நாளை முதல் 10-ந் தேதி வரை தேர்தல் பத்திரங்கள் விற்பனை மத்திய அரசு அறிவிப்பு
1 min readFederal Government announces sale of election papers from tomorrow till 10th
31.3.2021
அரசியல் கட்சிகள் நிதி திரட்டுவதை முறைப்படுத்தும் திட்டமான தேர்தல் பத்திர திட்டம் ஒவ்வொரு காலாண்டின் தொடக்கத்திலும் 10 நாட்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறது. தற்போது 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதால் தேர்தலுக்கு முந்தைய இந்த காலாண்டில் பத்திரங்கள் விற்பனை செய்வது முறைகேட்டுக்கு வழிவகுக்கும் என கூறி அதன் விற்பனைக்கு தடை கேட்டு தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து தேர்தல் பத்திர விற்பனை தொடர்பான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதன்படி நாளை (வியாழக்கிழமை) முதல் 10-ந் தேதி வரை பாரத ஸ்டேட் வங்கியின் 29 கிளைகளில் இந்த பத்திரங்களை வாங்கிக்கொள்ளலாம்.
தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு சென்னை பாரிமுனை தம்புச்செட்டி தெருவில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் தலைமைக்கிளை ஒதுக்கப்பட்டு இருக்கிறது. பத்திரங்கள் வாங்கிய தினத்தில் இருந்து 15 நாட்களுக்குள் குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் வங்கி கணக்கில் அவை டெபாசிட் செய்யப்பட வேண்டும் என நிதியமைச்சகம் அறிவித்து உள்ளது. கடந்த பொதுத்தேர்தலில் குறைந்தது ஒரு சதவீத வாக்குகளைப் பெற்ற கட்சிகள் மட்டுமே தேர்தல் பத்திரங்களை பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.