April 26, 2024

Seithi Saral

Tamil News Channel

Rasi palan April – 2021 kaliyur narayanan

2 min read
ஏப்ரல் - 2021 மாத ராசிபலன்கள்
    ஏப்ரல் - 2021 மாத ராசிபலன்கள்

மேஷம்
மேஷ ராசி நேயர்களே! கடந்த மாதத்தை விட நற்பலன்கள் சற்று குறைவாக கிடைக்க வாய்ப்பு உண்டு. புதனும், சூரியனும் முழுக்க முழுக்க சாதகமற்ற இடத்திற்கு வந்து விட்டார்கள். முக்கிய கிரகங்கள் எதுவும் நன்மை தரும் இடத்தில் இல்லை. இதற்காக நீங்கள் கவலை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. காரணம் 4-ந் தேதியில் இருந்து குருவும், 11-ந் தேதியில் இருந்து சுக்கிரனும் உங்களுக்கு பக்க பலமாக இருந்து நற்பலனை கொடுப்பார்.
குரு 4-ந் தேதி அதிசாரம் பெற்று கும்ப ராசிக்கு மாறுகிறார். அப்போது அவரால் நன்மை கிடைக்கும். பொருளாதார வளம் மேம்படும். மேலும் அவரின் 7 மற்றும் 9-ம் இடத்து பார்வைகள் மூலமும் நற்பலனை தருவார்.
மாதத் தொடக்கத்தில் எதையுமே முயற்சியின் பேரில்தான் வெற்றிரமாக முடிக்க முடியும். சூரியனால் 14-ந் தேதி வரை வீண் விரயம் ஏற்படும். செலவை குறைத்து சிக்கனமாக இருக்க வேண்டும். 25-ந் தேதிக்கு பிறகு வீண் விவாதத்தை குறைக்க வேண்டும்.
குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். தம்பதியினர் இடையே அன்பு மேலோங்கும்.11-ந் தேதிக்கு பிறகு சுக்கிரனால் பெண்கள் ஆதரவு கிடைக்கும். அவர்கள் மூலம் காரியத்தை தொடங்கினால் அது அனுகூலத்தை கொடுக்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள். 8,9-ந் தேதிகளில் உறவினர் -கள்வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும்.அதேநேரம் 20,21-ந் தேதி- களில் அவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம்.17,18,19-ந் தேதிகளில் புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம்.
உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு குருவால் உத்தியோகம் சிறப்படையும். புதிய பதவி கிடைக்கும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி உற்சாகம் அடைவீர்கள். சக பெண்ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர் 10-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை சிலர் இட மாற்றத்தை சந்திக்க நேரிடலாம். மேல் அதி காரிகளிடம் அனுசரித்து போகவும். 6,7-ந் தேதிகளில் நல்ல பலனை எதிர்பார்க்கலாம். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். வேலையில் எந்தவித வெறுப்புணர்ச்சியும் உருவாகாது
வியாபாரிகள் தடைகளை கடந்து முன்னேற வேண்டியது இருக்கும். லாபத்திற்கு குறை இருக்காது. 4-ந் தேதிக்கு பிறகு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.14-ந் தேதி வரை அதிக அலைச்சலும் வெளியூர் பயணமும் ஏற்படும். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. கவனம் தேவை. 10,11,15,16-ந் தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலாம். பண விரயம் ஆகலாம். 24,25,26-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.
கலைஞர்களுக்கு இருந்து வந்த காரியத்தடை, பொருள் நஷ்டம்முதலியன 11-ந் தேதிக்கு பிறகு மறையும். அதன் பிறகு குதூகலமாக காணப்படுவர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசிடம் இருந்து புகழ், பாராட்டு விருது போன்றவை கிடைக்கப் பெறலாம். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் கவுரவத்தோடு காணப்பட்டாலும் எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிதே.
மாணவர்கள் சீரான நிலையில் இருப்பர். முயற்சி எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். 4-ந் தேதிக்கு பிறகு ஆசிரியர்கள், ஆன்றோர்கள் அறிவுரை கிடைக்கப் பெறலாம். தேர்வுகள் சிறப்பா எழுதுவீர்கள். காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.
விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற வருமானத்தை காணலாôம். புதிய சொத்துகள் வாங்க தடை ஏற்படும். பசு,மற்றும் கால்நடைகள் மூலம் நல்ல வருமானத்தை காணலாôம்.
பெண்கள் சிறப்பான பலனை காண்பர். கணவன் மற்றும் குடும்பத் தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும்.10-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை வீட்டினுள் சிற்சில பிரச்சினை வரலாம். உறவினர்கள் வகையில் மனக்கிலேசம் வரலாம். பொருள் இழப்பு ஏற்படலாம். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். புதிய பதவி தேடி வரும். சகஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 12,13,14,-ந் தேதிகளில் எதிர்பாராத அனுகூலத்தை அடைவர். அக்கம்-பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். 27,28-ந் தேதிகளில் சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். அவர்களால் பண உதவி கிடைக்கும்.
உடல்நலம் சிறப்படையும். சிலர் 14-ந் தேதிக்கு பிறகு சோர்வாக காணப்படுவர். 1,2,29,30-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். 3,4,5,22,23-ந் தேதிகளில் ஒருவித பயம் ஆட்கொள்ளும்.சிலர் மன உழைச்சலுடன் காணப்படுவர்
அதிர்ஷ்டம்- 3,7 மட்டுமே அதிர்ஷ்ட எண். மஞ்சள் ,வெள்ளை அனுகூலமான நிறம்.6,7,8,9,12,13,14,17,18,19,24,25, 26,27,28 ஆகிய தேதிகள் அனுகூலமானவை
வழிபாடு- சந்தர்ப்பம் கிடைக்கும் போது நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். குல தெய்வத்தை வணங்க தவறாதீர்கள். ஏழை களுக்கு இயன்ற உதவிகளை செய்யுங்கள். தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து சூரியனை வழிபடுங்கள். செவ்வாய்க் கிழமை காளி கோவிலுக்கும் முருகன் கோவிலுக்கும் சென்று அர்ச்சனை செய்யுங்கள்

      ரிஷபம்

ரிஷப ராசி நேயர்களே! இந்த மாதம் முற்பகுதி அதிக நன்மை தரும் வகையில் அமையும். முக்கிய கிரகங்களில் குரு பகவான் 4-ந் தேதி வரையிலும்,புதன் 10-ந் தேதி வரையிலும், சுக்கிரன் 11-ந் தேதி வரையிலும், சூரியன் 14-ந் தேதி வரையிலும், சாதக நிலையில் உள்ளனர். எந்த இடையூறுகளையும் முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள். மதிப்பு, மரியாதை இருக்கும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும்.
குருபகவான் 4-ந் தேதி அதிசாரம் பெற்று கும்ப ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது. இந்த காலகட்டத்தில் முன்பு போல் அவரால் நல்ல பலன்களை அள்ளிதர முடியாது. குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 5-ம் இடத்துப் பார்வை மிகச் சிறப்பாக இருக்கிறது. அதன் மூலம் எந்த இடையூறையும் உடைத்தெறிந்து முன்னேற்றம் காணலாம். 10-ந் தேதிக்கு பிறகு புதனால் பல்வேறு தடைகள் உருவாகலாம். எதிரிகளின் இடையூறு தலைதூக்கும. 14-ந் தேதிக்கு பிறகு வீண் விரயம் உருவாகலாம். பண விஷயத்தில் அதிக கவனம் தேவை.
குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. பண வரவு கூடும். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும். 15,16-ந் தேதிகளில் பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர். அவர்களால் குடும்பம் தழைக்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள். 10,11-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். 22,23-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் ஒதுங்கி இருப்பது நல்லது. 25-ந் தேதிக்கு பிறகு வீட்டினுள் சிற்சில பிரச்சினை வரலாம். பொருள் இழப்பு ஏற்படலாம். உறவினர்கள் வகையில் வீண்மனக்கசப்பு வரலாம். வெளியூர் வாசம் இருக்கும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
உத்தியோகம் பார்ப்பவர்கள் வேலையில் பங்கம் இன்றி முன்னேறுவர். அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவும், சகஊழியர்களின் பக்கபலமும் எப்போதும் கிடைக்கும். அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம்.அவர்கள் தங்கள் கோரிக்கைகளை 14-ந் தேதிக்குள் கேட்டு பெற்று கொள்ளவும். அதன்பிறகு சிலர் இட மாற்றத்தை எதிர்நோக்கலாம். 8,9-ந் தேதிகளில் நல்ல பலன்கள் கிடைக்க பெறலாம்
வியாபாரம் சிறப்படையும்.மகிழ்ச்சி நிலவும். பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் லாபம் இருக்கும். அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். தங்கம்,வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர். மாத பிற்பகுதியில் மிகுந்த கவனமுடன் இருப்பது நல்லது. பகைவர்கள் வகையில் எப்போதுமே தனிக்கவனம் செலுத்த வேண்டும். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். 27,28-ந் தேதிகளில் எதிர்பாராத லாபம் பெறும்.12,13,14,17,18,19-ந் தேதிகளில் முயற்சிகளில் சிறு சிறு தடைகள் வரலாம்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கபெறுவீர். உங்கள் முன்னேற்றத்திற்கு உறவினர்கள் ஆதரவாக இருப்பர். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவியோடு நற்புகழும் கிடைக்க பெறலாம்.11-ந் தேதிக்கு பிறகு காரியத்தடை, பொருள் நஷ்டம் ஏற்படலாம்.
மாணவர்கள் சிறப்படைவர். சற்று உழைத்தாலே வெற்றிக்கு உத்தர வாதம் கிடைக்கும். இந்த மாதத்தை பொறுத்தவரை 10-ந் தேதிக்கு பிறகு சிரத்தை எடுத்து படிக்க வேண்டியது இருக்கும்.
விவசாயிகள் போதிய வருமானத்தை காண்பீர்கள். நெல், பாசி பயறு, மஞ்சள், சோளம் போன்ற பயிர்களில் நல்ல வருமானம் கிடைக்கும். கால்நடை செல்வம் பெருகும். பசுவளர்ப்பிலும் போதிய வருவாயை பெறலாம்.
பெண்கள் சிறப்பான நிலையில் இருப்பர். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். குடும்பத்தாரின் அன்பு கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். 1,2,29,30-ந் தேதிகளில் சிறப்பான பலனை காணலாம். சகோதரிகளால் பண உதவி கிடைக்கும். 20,21-ந் தேதிகளில் பிறந்த வீடடில் இருந்து பொருட்கள் கிடைக்க பெறலாம். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். 25-ந் தேதிக்கு பிறகு வீண் விவாதத்தை வளர்க்காமல் பொறுமையை கடைபிடிப்பது நல்லது.
உடல்நலம் சீராக இருக்கும். 10-ந் தேதிக்கு பிறகு பித்தம், மயக்கம் கண் தொடர்பான வியாதிகளுக்கு பணம் செலவாகலாம். 3,4,5-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். 6,7ஆகிய தேதிகளில் ஒருவித பயம் ஆட்கொள்ளும். வயிறு தொடர்பான உபாதை வரலாம்
அதிர்ஷ்டம்- 1,5 அதிர்ஷ்ட எண்கள் ஆகும். செந்தூரம், பச்சை உங்களுக்கு உகந்த நிறங்கள் ஆகும்.1,2,8,9,10,11,15, 16,20,21,27,28,29,30ஆகிய தேதிகள் அதிர்ஷ்ட நாட்கள் ஆகும்.
வழிபாடு-சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். ஊனமுற்ற ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள்.ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். செவ்வாய்க்கிழமை முருகனை வழிபட்டால் நோய், நொடிகள் வராமல் பாதுகாக்கலாம்.

மிதுனம்
மிதுன ராசி நேயர்களே! கடந்த மாதத்தை விட கூடுதல் பலன்களை இந்த மாதம் எதிர் நோக்கலாம். சூரியன், கேது ஆகியோர் மாதம் முழுவதும் நன்மைகளை தருவார்கள். அதோடு புதன் 25-ந் தேதி வரையிலும்,குரு 4-ந் தேதிக்கு பிறகும், சுக்கிரன் 10-ந் தேதிக்கு பிறகும் சாதகமாக இடத்தில் இருப்பார்கள். இதனால் பல்வேறு நற்பலன்களை நீங்கள் கிடைக்க பெறலாம். பொருளாதார வளம் சிறப்படையும். 14-ந் தேதிக்கு பிறகு அதிக பணப்புழக்கத்தை காணலாம். மதிப்பு, மரியாதை மேலோங்கி இருக்கும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். 25-ந் தேதிக்கு பிறகு புதனால் சிற்சில தடைகள் உருவாக வாய்ப்பு உண்டு.
குரு 4-ந் தேதி அதிசாரம் பெற்று கும்ப ராசிக்கு மாறுகிறார். இந்த காலத்தில் அவரால் நன்மைகள் கிடைக்கும். மனமகிழ்ச்சி அதிகரிக்கும். உற்சாகம் பிறக்கும். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம்.
குடும்பத்தில் பெண்களின் ஆதரவு இருக்கும். பெண்களால் நற்சுகம் கிடைக்கும்.பொருள் சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம்.10-ந் தேதிக்கு பிறகு பணவரவு கூடும். சொந்தபந்தங்கள் வருகை இருக்கும். 17,18,19-ந் தேதிகளில் சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். 12,13,14-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். 24,25,26-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் சிற்சில மனக்கிலேசங்கள் வரலாம்.
உத்தியோகம் பார்ப்பவர்கள் சீரான நிலையில் இருப்பர்.மேல் அதிகாரிகளின் ஆதரவு ஓரளவு கிடைக்கும். உங்கள் திறமைக்கு தகுந்த மதிப்பு, பாராட்டு போன்றவை கிடைக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு எப்போதுமே உண்டு.பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம்.14-ந் தேதிக்கு பிறகு அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம். கோரிக்கைகள் நிறைவேறும். 10,11-ந் தேதிகளில் எதிர்பாராத நற்பலன்கள் கிடைக்க பெறலாம்.
வியாபாரம் செழிப்படையும். வருமானத்திற்கு குறை இருக்காது. தொழிலில் லாபம் அதிகரிக்கும். தங்கம், வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். 14-ந் தேதிக்கு பிறகு வங்கி கடன் எளிதாக கிடைக்கும்.25-ந் தேதிக்கு பிறகு வெளியூர் பயணம் ஏற்படும். அதனால் செலவுகளும் அதிகரிக்கும். அதை ஈடுகட்டும் வகையில் பொருளாதார வரவு இருக்கும். 1,2,29, 30-ந் தேதிகளில் நல்ல லாபத்தை எதிர்பார்க்லாம். 15,16,20,21-ந் தேதிகளில் சந்திரனால் சிறுசிறு தடைகள் வரலாம்
கலைஞர்களுக்கு எதிரிகள் வகையில் இருந்து வந்த தொல்லைகள், அவப்பெயர்,போட்டிகள் முதலியன10-ந் தேதிக்கு பிறகு மறையும்.அதன்பிறகு புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். அரசியல்வாதிகள்முன்னேற்றம் அடைவர். பொதுநல சேவகர்கள் பாராட்டு, புகழ் கிடைக்க பெறுவர்
மாணவர்கள் சிறப்பான பலனை காணலாம். போட்டிகளில் வெற்றி பெற்று பரிசு கிடைக்க பெறுவர். 25-ந் தேதிக்கு பிறகு அதிக சிரத்தை எடுக்க படிக்க வேண்டியது இருக்கும்.
விவசாயிகள் நல்ல வருவாய் காண்பர். குறிப்பாக பாசிபயறு நெல், கொள்ளு, துவரை, கொண்டைக்கடலை சோளம், மஞ்சள், தக்காளி, பழவகைகள் போன்றவைகளில் நல்ல மகசூல் கிடைக்கும். புதியசொத்து வாங்க வாய்ப்புகள் கூடிவரும். கால்நடை செல்வம் பெருகும். பசுவளர்ப்பிலும் போதிய வருவாயை பெறலாம். வழக்கு, விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
பெண்கள் விருந்து விழா என சென்று வருவீர்கள். ஆடம்பர பொருட்களை வாங்கலாம். 4-ந் தேதிக்கு பிறகு தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவனின் அன்பு கிடைக்கும். உங்களால் குடும்பம் சிறக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு அரசின் உதவி கிட்டும்.3,4,5-ந் தேதிகளில் உன்னதமான பலனை காணலாம். சகோதரிகள்மிகவும் ஆதரவுடன் இருப்பர்.22,23-ந் தேதிகளில் பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம்.
உடல்நலம் சீராக இருக்கும். செவ்வாயால் பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம்.14-ந் தேதிக்கு பிறகு உடல் உபாதைகள் பூரண குணம் அடையும். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் வீடு திரும்புவர். 6,7-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.8,9,27,28-ந் தேதிகளில் சிலர் மன உழைச்சலுடன் காணப்படுவர். வாயு தொடர்பான உபாதை வரலாம்.
அதிர்ஷ்டம்-1,7,9 அதிர்ஷ்ட எண்கள். செந்தூரம், மஞ்சள் பச்சை யோகம் தரும் நிறங்கள்.1,2,3,4,5,10,11,12,13,14,17,18,19, 22,23,29,30 ஆகிய தேதிகள் அதிர்ஷ்டமான நாட்கள்.
வழிபாடு- பத்திரகாளி அம்மனுக்கு எலுமிச்சை பழ விளக்கு ஏற்றி வணங்கி வாருங்கள். ராகு சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அவருக்கு உளுந்து படைத்து மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள். ராகு காலத்தில் நடக்கும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும். சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று வர தவறாதீர்கள். ஆதரவற்ற மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.

கடகம்
கடக ராசி நேயர்களே! இந்த மாதம் முற்பகுதியை விட பிற்பகுதி அதிக நன்மைகள் தரும் காலமாக இருக்கும். செவ்வாய், ராகு சாதகமாக இருக்கிறார்கள். மேலும் குரு 4-ந் தேதி வரையும், சுக்கிரன் 10-ந் தேதி வரையும் நன்மை தருவார்கள். புதன் 10-ந் தேதிக்கு பிறகும், சூரியன்14-ந் தேதிக்கு பிறகும் சாதகமான வீட்டிற்கு கால் எடுத்து வைக்கிறார்கள். இதனால் வளர்ச்சி ஏறும் முகமாகவே இருக்கும். உங்களுக்கு இருந்த வந்த சிறுசிறு தடைகளும் விலகி தொட்டதெல்லாம் பொன்னாகும் காலமாக இருக்கும். புதிய வீடு-மனை வாகனம் வாங்கலாம். தேவைகள் பூர்த்தி ஆகும். உங்களை ஆட்டிபடைத்தபொல்லாப்பு அவமரியாதை 10-ந் தேதிக்கு அடியோடு விலகும். உங்களை புரிந்து கொள்ளாமல் எதிர்த்து வந்தவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும்.
குரு 4-ந் தேதி அதிசாரம் பெற்று 8-ம் இடமான கும்ப ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை. அப்போது குரு மனவேதனையும், நிலையற்ற தன்மைûயும் கொடுப்பார்.பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். வீண் விரோதத்தை உருவாக்குவார். இதற்காக கவலைகொள்ளதேவை இல்லை காரணம் அவரது 7-ம் இடத்துபார்வை சாதகமாக காணப்படுகிறது. இதனால் மந்த நிலை மாறும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்-களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும்.
குடும்பத்தில் குதூகலம் ஆரம்பமாகும். பொன், பொருள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் கைகூடும்.பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். 10-ந் தேதிக்கு பிறகு சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். குறிப்பாக 20,21-ந் தேதிகளில் அவர்களால் பணம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். 15,16-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். 27,28-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் சிற்சில மனக்கிலேசங்கள் வரலாம்.சற்று ஒதுங்கி இருக்கவும்
உத்தியோகம் பார்ப்பவர்கள் சிறப்பன நிலையில் இருப்பர். அலுவலகத்தில் உங்கள் பெருமை பறைசாற்றப்படும். பண வரவு அதிகமாக இருக்கும். மேல் அதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர். போலீஸ், காவல், ராணுவம் போன்ற துறையில் பணிபுரிபவர்கள் உன்னத நிலையை அடைவர். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும்.12,13, 14-ந் தேதிகளில் உங்கள் அதிகாரம் கொடி கட்டி பறக்கும்.
வியாபாரிகள் நல்ல லாபத்தை காண்பர். புதிய தொழில் அனுகூலத்தை தரும். வேலை இன்றி இருப்பவர்கள் துணிந்து சுய தொழிலில் இறங்கலாம். எதிரிகளின் தடைகள், இருக்குமிடம் தெரியாமல் போகும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை மேலோங்கும். பெண்களை பங்குதாரராக கொண்ட வர்த்தகம் அதிக லாபத்தை தரும். தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து 10-ந் தேதிக்கு பிறகு விடுபடுவர். சந்திரனால் 17,18,19,22,23-ந் தேதிகளில் சிறு தடைகள் வரலாம். 3,4,5-ந் தேதி-களில் எதிர்பாராத பணவரவு இருக்கும்.
கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். உங்கள் முன்னேற்றத்திற்கு பெண்கள் பின்னணியாக இருப்பர்.10-ந் தேதிக்கு பிறகு எதிரிகள் தொல்லை அதிகரிக்கும். போட்டிகள்அதிகம் இருக்கும். பொதுநல சேவகர்கள் நல்ல வளத்துடன் காணப்படுவர். அரசியல்வாதி -களுக்கு கடந்த மாதம் இருந்த பிற்போக்கான நிலையில் இருந்து விடுபடுவர். தேர்தல்களில் வெற்றி வாய்ப்புகள் பிறகாசமாக உள்ளது.
மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். 10-ந் தேதிக்கு பிறகு போட்டி, பந்தயங்களில் வெற்றி கிட்டும். கெட்ட சகவாசத்திற்கு விடைகொடுப்பர். காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.
விவசாயிகள் மிகுந்த நல்ல பலனை எதிர்நோக்கலாம். விளைச்சல் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக கற்பனை செய்து வந்த சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும். பக்கத்து நிலகாரர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். ஆடு, கோழி, பசு, கால்நடை வகையில் நல்ல வருமானத்தை பெறுவர்.
பெண்கள் குடும்ப முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பர். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர். குடும்ப பிரசினைக்கு தீர்வு ஏற்படும் கணவன்-மனைவி இடையே அன்னியோன்ய மான சூழ்நிலை இருக்கும்.வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். பெண் காவலர்களுக்கு மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். புதிய பதவி தேடி வரும். வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.6,7-ந் தேதிகளில் சகோதரர் களால் பண உதவி கிடைக்கும். 24,25,26-ந் தேதிகளில் பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம்.
உடல்நலம் சிறப்படையும். உஷ்ணம், தோல், தொடர்பான நோய் பூரண குணம் அடையும். விபத்து பயம் அடியோடு நீங்கும். 8,9-ந் தேதிகளில் வீண் விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.10, 11-ந் தேதிகளில் வாயு தொடர்பான உபாதை வரலாம்.1,2,29,30-ந் தேதிகளில் சிலர் மன உழைச்சலுடன்காணப்படுவர்.
அதிர்ஷ்டம்-3,5 அதிர்ஷ்ட எண்கள் ஆகும. சிவப்பு, பச்சை,நீலம் யோகம் தரும் நிறங்கள் ஆகும். 3,4,5,6,7,12,13, 14,15,16,20,21,24,25,26 ஆகிய தேதிகள் அதிர்ஷ்டம் தரும் நாட்கள் ஆகும்.
வழிபாடு- வியாழக்கிழமை தெட்சணாமூர்த்தியை வழிபட்டு கொண்டை கடலையை தானம் செய்யுங்கள். ஆசிரியர்கள், ஞானிகள், சன்னியாசிகள் ஆகியோருக்கு இயன்ற காணிக்கை வழங்கி ஆசி பெறுங்கள். சனிக்கிழமை சனீசுவரனை வணங்கி ஊனமுற்ற ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள். ஏழைகளுக்கு கொள்ளு தானம் செய்யுங்கள். துர்க்கை வழியாடு செய்யுங்கள்.

சிம்மம்
சிம்ம ராசி நேயர்களே! நற்பலன்கள் அதிகரிக்கும் மாதமாக இது இருக்கும். கடந்த மாதம் சாதகமற்ற நிலையில் இருந்த குரு 4-ந் தேதி அதிசாரம் பெற்று 7-ம் இடமான கும்ப ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம். புதனை எடுத்துக் கொண்டால் 10-ந் தேதி வரையிலும் அதன்பின் 25- ந் தேதிக்கு பிறகும் நற்பலன்களை தருவார். சுக்கிரன், சனிபகவான் வழக்கம் போல் தொடர்ந்து பல்வேறு உதவிகளை தந்து கொண்டிருப்பார்கள்.
வசதிகள் பெருகும்.மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.4-ந் தேதிக்கு பிறகு குரு பக்கபலமாக இருப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். எண்ணற்ற பல வசதிகள் கிடைக்கும். அவர் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுபநிகழ்ச்சியை தருவார். செல்வாக்கு மேம்படும்.
குடும்பத்தில் உருவான பிரச்சினைகளில் இருந்து கடந்த மாதம் தான் மீண்டு பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இந்த மாதம் மகிழ்ச்சி அதிகரிக்கும். குறிப்பாக 9-ந் தேதிவரை குதூகலம் கூடுதலாகவே கிடைக்கும் கணவன்-மனைவி இடையே அன்பு மலரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். 27-ந் தேதிக்கு பிறகு பெண்களால் அதிக நன்மைகள் வந்து சேரும்.17,18,19-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.1,2,29,30-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் சிற்சில மனக்கிலேசங்கள் வரலாம்.
உத்தியோகம் பார்ப்பவர்கள் குருவால் முன்னேற்றமான பலனை பெறலாம். மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். வேலைப்பளு குறையும். சக பெண்ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.அரசு ஊழியர்களுக்கு இருந்து வரும் பிரச்சினை 14-ந் தேதிக்கு பிறகு மறையும். 15,16-ந் தேதிகளில் சிறப்பான பலனை காணலாம்.
வியாபாரிகள் நல்ல லாபம் கிடைக்க பெறுவர்.தங்கம்,வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். அரசு வகையில் இருந்து வந்த அனுகூலமற்ற போக்கு 14-ந் தேதிக்கு பிறகு மறையும். அதுவரை வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.6,7-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் வருவாய் கிட்டும். 20,21,24,25,26-ந் தேதிகளில் சந்திரனால் சிறுசிறு தடைகள் வரலாம்.11-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை சிலர் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்குவர். எனவே யாரிடமும் பார்த்து எச்சரிக்கையுடன் பழகவும். அதன்பிறகு பொருளாதாரத்தில் மேலும் வளத்தை காணலாம்.
மாணவர்கள் கல்வியில் சிறப்பான நிலையை அடைவர். போட்டி பந்தயங்களில் வெற்றி காண்பர்.11-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை சிலர் கெட்டப் பெயர் எடுக்க வாய்ப்பு உண்டு. எனவே அவர்கள் நடத்தையிலும் நடவடிக்கையிலும் சற்று கவனம் தேவை.
விவசாயம் சீரான பலன் கிடைக் கும்.கோதுமை, நெல், சோளம், காய்கறி வகைகள், பழவகைகள் ஆகியவற்றின் விளைச்சல் சிறப்பாக இருக்கும். கால்நடை செல்வம் பெருகும். பால்பண்ணை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.
கலைஞர்கள் சிறப்பாக காணப்படுவர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவீர்கள். சமூகசேவகர்கள் நற்புகழையும் பதவியையும் பெறலாம். அரசியல்வாதிகள் 11-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை மதிப்பு மரியாதை எதிர்பார்த்தபடி அமையாது. சிலர் பொல்லாப்பை சந்திக்க வேண்டியதிரு -க்கும்.பொறுமையுடன் வீண் விவாதங்-களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
பெண்கள் மகிழ்ச்சி பொங்க காணப்படுவர். 4-ந் தேதிக்கு பிறகு திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணம் கைகூடும் அதுவும் நல்ல வரனாக அமையும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். தோழிகள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். வியாபாரம் செய்யும் பெண்களுக்கு சகோதரர்கள் மிக உறுதுணையாக இருப்பர். 8,9-ந் தேதிகளில் சகோதரிகளால் உதவி கிடைக்கும். பணம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள்.27,28-ந் தேதிகளில் குதுகலமாக காணப்படுவீர்கள். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம்.
செவ்வாயால் சிலரது வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. கவனம் தேவை.அக்கம் பக்கத்தினர்களின் தொல்லை ஏற்படும். இருப்பினும் சனிபகவானால் அவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெற்று இருக்கிறீர்கள். உங்கள் ஆற்றல் மேம்பட்டு இருக்கும்.
உடல்நலம் சுமாராக இருக்கும். செவ்வாயால் உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. உடல் நலனில் முன் னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். 10,11-ந் தேதிகளில் வீண் விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். 3,4,512,13,14-ந் தேதிகளில் வாயு தொடர்பான உபாதை வரலாம். சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள்.
அதிர்ஷ்டம்-3,7ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும். மஞ்சள்,வெள்ளை அதிர்ஷ்ட நிறங்கள் ஆகும். 6,7,8,9,15,16, 17,18,19,22,23,27,28,ஆகிய தேதிகள் சிறப்பான நாட்கள்.
வழிபாடு- துர்க்கை வழிபாடு நடத்துங்கள்தினமும் காலையில் சூரியனை தரிசனம் செய்யுங்கள். ஏழைகளுக்கு துவரை தானம் செய்யுங்கள் செவ்வாய்கிழமை முருகனை வழிபட்டு சிவப்பு ஆடை தானம் கொடுக்கலாம். 11-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை புதன் கிழமை குல தெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு பசுந்தழை போடுங்கள்.

கன்னி
கன்னி ராசி நேயர்களே! கடந்த மாதம் குடும்பத்தில் எண்ணற்ற பிரச்சினைகளில் சிக்கி தவித்திருப்பீர் -கள் குறிப்பாக கணவன்-மனைவி இடையே பிணக்குகள் வந்திருக்கும். சிலர் வீட்டை விட்டே பிரியும் நிலைகூட உருவாகி இருக்கலாம். இதற்கு புதன் சாதகமற்ற நிலையில் இருந்ததே காரணம். அந்த புதன் 10-ந் தேதிக்குப் பிறகு இடமாறி 8-ம் வீட்டிற்கு வருகிறார். அதன்பின் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். பிரிந்திருந்த தம்பதியினர் ஒன்று சேருவர். சுக்கிரன் 11-ந் தேதி முதல் சாதகமாக இருப்பதால் பெண்கள் உதவிகரமாக இருப்பர். விருந்து வழா என சென்று வருவீர்கள்.
குரு 4-ந் தேதி அதிசாரம் பெற்று 6-ம் இடமான கும்ப ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை. அப்போது அவரால் மனதில் தளர்ச்சி ஏற்படும். ஆனால் குருவின் 9-ம் இடத்துப் பார்வை சிறப்பாக உள்ளது. இதனால் துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம்.பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது.
இந்த மாதம் கேதுவால் இறைவனின் அனுக்கிரம் கிடைப்பதால் மனமகிழ்ச்சி -யுடன் சிறப்பாக இருக்கும். குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள்.10-ந் தேதிக்குப் பிறகு உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். வசதிகள் பெருகும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். குறிப்பாக 24,25,26-ந் தேதிகளில் அவர்களால் பண உதவி கிடைக்கும். 3,4,5-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் சிற்சில மனக்கிலேசங்கள் வரலாம். அவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். அதேநேரம் 20,21-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.
உத்தியோகம் பார்ப்பவர்கள் வேலையில் அதிக பளுவை சுமக்க வேண்டியதிருக் -கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போக வேண்டும். 10-ந் தேதிக்கு பிறகு சக பெண்ஊழியர்கள்மிகவும் ஆதரவுடன் இருப்பர்.வேலை நிமித்தம் பிரிந்திருந்தவர் -கள் ஒன்று சேருவர்.14-ந் தேதிக்கு பிறகு அரசு வேலையில் இருப்பவர்கள் வேலையில் அதிக அக்கறையுடன் இருக்கவும்.17,18,19-ந் தேததிகளில் அதிக பலன்கள் கிடைக்கும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். 25-ந் தேதிக்கு பிறகு புதன் சாதமற்ற நிலைக்கு செல்வதால் வீண் பொல்லாப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு. சற்று பொறுமையை கடைபிடியுங்கள்.
வியாபாரிகள் உழைப்பின் பேரில் முன்னேற்றம் அடைவர். வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கவும். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் 10-ந் தேதிக்கு பிறகு மறையும். அதன்பின் அதே பெண்கள் தவறை உணர்ந்து உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். 14-ந் தேதிக்கு பிறகு அரசு வகையில் அனுகூலம் இல்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். 8,9- ந் தேதிகளில் நல்ல லாபம் கிடைக்கும். 22,23,27,28-ந் தேதிகளில் சந்திரனால் சிறுசிறு தடைகள் வரலாம்.25-ந் தேதிக்கு பிறகு சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகலாம். எனவே யாரிடமும் பார்த்து எச்சரிக்கையுடன் பழகவும்.
கலைஞர்கள் சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும்.10-ந் தேதிக்கு பிறகு சிறப்பான பலனை காண்பர் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகள் சிறப்பு அடைவர். முக்கிய பொறுப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது. பொதுநல சேவகர்கள் பாராட்டு புகழ் கிடைக்கப் பெறலாம்.
மாணவர்கள்- முன்னேற்றம் காணலாம். ஆசிரியரின் அறிவுரையை கேட்டு நடந்தால் மேலும் சிறப்பு அடையலாம். 25-ந் தேதிக்கு பிறகு சிலர் கெட்ட சகவாசத்திற்கு வழிவகுக்கலாம். பெற்றோர்கள் மிகவும் கவனமாக இருக்கவும்.
விவசாயிகள் உழைப்பிற்கு தகுந்த மகசூலை பெறுவீர்கள். பொருளாதார வளம் இருந்து கொண்டே இருக்கும். பயறுவகைகள், காய்கறிகள் போன்ற பயிர்கள் சிறப்பான வருமானத்தை தரும். ஆடு,கோழி,பசு,கால்நடை வகையில் நல்ல வருமானத்தை பெறுவர்.வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு.
பெண்களுக்கு மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. 10-ந் தேதிக்கு பிறகு உங்கள் கை ஓங்கி நிற்கும். குடும்பத்தில் உங்களால் வசதிகள் மேம்படும். கணவரின் அன்பு கிடைக்கும்.சிலர் குழந்தை பாக்கியம் பெறுவர். பிள்ளைகள் வளர்ப்பில் மகிழ்ச்சி அடைவர். சகோதரிகள் மிக உறுதுணையாக இருப்பர். வேலைக்கு செல்லும் பெண்கள் நற்பலன் கிடைக்க பெறுவர். வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பளஉயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.. பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர்.அவர்கள் தங்கள் கோரிக்கைகளை கேட்டு பெற்று கொள்ளவும்.1,2,29,30-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். 10,11-ந் தேதிகள் அனுகூலமான நாட்களாக அமையும். சகோதரர்களால் பணஉதவி கிடைக்கும். 25-ந் தேதிக்கு பிறகு வெளியில் பலவேறு விஷயங்களில் பெருமையாக பேசப்பட்டாலும் வீட்டில் விட்டுக்-கொடுத்து போவது நல்லது. இல்லையென்றால் வீண்மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள்.
உடல்நலம் சுமாராக இருக்கும். சூரியனால் ஏற்பட்ட அவப்பெயர், அலைச்சல், சோர்வு வயிறு தொடர்பான உபாதைகள்14-ந் தேதிக்கு பிறகு இருக்காது.12,13,14-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். பண விஷயத்தில் கவனம் தேவை.6,7,15, 16-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம். சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள்.
அதிர்ஷ்டம்- 4,7 ஆகியவை அதிர்ஷ்ட எண்கள் ஆகும். சிவப்பு,பச்சை அதிர்ஷ்ட நிறங்கள் ஆகும்.1,2,8,9,10,11,17,18,19, 20,21,24,25,26,29,30 ஆகிய தேதிகள் சிறப்பான நாட்கள்.
வழிபாடு- சனிக்கிழமை பெருமாளையும், செவ்வாய்க்கிழமை முருகனையும் வழிபட்டு வாருங்கள். ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் எழுந்து சூரியனை வழிபட்டு ஏழைகளுக்கு கோதுமை கொடுக்கலாம். நாக தேவதையை வணங்கி வாருங்கள். ராகுவுக்கு நீல நிறவஸ்திரத்தை சாத்தி அர்ச்சனை செய்யுங்கள்.

துலாம்
துலாம் ராசி நேயர்களே! இந்த மாதம் குரு 4-ந் தேதிக்கு பிறகும்,சூரியன்14-ந் தேதி வரையிலும், புதன் 10-ந் தேதி வரையும் 25-ந் தேதிக்கு பிறகும் நற்பலனை கொடுப்பார்கள். 14-ந் தேதி வரை மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும். தேவைகள் பூர்த்தியாகும்.
குருபகவான் 4-ந் தேதி அதிசாரம் பெற்று 5-ம் இடமான கும்ப ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம். அவர் குடும்பத்தில் குதூகலத்தை கொடுப்பார். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.இதனால் வாழ்க்கையில் வளம் காணலாம்.
குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். அது சிறப்பாக முடியும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதனால் 10-ந் தேதிக்குப் பிறகு பிரச்சினை தலைதூக்கலாம். கணவன்-மனைவி இடையே பிணக்குகள் வந்து போகும். ஒரு வருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். அதே நேரம் 25-ந் தேதிக்கு பிறகு நிலைமை சீரடையும். குடும்ப பிரச்சினையில் இருந்து விடுதலை பெறுவீர்கள். பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும். தம்பதியினரிடையே அன்பு மேலோங்கும்.உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும்.புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் பெருமையும் கிடைக்கும். 6,7-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் சிற்சில மனக்கிலேசங்கள் வரலாம். அவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். அதேநேரம் 22,23-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். உங்கள் முனனேற்றத்திற்கு சகோதரிகள் மிகவும் உறுதுணையாக இருப்பர். குறிப்பாக அவர்கள் மூலம் 27,28-ந் தேதிகளில் பல்வேறு நன்மைகளை பெறலாம்.
உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றமான பலனை காண்பர். வேலைப்பளு குறையும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். 11-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். ஆனால் உங்கள் திறமைக்கு ஏற்ற கவுரவம் கிடைக்கும்.வேலையில் அதிக கவனமுடன் இருக்கவும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். 20,21-ந் தேதிகளில் எதிர்பாராத நன்மைகளை காணலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.
வியாபாரிகள் முன்னேற்றமான பலனை பெறுவார்கள்.பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். தங்கம்,வெள்ளி, வைர நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். 14-ந் தேதிக்கு பிறகு பல முக்கிய கிரகங்கள் சாதமற்ற நிலையில் இருப்பதால் பகைவர்களின் தொல்லை அவ்வப்போது வரலாம். சற்று கவனம் தேவை.சிலர் பொருட்களை களவு கொடுக்க நேரிடலாம். அரசிடம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது அரிது. அதோடு சிலர் அரசின் மூலம் பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். எனவே உங்கள் வரவு-செலவு கணக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். 224,25,26,29,30-ந் தேதிகளில் சந்திரனால் தடைகள் வரலாம். பண விரயம் ஆகலாம்.10,11-ந் தேதிகளில் நல்ல பணவரவை எதிர்பார்க்கலாம். பகைவர்களை எதிர்த்து வெற்றிக் கொள்ளும் ஆற்றல் இருக்கும்.
கலைஞர்களுக்கு முயற்சிகளில் இருந்த தடையும், மனதில் ஏற்பட்ட சோர்வும் 10-ந் தேதிக்கு பிறகு மறையும். ஆனால் அதன்பிறகு பெண்கள் வகையில் தொல்லைகள் இடர்பாடுகள் வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். அரசியல்வாதிகள் சமூகநல தொண்டர்கள் சுமாரான பலனையே பெறுவர். எதிர்பார்த்த பதவி கிடைக்க வாய்ப்பு இல்லை. 8,9 ஆகிய தேதிகளில் சிலர் மன உழைச்சலுடன் காணப்படுவர்.
மாணவர்கள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர்.25-ந் தேதிக்கு பிறகு புதனால் பரிசு பாராட்டு கிடைக்கும். ஆசிரியர்கள், ஆன்றோர்களின் ஆதரவு கிடைக்கும்.
விவசாயிகள் நல்ல வருமானத்தை பெறுவர். குறிப்பாக நெல், பாசிபயறு நெல், ,துவரை, கொண்டைக்கடலை சோளம், மஞ்சள், மற்றும் பழ வகைகள் போன்ற பயிர்கள் மூலம் அதிக லாபத்தை காண்பர். 25-ந் தேதிக்கு பிறகு கால்நடை செல்வம் பெருகும். பால்பண்ணை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும். வழக்கு, விவகாரங்கள் சிறப்பாக இருக்கும்.
பெண்களுக்கு குதூகலம் அதிகரிக்கும் நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். அதுவும் நல்ல வரனாக அமையும். 10-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அதன்பிறகு விரும்பிய பொருட்கள் வாங்கி குவிப்பீர்கள். கணவரிடம் அன்பையும் ஆதரவையும் கிடைக்கப் பெறலாம். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். சுய தொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். 3,4,5-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். 12,13,14 ஆகிய நாட்கள் சிறப்பானதாக அமையும். விருந்து விழா என சென்று வருவீர்கள். சகோதரிகளால் பணஉதவி கிடைக்கும்.
உடல் நலம் சுமாராக இருக்கும்.14-ந் தேதிக்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும். வயிறு தொடர்பான உபாதைகள் வரலாம். 15,16-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.17,18,19-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.
அதிர்ஷ்டம்- 2,3 எண் உங்களுக்கு அதிர்ஷ்டம் தரும். மஞ்சள்,செந்தூரம் ஆகிய நிறங்கள் அதிர்ஷ்ட நிறங்கள். 3,4,5,10,11,12,13,14,20,21,22,23,27,28 ஆகிய தேதிகள் அதிர்ஷ்ட தேதிகள் ஆகும்.
வழிபாடு- துர்க்கை வழிபாடு உங்கள் துயரத்தை போக்கி மனத்தைரியத்தை வரவழைக்கும்.பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். ஊனமுற்றவர்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு வெண்பட்டு சாத்தி வழிபடுங்கள்.சுக்கிரனுக்கு பால்பாயாசம் வைத்து வணங்கலாம். 14-ந் தேதிக்கு பிறகு தினமும் காலையில் சூரியனை வணங்குங்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசி நேயர்களே! முக்கிய கிரகங்களில் சனி மாதம் முழுவதும் நற்பலனை கொடுப்பார். இந்த மாதத்தை பொறுத்தவரை 10-ந் தேதி வரை சுக்கிரனும், 14-ந் தேதிக்கு பிறகு சூரியனும் நன்மைகள் தருவார்கள். மேலும் புதன் 11-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை சாதகமான இடத்தில் இருப்பார்.சுக்கிரனும், சூரியனும் அடுத்தடுத்து வெற்றியை தேடித்தருவார்கள். பொருளாதார வளம் இருக்கும். மதிப்பு மரியாதை சிறப்படையும். தேவைகள் பூர்த்தி யாகும். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் வரவு இருக்கும். தெய்வ அனுகூலம் கிடைக்கும்.
குருபகவான் 4-ந் தேதி அதிசாரம் பெற்று 4-ம் இடமான கும்ப ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை. குரு மனஉளச்சலையும், உறவினர் வகையில் வீண்பகையையும் உருவாக்குவார்.
குடும்பத்தில் கடந்த மாதமே பிரச்சினைகள் தொடங்கி இருக்கும். கணவன்-மனைவி இடையே பிணக்குகள் ஏற்பட்டிருக்கும். இவை அனைத்தும் 10-ந் தேதிக்கு பிறகு தணிந்து ஒற்றுமை உருவாகும். ஆனால் மீண்டும் 25-ந் தேதிக்கு பிறகு சிறு சிறு ஊடல்கள் உருவாகலாம். எனவே தம்பதியினர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். 8,9-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். 24,25,26-ந் தேதிகளில் விருந்தினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும்.
உத்தியோகம் பார்ப்பவர்கள் பொதுவாக பின்தங்கிய நிலையில் இருந்து வருவார்கள். ஆனால் இந்த மாதம் 14-ந் தேதிக்கு பிறகு சூரியன் மற்றும் புதனின் அருளால் நல்ல பலனை காணலாம். புதிய பதவி வந்து சேரும். மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் கோரிக்கைகள் நிறைவேறும். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவர்.22,23-ந் தேதிகளில் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு சனிபகவான் காரிய அனுகூலத்தையும் பொருளாதார வளத்தையும் மகிழ்ச்சியையும் தொழில் விருத்தியையும் தந்து கொண்டு இருக்கிறார். கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் ஆகியவை சிறந்து விளங்கும். 14-ந் தேதிக்கு பிறகு எதிரிகளால் இருந்து வந்த முட்டுக்-கட்டைகள்விலகும்.12,13,14-ந் தேதிகளில் நல்ல வருவாய் கிடைக்கும். 3,4,5,27, 28-ந் தேதிகளில் சந்திரனால் சிறு சிறு தடைகள் வரலாம்.பண விஷயத்தில் கவனம் தேவை.
கலைஞர்கள் முன்னேற்றம் காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.10-ந் தேதிக்கு பிறகு முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். அரசியல்வாதிகள் சுமாரான நிலையிலேயே இருப்பர். எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தாமதம் கிடைக்கும். 10,11-ந் தேதிகளில் சிலர் மன உழைச்சலுடன் காணப்படுவர்.
மாணவர்கள் அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியது இருக்கும்.11-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை நல்ல பலனை எதிர் பார்க்கலாம். போட்டிகளில் வெற்றி கிட்டும்.
விவசாயிகள் அதிகமாக உழைத்துதான் வருமானத்தை பெருக்க வேண்டியது இருக்கும். கால்நடை, பசுவகைகள் மூலம் எதிர்பார்த்த வருவாய் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் பாதகமின்றி இருக்கும்.
பெண்கள் குதூகலமாக காணப்படுவர். குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். தோழிகள் மிக உறுதுணையாக இருப்பர். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.10-ந் தேதிக்கு பிறகு திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறலாம். கணவரின் அன்பும், குடும்பத்தாரின் அரவணைப்பு உங்களுக்கு கிடைக்கும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். மேல் அதிகாரிகளின் கருணை பார்வை கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். மாதஇறுதியில் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். 6,7-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். விருந்து,விழா என சென்று வருவீர்கள். 15,16-ந் தேதிகளில் பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். சகோதரிகளால் பணஉதவி கிடைக்கும்.
உடல்நலம்; 14-ந் தேதிக்கு பிறகு உடல் ஆரோக்கியம் மேம்படும்.17,18,19-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். 20,21-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். வயிறு தொடர்பான உபாதை வரலாம்.
அதிர்ஷ்டம்: 1,5 அதிர்ஷ்ட எண்களாக அமையும். கறுப்பு, பச்சை ஆகியவை யோகம் தரும் நிறங்கள் ஆகும். 1,2,6,7,12 ,13,14,15,16,22,23,24,25,26,29,30 ஆகிய தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.
வழிபாடு: முருகன் கோவிலுக்குச் சென்று வாருங்கள். கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.துர்க்கை வழிபாடு நடத்துங்கள்.வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வழிபடலாம். தட்சிணாமூர்த்தியை வணங்கினால் உறவினர்கள் வகையில் ஒற்றுமை ஏற்படும். 10-ந் தேதிக்கு பிறகு வெள்ளிக்கிழமை சுக்கிரனுக்கு அர்ச்சனை செய்து வெண்பட்டு சாத்தி வழிபடுங்கள்.

தனுசு
தனுசு ராசி நேயர்களே! இந்த மாதம் குரு4-ந் தேதி வரையும், புதன் 10-ந் தேதி வரையும் 25-ந் தேதிக்கு பிறகும் நற்பலனை கொடுப்பார்கள்.அதோடு சுக்கிரன், செவ்வாய், ராகு மாதம் முழுவதும் நற்பலனை கொடுப்பார்கள். ராகு, செவ்வாயால் உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். பொருளாதார வளம் அதிகரிக்கும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம். சுக்கிரனால் மதிப்பு மரியாதை இருக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏறபடும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும்.
குரு 4-ந் தேதி அதிசாரம் பெற்று3-ம் இடமான கும்ப ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை. அவரால் முயற்சியில் தடை ஏற்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காது. உங்கள் நிலையில் மாற்றம் ஏற்படும். ஆனால் இந்த காலக்கட்டத்தில் அவரது அனைத்து பார்வைகளும் சிறப்பாக அமைந்து உள்ளதால் பணப்புழக்கம் அதிகரிக்கும் தேவைகள் பூர்த்திஆகும். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம்.
தற்போதைய காலம் பொருளாதார-த்திலும் செல்வாக்கிலும் சிறப்பாக இருக்கிறது. புதிய வீடு, வாகனம் வாங்கலாம்.10-ந் தேதிக்கு பிறகு பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். பொருள் வரவு இருக்கும். பக்தி உயர்வு மேம்படும். 25-ந் தேதிக்கு பிறகு குதூகலம் அதிகரிக்கும் நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். கணவன்-மனைவி இடையே இருந்து வந்த பிரச்சினை மறையும். பிரிந்திருந்த குடும்பம் நிரந்தரமாக ஒன்று சேரும்.10, 11-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் வீண் மனக்கிலேசம் வர வாய்ப்பு உண்டு. சற்று ஒதுங்கி இருக்கவும். 27,28-ந் தேதிகளில் விருந்தினர்கள் வருகையும் அவர் களால் நன்மையும் கிடைக்கும்.
உத்தியோகம் போலீஸ் மற்றும் ராணுவத்துறையில் இருப்பவர்கள் மகத்தான முன்னேற்றத்தை காண்பர். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். உங்கள் செல்வாக்கு வளரும். மேல் அதிகாரி-களின் ஆதரவோடு கோரிக்கைகள் நிறைவேறும்.25-ந் தேதிக்கு பிறகு வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவர். 24,25,26-ந் தேதிகளில் சிறப்பான பலனை எதிர்நோக்கலாம். அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும்.
வியாபாரிகள் செழிப்படைவர். தொட்டதெல்லாம் பொன்னாகும் காலமாக அமையும். புதிய வியாபாரம் கைகொடுக்கும். உங்கள் வளர்ச்சியை கண்டு எதிரிகள் கிளர்ச்சி அடையலாம். 10-ந் தேதிக்கு பிறகு ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர்.பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் 14-ந் தேதிக்கு பிறகு மறையும். ஆனால் அதன்பிறகு பகைவர்களின் தொல்லை அதிகரிக்கும். 1,2,6,7,29,30-ந் தேதிகளில் சந்திரனால் இடையூறுகள்வரலாம்.15,16-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். எதிரிகளின் இடையூறை முறியடிக்கும் வல்லமை பெறுவீர்கள்
கலைஞர்களுக்கு சககலைஞர்கள் உதவிகரமாக இருப்பர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழ், பாராட்டு வரும் அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் நல்ல நிலையில் இருப்பர். முக்கிய பொறுப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மாணவர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். நல்ல மதிப்பெண்கள் பெற்று வெற்றிக்கு அஸ்திவாரம் போடலாம்.
விவசாயிகள் முன்னேற்ற பாதையில் செல்வர். நல்ல விளைச்சலும், வருமானமும் கிடைக்கும். புதிய சொத்துகள் வாங்கலாம். சிலர் நவீன விவசாயத்தை கையாள்வர். பக்கத்து நிலகாரர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். ஆடு,கோழி,பசு,கால்நடை வகையில் நல்ல வருமானத்தை பெறுவர்.வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்க வாய்ப்பு உண்டு.
பெண்கள் மாத தொடக்கத்திலும், இறுதியிலும் மிகவும் உற்சாகமாக காணப்படுவர். குடும்பத்தோடு புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர்.சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உண்டு. கோரிக்கைகள் நிறைவேறும்.. 10-ந் தேதிக்கு பிறகு தோழிகளால் நற்சுகம் ஏற்படும். அவர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.பொன் பொருள் சேர்க்கைக்கு குறை இருக்காது. அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர்.பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 25-ந் தேதிக்கு பிறகு திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணம் கைகூடும் அதுவும் நல்ல வரனாக அமையும். கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பை பெறுவர். உங்களால் குடும்பம் சிறப்படையும். வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர்.8,9-ந் தேதிகளில் புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம். 17,18,19 ஆகிய தேதிகளில் சகோதரிகளால் நற்சுகம் ஏற்படும். அவர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
உடல்நலம் திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகள் வகையில் இருந்து வந்த வியாதிகள் பூரண குணம் அடையும். மருத்துவ செலவு வெகுவாக குறையும். 20,21-ந் தேதிகளில் வீண்விவாதங்-களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.12,13,14,22,23-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். வயிறு தொடர்பான உபாதைகள் வரலாம்.
அதிர்ஷ்டம்- 6,8 அதிர்ஷ்ட எண்கள் ஆகும். வெள்ளை,சிவப்பு, நீலம் யோகம் தரும் நிறங்கள். 3,4,5,8,9,15,16,17,18,19, 24,25,26,27,28 ஆகிய தேதிகள் நன்மை தரும் நாட்கள் ஆகும்.
வழிபாடு- விநாயகரை தொடர்ந்து வழிபட்டு வாருங்கள். தினமும் காலையில் சூரியனை வழிபட்டு வாருங்கள். ராகு-கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். மேலும் துர்க்கை வழியாடு உங்கள் நல்வாழ்வுக்கு துணை நிற்கும். ஏழைகளுக்கு கொள்ளு தானம் செய்யலாம். 10-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை புதனுக்கு அர்ச்சனை செய்யுங்கள்.

மகரம்
மகர ராசி நேயர்களே! மாத முற்பகுதியில் அதிக நன்மைகளை எதிர்பார்க்கலாம். சூரியன் 14-ந் தேதி வரையிலும், குரு 4-ந் தேதிக்கு பிறகும், புதன்11-ந் தேதியில் இருந்து 25-ந் தேதி வரையும் நன்மைகளை தருவார்கள். மேலும் கேதுவும்,சுக்கிரனும் மாதம் முழுவதும் நன்மை தருவார்கள். இதனால் இந்த மாதம் ஸ்திரமானதாக அமையும். புதனால் இருந்து வந்த தடைகள் 10-ந் தேதிக்கு பிறகு மறையும்.
குரு 4-ந் தேதி அதிசாரம் பெற்று2-ம் இடமான கும்ப ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம். அவரால் உங்களது ஆற்றல் மேம்படும். இதுவரை இருந்த மந்த நிலை மாறும். துணிச்சல் பிறக்கும். பணவரவு கூடும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்-களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும்.
குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. கணவன்-மனைவி இடையே அன்பு, பாசம் மேலோங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும்.11-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை சுப நிகழ்ச்சிகள் நடக்கலாம். விருந்து விழா என குதூகலம் ஏற்படும். சுக்கிரனால் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உறவினர்களிடம் சுமூக நிலை ஏறபடும். புதிய உறவினர்களால் உதவி கிடைக்கும்.25-ந் தேதிக்கு பிறகு புதன் 5-ம் இடத்திற்கு செல்வதால் சிலர் வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல நேரிடலாம். 1,2,29,30 ஆகிய தேதிகளில் உறவினர்களின் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். 6.7-ந் தேதிகளில் பெண்களால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். 12,13,14-ந் தேதிகளில் பொருள் விரையம் ஏற்படும். வீண் மனக்குழப்பம் வரும்.
உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அரசு வகையில் இருந்து வந்த பிரச்சினை 10-ந் தேதிக்கு பிறகு மறையும். 27,28-ந் தேதிகளில் எதிர்பாராத நன்மைகள் கிடைக்க பெறலாம். 25-ந் தேதிக்கு பிறகு கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும்.மனதில் ஒருவித வெறுப்பு உணர்ச்சிஉருவாகும்.உங்கள் திறமைக்கு ஏற்ற மதிப்பு கிடைக்கும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
வியாபாரிகளுக்கு லாபம் சிறப்பா இருக்கும். புதிய வியாபாரம் ஓரளவே பலனை தரும். பகைவர்கள் வகையில் இருந்து வந்த இடையூறு, அரசு வகையில் இருந்து வந்த அனுகூலமற்ற போக்கு முதலியன 10-ந் தேதிக்கு பிறகு மறையும். 14-ந் தேதிக்கு பிறகு பணப் புழக்கம் சற்று குறையும். பெண்களால் அவப்பெயர் ஏற்பட வாய்ப்பு உண்டு. கவனம் தேவை. 25-ந் தேதிக்கு பிறகு அலைச்சல் அதிகரிக்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் ஏற்படலாம். 3,4,5,8,9-ந் தேதிகளில் சிறுசிறு தடைகள் வரலாம். பண விரயம் ஆகலாம். ஆனால் 17,18,19-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். பகைவர்களை எதிர்த்து வெற்றிக் கொள்ளும் ஆற்றல் இருக்கும்.
கலைஞர்கள் நல்ல புகழையும், செல்வாக்கையும் பெறுவர். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். விருது, பாராட்டு போன்றவை கிடைக்கபெறலாம். அரசியல்வாதிகள் நல்ல பெயரையும் பொருளாதர வளத்தையும் பெறுவர். 15,16-ந் தேதிகளில் மனக்குழப்பம் ஏற்படலாம்.
மாணவர்கள் நல்ல பலனை காணலாம். போட்டிகளில் வெற்றி பெறுவர். காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.
விவசாயிகள் கடுமையாக உழைக்க வேண்டியது இருக்கும். அதற்கேற்ற வரு மானத்தையும் பெறலாம். குறிப்பாக பழ வகைகள் பயறு வகைகள், கீரை போன்றவை மூலம் நல்ல வருவாயை காணலாம். பால் வளம் பெருகும். வழக்கு விவகாரங்கள் சுமாராக இருக்கும். புதிய வழக்குகளில் சிக்க வேண்டாம்.
பெண்கள் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் முக்கிய அம்சமாக திகழ்வர். வேலைக்கு செல்லும் பெண்கள் உயர்ந்த நிலையை அடைவர். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். சுயதொழில் செய்து வரும் பெண்களுக்கு வங்கி கடன் எளிதாக கிடைக்கும். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர்.புதிய பதவி தேடி வரும் . ஏப்ரல் 25-ந் தேதிக்கு பிறகு கணவன்- மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. 10.11-ந் தேதிகயில் புத்தாடை நகைகள் வாங்கலாம். பிறந்த வீட்டில் இருந்து பொருட்கள் கிடைக்கம்.20.21-ந் தேதிகளில் நினைத்ததை நிறைவேற்றி கொள்ளலாம். சகோதரிகள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். விருந்து விழா என சென்று வருவீர்கள்.
உடல்நலம் சுமாராக இருக்கும். பிள்ளைகள் உடல்நலனில் சற்று அக்கறை காட்ட வேண்டும். 22,23-ந் தேதிகளில் வீண்விவாதங்களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும்.24,25,26-ந் தேதிகளில் சற்திரானல் வயிறு தொடர்பான உபாதைகள் வரலாம்
அதிர்ஷ்டம்- 3,7 அதிர்ஷ்ட எண்கள் ஆகும்.பச்சை சிவப்பு,வெள்ளை அதிர்ஷ்ட நிறங்கள்.6,7,10,11,17,18,19, 20,21,27,28,29,30.ஆகிய நாட்கள் நன்மை தரும் நாட்களாக அமையும்.
வழிபாடு- சந்தர்ப்பம் கிடைக்கும் போது நவக்கிரகங்களை சுற்றி வழிபட்டு வாருங்கள். சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்யுங்கள். அன்று காக்கைக்க அன்னமிட்டு உண்ணுங்கள். செவ்வாய்க் கிழமை முருகனை வழிபட்டு துவரை தானம் செய்யலாம்.. இப்படி செய்தால் எதிரிகளின் இடையூறு இருக்கும் இடம் தெரியாமல் போகும்.உடல் நலம் பெறும்.நாக தேவதையை வணங்கி வாருங்கள்.14-ந் úதிக்கு பிறகு சூரிய வழிபாடு நடத்துங்கள்.

      கும்பம்

கும்ப ராசி நேயர்களே! இந்த மாதம் சுக்கிரன் 11-ந் தேதி இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலனை தருவார். இதனால் மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும்.மேலும் சூரியன்15-ந் தேதியும், புதன் 25-ந் தேதியும் சாதகமான இடத்திற்கு வருகிறார்கள். மற்றய கிரகங்கள் முழுமையான பலனை தரும் நிலையில் இல்லை. எனவே தீவிர முயற்சியும், அனுசரணையும் உங்களுக்கு கண்டிப்பாக தேவை.
குரு 4-ந் தேதி அதிசாரம் பெற்று உங்கள் ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை. அவரால் சிற்சிலபிரச்சினை வரலாம். வேலையில் இடமாற்றம் வர வாய்ப்பு உண்டு. மனக்கவலை ஏற்படும். சுறுசுறுப்பு அற்ற நிலை, இருப்பிட மாற்றம் முதலியன ஏற்படலாம். வீண் அலைச்சல் ஏற்படும். அதற்காக கவலை கொள்ள தேவை இல்லை காரணம். குருவின் அனைத்து பார்வைகளும் சிறப்பாக அமைந்து உள்ளதால் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். அதிக அலைச்சலும், பளுவும் உங்களை துரத்தும்.ஆனால் இவை அனைத்தையும் குரு பார்வையால் முறியடித்து மன நிம்மதியை தருவார்.
குடும்பத்தில் குருவின் பார்வையால் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். 10-ந் தேதிக்கு பிறகு பிரிந்த தம்பதியினர் ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். 25-ந் தேதிக்கு பிறகு குடும்பத்தில் குதூகலம் கூடும். 8,9-ந் தேதிகளில் பெண்கள் உதவிகரமாக இருப்பர். அவர்களால் பொருள் வரவு இருக்கும்.3,4,5 ஆகிய தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். ஆனால் 15,16-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் மனக்கசப்பு வரலாம். சற்று ஒதுங்கி இருக்கவும்.
உத்தியோகம் சுக்கிரனால் நல்ல வளர்ச்சியை காண்பர்.அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். அரசு ஊழியர்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு புதனால் ஏற்பட்ட அவப்பெயர், செல்வாக்குக்கு பாதிப்பு, வீண் மனக்கவலை முதலியன 10-ந் தேதிக்கு பிறகு மறையும். அதன்பிறகு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. மேல் அதிகாரிகள் ஆதரவுடன் இருப்பர். சகஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். 1,2,29,30 அகிய தேதிகள் உங்களுக்கு சாதகமாக அமையும். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம்.
வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். 14-ந் தேதிக்கு பிறகு பொருளாதார வளம் கூடும். லாபம் அதிகரிக்கும். பகைவர்கள் வகையில் இருந்து வந்த இடையூறு, அனுகூலமற்ற போக்கு முதலியன மறையும். 6,7,10,11-ந் தேதிகளில் சந்திரனால் சிறுசிறு தடைகள் வரலாம்.பண விரயம் ஆகலாம். 20,21-ந் தேதிகளில் எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க பெறலாம். செல்வாக்கு பாராட்டு வந்து சேரும். பொதுநல சேவகர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். புதிய பொறுப்புகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் பிரதிபலனை எதிர்பாராமல் பாடுபட வேண்டும்.சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகலாம். எனவே யாரிடமும் பார்த்து எச்சரிக்கையுடன் பழகவும்.
மாணவர்கள் பொதுவாக பிற்போக்கான நிலையில் சிக்கி தவிக்கும் மாணவர்களு க்கு இந்த மாதம் 25-ந் தேதிக்கு பிறகு சிறப்பான நிலையை அடைவர். புதனால் பலரின் வெற்றிக்கு உத்தரவாதம் கொடுக்கலாம். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.
விவசாயிகள் விளைச்சல் சுமாராக இருந்தாலும் வருமானம் சீராக இருக்கும். 25-ந் தேதிக்கு பிறகு வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். புதிய சொத்து வாங்க வாய்ப்பு உண்டு. கால்நடை செல்வம் பெருகும். பால்பண்ணை மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.
பெண்கள் திருப்திகரமாக இருப்பர். புதிய உறவுகள் ஏற்படலாம். கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பு கிடைக்கும். குழந்தை பாக்கியம் பெறலாம்.வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். சுயதொழில் செய்து வரும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.. 12,13,14-ந் தேதிகளில் புத்தாடை-அணிகலன்கள் வாங்கலாம்.பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். 22,23-ந் தேதிகளில் சகோதரர்களால் உதவி கிடைக்கும்.பண வரவு இருக்கும். விருந்து விழா என சென்று வருவீர்கள். 25-ந் தேதிக்கு பிறகு. ஆடம்பர பொருட்கள் வாங்கலாம். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர்
உடல்நலம் செவ்வாயால் வயிறு பிரச்சினைவரும். பயணத்தின் போது சற்று கவனம் தேவை. கண் தொடர்பான வியாதியால் அவதிப் பட்டு வந்தவர்கள் 14-ந் தேதிக்கு பிறகு குணம் அடைவர். 24,25,26-ந் தேதிகளில் வீண்விவாதங் -களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். 17,18,19,27,28-ந் தேதிகளில் சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்.
அதிர்ஷ்டம்- 4,7 அதிர்ஷ்ட எண்கள் ஆகும்.வெள்ளை,14-ந் தேதிக்கு பிறகு செந்தூரம்ஆகிய நிறங்கள் நன்மை தரும். 1,2,3,4,5,8,9,12,13,14, 20,21,22,23,29,30 ஆகிய தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.
வழிபாடு: சனிக்கிழமை சனி ஈசுவரனுக்கு அர்ச்சனை செய்து ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்.துர்க்கை வழிபாடு நடத்துங்கள்.நாக தேவதையை வணங்கி வாருங்கள். செவ்வாய்கிழமை முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு சிவப்பு ஆடை தானம் கொடுக்கலாம்.14-ந் தேதி வரை சூரிய வழிபாடு நடத்துங்கள்.

மீனம்
மீன ராசி நேயர்களே! சுக்கிரன், செவ்வாய், சனி, ராகு உங்களுக்கு மாதம் முழுவதும் பக்கபலமாக இருந்து பல்வேறு நன்மைகளை தருவார்கள். தெய்வ அனுகூலம் தொடர்ந்து கிடைக்கும். இதனால் எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி காணலாம். பொருளாதார வளம் மேம்படும். புதிய வீடு-மனை வாகனம் வாங்கலாம்.
குரு 4-ந் தேதி அதிசாரம் பெற்று12-ம் இடமான கும்ப ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை. அவரால் பொருள் நாசம் ஏற்படும். பல்வேறு தொல்லைகள் உருவாகும். மனதில் வருத்தம் உருவாகும். வீண் அலைச்சல் ஏற்படும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும்.பொன்,பொருள் கிடைக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். அவர்களால் பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். 10-ந் தேதிக்கு பிறகு மதிப்பு, மரியாதை கூடும். அரசு வகையில் அனுகூலம் ஏற்படும். வீட்டுக்கு தேவையான சகல வசதிகளும் வந்து சேரும். 10,11-ந் தேதிகளில் சகோதரிகளால் வசதிகள் பெருகும். பணம் கிடைக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள் 6,7-ந் தேதிகளில் உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். அதேநேரம் 17,18,19-ந் தேதிகளில் உறவினர்கள் வகையில் கருத்துவேறுபாடு வரலாம். எனவே அப்போது சற்று விலகி இருக்கவும்.
உத்தியோகம் தனியார் துறையில் வேலைபார்ப்பவர்கள் பொதுவாக சுமாரான பலனையே கண்டு கொண்டிருப்பீர்கள். அரசு ஊழியர்கள் சற்று கவனமுடன் இருக்க வேண்டும். போலீஸ், ராணுவம், காவல்போன்ற பணிகளில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றத்தை காண்பர்.10-ந் தேதிக்கு பிறகு அரசு ஊழியர்கள் முன்னேற்றம் காணலாம். கோரிக்கைகள் நிறைவேறும்.அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும்.3,4,5 ஆகிய தேதிகள் சிறப்பான நாட்களாக அமையும்.
வியாபாரிகள் நல்ல முன்னேற்றம் காண்பர். லாபம் அதிகரிக்கும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை எற்படும். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தை தரும். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 10-ந் தேதிக்கு பிறகு அரசின் சலுகை கிடைக்கும். வங்கி கடன் எளிதாக கிடைக்கும். புதிய வியாபாரம் அனுகூலத்தை தரும். 25-ந் தேதிக்கு பிறகு பகைவர்களால் இடையூறு வரலாம். வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும்.
கலைஞர்கள் நல்ல வளத்தை காண்பர். புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசிடம் இருந்து விருது போன்றவை கிடைக்கும். பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவியை பெறலாம். அரசியல்வாதிகளுக்கு வெற்றி வாய்ப்புகள் பிறகாசமாக உள்ளது. முக்கிய பொறுப்பு கிடைக்கும்.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். கடும் உழைப்புக்கு ஏற்ற பலன் அடுத்த கல்வி ஆண்டில் கிடைக்கும். 10-ந் தேததி முதல் 25-ந் தேதி வரை வீண் விவாதத்தை குறைத்து கொள்வது நல்லது.
விவசாயிகள் நல்ல விளைச்சலை பெற்று வருவாயை காண்பர்.ஆடு,கோழி வகையில் நல்ல வருமானத்தை பெறுவர். புதிய சொத்துகள் வாங்கலாம். பக்கத்து நிலகாரர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். வழக்கு, விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். இழந்த சொத்தை மீண்டும் பெறலாம்.
பெண்களுக்கு புதனால் வீட்டினுள் இருந்த பிரச்சனை,உறவினர்கள் வகையில் மனக்கிலேசம், பொருள் இழப்பு முதலியன 10-ந் தேதிக்கு பிறகு மறையும். அதன்பிறகு மனநிம்மதியுடன் காணப்படுவர். குடும்பத்தோடு புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர்.புதிய பதவி தேடி வரும். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். 10,11-ந் தேதிகளில் புத்தாடை-அணிகலன்கள் வாங்கலாம்.பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். 24,25,26-ந் தேதிகளில் விருந்து விழா என சென்று வருவீர்கள். சகோதரர்களால் பணஉதவி கிடைக்கும்.
உடல்நலம் சூரியனால் ஏற்பட்ட அவப்பெயர்,அலைச்சல், சோர்வு வயிறு தொடர்பான உபாதைகள் முதலியன 14-ந் தேதிக்கு பிறகு இருக்காது. ஆனால் அதன்பிறகு அவரால் கண் தொடர்பான உபாதைகள் வரலாம்.20,21-ந் தேதிகளில் சிலர் மன உழைச்சலுடன் காணப்படுவர். 27,28-ந் தேதிகளில் வீண்விவாதங்-களை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். 1,2,29,30-ந் தேதிகளில் வயிறு தொடர்பான சிறுசிறு உபாதைகள் வரலாம்.
அதிர்ஷ்டம்-1,7 அதிர்ஷ்ட எண்கள். சிவப்பு, நீலம் உங்களுக்கு உகந்த நிறங்கள்.3,4,5,6,7,10,11,15,16,22,23, 24,25,26,ஆகிய தேதிகள் சிறப்பான நாட்கள்.
வழிபாடு- கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நடத்துங்கள். வியாழக்கிழமை தெட்சணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். அப்போது கொண்டை கடலை தானம் செய்யலாம்.தினமும் காலையில் எழுந்து சூரிய தரிசனம் செய்யுங்கள் மேலும் புதன் கிழமை குல தெய்வத்தை வழிபட்டு ஏழைகளுக்கு பாசி பயறு தானம் செய்யலாம்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.