May 14, 2024

Seithi Saral

Tamil News Channel

நெல்லை மாவட்டத்தில் ஒரே நாளில் 78 பேருக்கு தொற்று

1 min read

In Nellai district, 78 people were infected in a single day

2.4.2021

நெல்லை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது. கடந்த மாதம் தொடக்கம் வரை ஒற்றை இலக்கத்தில் இருந்த தொற்று எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து நேற்று புதிதாக 60 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர்.
இந்நிலையில் இன்று(வியாழக்கிழமை) 1,407 பேருக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டது. இதில் 78 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மாநகர பகுதியில் 37 பேரும், மானூரில் 17 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் நெல்லை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வரும் 27 வயது டாக்டர், பாளையை சேர்ந்த 71 வயது மருத்துவரும் அடங்குவர்.
கங்கைகொண்டான் சிப்காட்டில் பணியாற்றும் 14 ஊழியர்களுக்கும், நாங்குநேரியில் ஒரே தெருவில் 5 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் வசித்து வந்த பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுகாதார பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் மொத்த பாதிப்பு 16,211 ஆக அதிகரித்துள்ளது. நேற்று வரை மாவட்டம் முழுவதும் 15,703 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 233 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று வரை கொரோனாவுக்கு 216 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.