May 8, 2024

Seithi Saral

Tamil News Channel

அசாம், மேற்கு வங்காளத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு

1 min read

Preliminary polling in Assam, West Bengal

27.3.2021
அசாம், மேற்குவங்காள சட்டசபை தேர்லுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது.

அசாம்

அசாமில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்காளத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் அசாம் மற்றும் மேற்கு வங்கத்தில் 77 தொகுதிகளில் முதற்கட்ட ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி 6 மணிக்கு முடிந்தது. அசாமில் 47 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிந்தது.

இன்று மேற்கு வங்காளத்தில் 30 தொகுதிகளில் நடந்த தேர்தலில் 191 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அசாமில் 47 தொகுதிகளில் 264 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அசாம் முதல்வர் சர்வானந்த சோனா வால், மாநில காங்கிரஸ் தலைவர் ரூபன் போரா, அசாம் கனபரிஷத் தலைவர் அதுல் போரா, செயல்தலைவர் கேஷவ் மகந்தா ஆகிய முக்கிய தலைவர்கள் முதல் கட்ட தேர்தலில் போட்டியிட்டிருந்தனர். கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வாக்காளர்கள் முகக் கவசம் அணிந்தே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

கிருமி நாசினி வழங்கல், உடல் வெப்ப பரிசோதனை, சமூக இடைவெளி போன்ற கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்கு பின்னரே வாக்குச்சாவடிக்கு அனுமதிக்கப்பட்டனர்.
ஓட்டுப்பதிவு இரு மாநிலங்களிலும் மாலை 6 மணியுடன் நிறைவு பெற்ற நிலையில், அசாம் மாநிலத்தில் 72.14 சதவீதமும், மற்றும் மேற்கு வங்காளத்தில் 79,79 சதவீதமும் ஓட்டு பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.