கணவருக்கு கொரோனா என்பதால் பிரியங்கா காந்தியின் தமிழக பிரசாரம் ரத்து
1 min readPriyanka Gandhi’s Tamil Nadu campaign canceled due to corona for her husband
2.4.2021
காங்கிரஸ் பொது செயலர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வாத்ராவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பிரியங்கா தனிமைபடுத்தி கொண்டார். இதன் காரணமாக அவரின் தமிழக பிரசாரம் ரத்து செய்யப்பட்டது.
பிரியங்கா
தமிழகத்தில் பிரதமர் மோடி, ராகுல்காந்தி ஆகியோர் தேர்தல் பிரசாரம் செய்துவிட்டனர். அதேபோல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் நாளை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரம் செய்வதாக இருந்தது-. அதோது அவரது தந்தை ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு செல்வதாகவும் இருந்தார்.
இந்த நிலையில் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வாத்ராவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, பிரியங்காவும் கொரோனா பரிசோதனை செய்தார். அதில், அவருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்தது. ஆனாலும் டாக்டர்களின் அறிவுரைபடி அவர் தன்னை தனிமைபடுத்தி கொண்டார். இதனால், அவரின் தமிழக பிரசாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.