முடியாது.
மாணவர்கள்: சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர்களின் அறிவுரை கைகொடுக்கும்.
விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானத்தை கிடைக்க பெறலாம். பக்கத்து நிலகாரர்கள் வகையில் இருந்து தொல்லைகள்வரலாம். வழக்கு, விவகாரங்கள் சுமாராக இருக்கும்.புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.
பெண்கள்: சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை காணலாம்.வேலைக்கு செல்லும் பெண்கள் அதிக பளுவை சுமக்க வேண்டியது இருக்கும். மேல் அதிகரரிகளுடன் அனுசரித்து போகவும். சிலருக்கு வேலை மீது வெறுப்பு வரலாம். உங்கள் பொறுப்புகளை நீங்களே செய்யவும். 16,17,18-ந் தேதிகளில் பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வரும். புத்தாடை அணிகலன் வாங்கலாம்.26,27-ந் தேதிகளில் சுகம் ஏற்படும். சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பண உதவி கிடைக்கும். புதன்சாதகமற்ற இடத்தில் இருப்பதால் 7-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை வீட்டினுள் சிற்சில பிரச்சினை வரலாம். உறவினர்கள் வகையில் மனக்கிலேசம் வரலாம்.
உடல் நலம்: செவ்வாயால் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். பயணத்தின் போது சற்று கவனம் தேவை.13-ந் தேதிக்கு பிறகு பொருள் விரயம் ஏற்படும். கண் வலி வரலாம்.3,4,30,31-ந் தேதிகளில்சிலருக்கு வயிறு தொடர்பான உபாதைகள் வரலாம். 21,22,23-ந் தேதிகளில் ஒருவித பயம் ஆட்கொள்ளும். 1,2,28,29-ந் தேதிகளில் பண விஷயத்தில் கவனம் தேவை. வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.
அதிர்ஷ்டம்: 4,5 ஆகிய எண்கள் அதிர்ஷ்ட எண்கள். வெள்ளை அதிர்ஷ்ட நிறம். 5,6,7,8,11,12,13,16,17,18,24,25,26,27ஆகிய தேதிகள் அதிர்ஷ்ட நாட்கள் .
வழிபாடு: துர்க்கை வழிபாடு நடத்துங்கள். நாக தேவதையை வணங்கி வாருங்கள். சனிக்கிழமை காக்கைக்கு அன்னம் படைத்து உணவு உண்ணுங்கள். தினமும் காலையில் சூரியனை வணங்குங்கள். ஞாயிற்றுக்கிழமை கோதுமை தானம் செய்யலாம். குலதெய்வத்தை வணங்க மறந்து விடாதீர்கள். முருகனை தரிசனம் செய்து ஏழைகளுக்கு மொச்கை தானம் செய்யுங்கள்.

மீனம்


மீன ராசி நேயர்களே! இந்த மாதம் செவ்வாய், சனி, ராகு, குரு மாதம் முழுவதும் நற்பலனை தருவார்கள். புதன் 7-ந் தேதி வரை சாதகமாக இருந்து நன்மை தருவார். சுக்கிரன் 18-ந் தேதிக்கு சாதகமான இடத்துக்கு மாறுகிறார்.மற்றய கிரகங்கள் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் பாதகம் இல்லை. பல்வேறு காரியங்களை கச்சிதமாக முடிப்பீர்கள். பக்தி உயர்வு மேம்படும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிகாணலாம். பொருளாதார வளம் மேம்படும்.
குடும்பம்: தெய்வ அனுகூலம் கிடைக்கும். பொன்,பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். சகோதரிகள் மிக உறுதுணையாக இருப்பர். புதிய வீடு-மனை வாகனம் வாங்க யோகம் கூடி வரும். 18-ந் தேதிக்கு பிறகு பெண்களின் ஆதரவு கிடைக்கும்.அவர்களால் பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள்9,10-ந் தேதிகளில் உறிவினர்கள் வருகையும் அவர்களால் நன்மமையும் கிடைக்கும். ஆனால் 21,22,23-ந் தேதிகளில் சிற்சில மனக்கிலேசம் வரலாம். 14,15-ந் தேதிகளில் பெண்களால் நற்சுகம் ஏற்படும்.பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.
உத்தியோகம்: உத்தியோகம் சிறப்படையும். புதிய பதவி கிடைக்கும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி உற்சாகம் அடைவீர்கள். கோரிக்கைகள் நிறைவேறும். இடமாற்ற பீதி 13-ந் தேதிக்கு பிறகு மறையும். ஆனால் அதன்பிறகு அலைச்சலும் சோர்வும் ஏற்படும். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். மேல் அதிகாரிகளின் கருணைபார்வை கிடைக்கும். 7,8-ஆகிய தேதிகளில் எதிர்பாராத நன்மை கிடைக்க வாய்ப்பு உண்டு. எதிலும் வெற்றி காணலாம். உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
வியாபாரம்: சிறப்படையும்.சனி ராகு மகிழ்ச்சியையும் தொழில் விருத்தியையும் தந்து கொண்டு இருக்கிறார்கள்.வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். தங்கம்,வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர். பொருள் விரையம் 13-ந் தேதிக்கு பிறகு நீங்கும். அதன்பின் சூரியன் அதிக அலைச்சலை உருவாக்குவார். ஆனாலும் சுக்கிரன் சாதகபலனால் பண வரவு அதிகமாகவே இருக்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். 11,12,13,16,17,18-ந் தேதிகளில் சந்திரனால் சிற்சில தடைகள் வரலாம். 26,27-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணம் வரலாம்.பகைவர்களை எதிர்த்து வெற்றிக் கொள்ளும் ஆற்றல் இருக்கும்.
கலைஞர்கள்:காரியத்தடை. பொருள் நஷ்டம்முதலியன 18-ந் தேதிக்கு பிறகு மறையும். அதன்பிறகு புதிய ஒப்பந்தங்கள் பெற்று சிறப்பு நிலையை அடைவர். உங்கள் முன்னேற்றத்தில் பெண்களின் பங்கு கண்டிப்பாக இருக்கும்.அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பர். வெற்றி வாய்ப்புகள் பிறகாசமாக உள்ளது. முக்கிய பொறுப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது
மாணவர்கள்: குருவால் ஆசிரியர்கள் அறிவுரை பயன்உள்ளதாக இருக்கும். போட்டிகளில் வெற்றி காணலாம். 7-ந் தேதிக்கு பிறகு சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும்.
விவசாயிகள் மஞ்சள்,எள், கொள்ளு,கேழ்வரகு, சோளம்,துவரை, கொண்டைக்கடலை பழவகைகள் போன்றவற்றில் நல்ல மகசூல் கிடைக்கும். சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். பக்கத்து நிலகாரர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். வழக்கு, விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.பண்ணை தொழில் கால்நடை செல்வம் பெருகும். கோழி,ஆடு வளர்ப்பில் நல்ல வருமானத்தை பெறுவர்.
பெண்கள்: குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். குதூகல நிலையில் இருப்பர். உங்களால் குடும்பம் சிறந்த நிலையை அடையும். குழந்தை பாக்கியம் பெற வாய்ப்பு உண்டு. அக்கம் பக்கத்தினர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும்.சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். பெண் காவலர்கள் பதவி உயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். 19,20-ந் தேதிகளில் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். பிறந்த வீட்டில் இருந்து உதவி கிட்டும். புத்தாடை அணிகலன்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. 1,2,28,29-ந் தேதிகள் சிறப்பானதாக அமையும்.சகோதரர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பண உதவி கிடைக்கும் 25-ந் தேதிக்கு பிறகு வீட்டினுள் சிற்சில பிரச்சினை வரலாம். உறவினர்கள் வகையில் மனக்கிலேசம் வரலாம். பொருள் இழப்பு ஏற்படலாம்.
உடல்நலம்: மருத்துவச் செலவு குறையும்.24,25-ந் தேதிகளில் ஒருவித பயம் ஆட்கொள்ளும். மனக்குழப்பம் ஏற்படலாம். 5,6-ந் தேதிகளில் வயிறு தொடர்பான உபாதை வரலாம்.3,4,30,31-ந் தேதிகளில் பண விஷயத்தில் கவனம் தேவை. வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.13-ந் தேதிக்கு பிறகு சோர்வும் ஏற்படும்.
அதிர்ஷ்டம்: 7,9ஆகிய எண்கள் அதிர்ஷ்ட எண்கள் ஆகும். சிவப்பு, மஞ்சள் அதிர்ஷ்ட நிறங்களாகும்.1,2,7,8,9,10,14,15,19,20,26,27,28,29 ஆகிய தேதிகள் அதிர்ஷ்டமான நாட்கள் ஆகும்
வழிபாடு: கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். மேலும் துர்க்கை வழியாடு உங்கள் நல்வாழ்வுக்கு துணை நிற்கும். தினமும் காலையில் சூரியனை வழிபட்டால் பணம் சேர்க்கை அதிகரிக்கும்.7-ந் தேதிக்கு பிறகு புதன்கிழமை குல தெய்வத்தை வணங்கி ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள.பசுவுக்கு பசுந்தழை போடுங்கள்.18-ந் தேதி வரை வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு வெண்பட்டு சாத்தி பால்பாயாசம் வைத்து வணங்கலாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.