நடிகர் கருணாஸ் கைது; வீட்டுகாவலில் வைப்பு
1 min readActor Karunas arrested; Deposit under house arrest
25.3.2021
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவரும் நடிகருமான கருணாஸ் போலீசாரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.
நடிகர் கருணாஸ்
நடிகர் கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை என்ற கட்சியை தொடங்கி நடத்துகிறார். அவர் கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்தார். ஆனால் இப்போது அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய கருணாஸ், கடந்த 10ந் தேதி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்.
ஆனால், கருணாசுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்துவதற்கோ, தொகுதிகள் ஒதுக்குவதற்கோ முன்வரவில்லை. அதைத் தொடர்ந்து திமுகவுக்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக மறுநாள் அறிவித்தார்.
மேலும் சட்டபைதேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை போட்டியிடவில்லை என்றும் அதன்பின்னர் அறிவித்தார். இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் முதல்-அமைச்சருக்கு கறுப்புக்கொடி காட்ட திட்டமிட்டிருந்ததாகக் கூறி தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் போலீசார் அவரை கைது செய்தனர். அவரை போலீஸ் நிலையம் அழைத்துச் செல்லாமல் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்.