May 8, 2024

Seithi Saral

Tamil News Channel

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,971 பேருக்கு கொரோனா; தென்காசியில் ஒருவர் பலி

1 min read

Corona for 1,971 people in a single day in Tamil Nadu today; One killed in Tenkasi

26.3.2021
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,971 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தென்காசியில் ஒருவர் உள்பட 9 பேர் இறந்துள்ளனர்.

தமிழக்தில் கொரோனா

தமிழகத்தில் சமீப நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு நேற்றைய எண்ணிக்கையை காட்டிலும் இன்று உயர்ந்துள்ளது. இதுபற்றி தமிழக சுகாதார துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,971 பேருக்கு (நேற்று 1,779 பேர்) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 1,195 பேர் குணமடைந்து உள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 51 ஆயிரத்து 286 ஆக உயர்வடைந்து உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,650 ஆக உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தென்காசியில்…

இன்று சென்னையில் 739, செங்கல்பட்டு 205, கோவை 173, தஞ்சை 111, திருவள்ளூர் 107, தென்காசி 6, திருநெல்வேலி 18, தூத்துக்குடி 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 3 பேரும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, மதுரை, தஞ்சை, தென்கசி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவம் நேற்று கொரோனாவுக்கு இறந்தனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.