May 4, 2024

Seithi Saral

Tamil News Channel

கள்ளச் சாராயத்துக்கு 19 பேர் பலியான சம்பவத்தில் 9 பேருக்கு தூக்கு தண்டனை

1 min read

Nine sentenced to death for killing 19 in counterfeit liquor

6.3.2021

பீகாரில் கள்ளச் சாராயம் குடித்து 19 பேர் உயிரிழந்த வழக்கில் குற்றவாளிகள் 9 பேருக்கு தூக்குத் தண்டனையும் 4 பெண்களுக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டு உள்ளது.

கள்ளச்சாரயம்

பீகார் மாநிலத்தில் கடந்த 2016ம் ஆண்டு கள்ளச் சாராயம் குடித்து 19 பேர் உயிரிழந்தனர். இது தொடரபாக போலீசார் 4 பெண்கள் உள்பட 14 பேரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோபால்கஞ்ச் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடிபெற்று வந்தது.

இந்த வழக்கில் நீதிபதி லவகுச குமார் தீர்ப்பளித்தார். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்கு தூக்குத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் 4 பெண்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி லவகுச குமார் தீர்ப்பளித்துள்ளார். ஒருவர் காலமாகி விட்டார்.

மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை எதிர்த்து ஐகோர்ட்டில் முறையீடு செய்ய உள்ளதாக குற்றவாளிகள் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.