தமிழகத்தில் 1,289- பேருக்கு கொரோனா; நெல்லை, தென்காசியிலும் அதிகரிப்பு
1 min readCorona for 1,289 people in Tamil Nadu; Increase in paddy and tenkasi
21/3/2021
தமிழகத்தில் இன்று 1,289- பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. நெல்லை, தென்காசியிலும் பாதிப்பு சற்று அதிகரித்து உள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. 3வது நாளாக கொரோனா பதிவு ஆயிரமாக பதிவாகி உள்ளது.
இன்றைய கொரோனா நிலவரம் பற்றி தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:
தமிழகத்தில் இன்று ( ஞாயிற்றுக்கிழமை) ஒரே நாளில் 1,289- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தாக்கியவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 66 ஆயிரத்து 982- ஆக உயர்ந்துள்ளது.
இன்று கொரோனா கண்டறியப்பட்டவர்களில், 748 பேர் ஆண்கள், 541 பேர் பெண்கள். இதுவரை கொரோனா பாதித்த மொத்த ஆண்களின் எண்ணிக்கை 5,23,650 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,43,297 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 35 ஆகவும் உயர்ந்து உள்ளது.
தமிழகத்தில் உள்ள 259 ஆய்வகங்கள் மூலமாக, இன்று மட்டும் 75,258 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இவைகளுடன் சேர்த்து, இதுவரை ஒரு கோடியே 87 லட்சத்து 81 ஆயிரத்து 109 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.
9 பேர் சாவு
தமிழகத்தில் இன்று மட்டும் 668 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இவர்களையும் சேர்த்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 46 ஆயிரத்து 480 ஆக உயர்ந்து உள்ளது.
கொரோனா தாக்கியவர்களில் இன்று மட்டும் 9 பேர் இறந்துள்ளனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், நெல்லை, நாகப்பட்டினம், தஞ்சை, புதுகோட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் வீதம் இறந்துள்ளனர். இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,599 ஆக அதிகரித்துள்ளது. தமிழக்தில் தற்போது கொரோனாவுக்கு 7,903 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
நெல்லை
சென்னையில் இன்று மட்டும் 466-பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 138 பேருக்கும், கோவையில் 109 பேருக்கும், தஞ்சையில் 73 பேருக்கும், திருவள்ளூரில்72 பேருக்கும், நெல்லையில் 18 பேருக்கும், தென்காசியில் 15 பேருக்கும், துத்துக்குடியில் 6பேருக்கும் இன்று கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.