May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ-.2 ஆயிரம்; பிரியங்கா வாக்குறுதி

1 min read

Rs.2 thousand per month for family heads; Priyanka promises

2.3.2021
அசாம் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்த பிரியங்காகாந்தி குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்குவோம் என்று பிரியங்கா காந்தி வாக்குறுதி அளித்தார்.

அசாம் தேர்தல்

அசாம் சட்டசபைக்கு 3 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதன்படி, வருகிற 27ந்தேதி 12 மாவட்டங்களில் உள்ள 47 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் நடைபெறும்.

இதனையடுத்து ஏப்ரல் 1ந்தேதி 13 மாவட்டங்களில் உள்ள 39 தொகுதிகளுக்கு 2வது கட்ட தேர்தல் நடைபெறும். தொடர்ந்து ஏப்ரல் 6ந்தேதி 12 மாவட்டங்களில் உள்ள 40 தொகுதிகளுக்கு 3வது கட்ட தேர்தல் நடைபெறும்.

தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளரான பிரியங்கா காந்தி அசாமின் தேஜ்பூரில் இன்று ( செவ்வாய்க்கிழமை) பிரசாரம் செய்தார்.

அவர் பேசும்போது கூறியதாவது:&
எங்களுடைய கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு எப்பொழுது வருகிறதோ, குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது என்று உறுதி செய்வதற்காக சட்டம் ஒன்று இயற்றப்படும். ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்.
கிரஹனி சம்மான் என்ற திட்டத்தின் பெயரால், குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்குவோம். தேயிலை தோட்டங்களில் பணி செய்யும் பெண்களுக்கு நாளன்றுக்கு ரூ.365 வழங்கப்படும்.
நாங்கள் 5 லட்சம் புதிய அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம். இவையெல்லாம் வாக்குறுதிகள் அல்ல. உத்தரவாதம்.
இவ்வாறு பிரியங்கா காந்தி பேசினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.